செய்திகள் :

``நிதிஷ் கட்சி 25 இடங்களுக்கு மேல் வென்றுவிட்டால் நான் அரசியலை விட்டே போகிறேன்" - பிரசாந்த் கிஷோர்

post image

பீகார் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுகள் (முதற்கட்டம் நவ., 6, இரண்டாம் கட்டம் நவ., 11) முடிந்துவிட்ட நிலையில் நாளை காலை வாக்கு எண்ணிக்கைத் தொடங்கவிருக்கிறது.

243 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட பீகாரில் ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ.க-வும், ஐக்கிய ஜனதா தளமும் தலா 101 இடங்களிலும், மறுமுனையில் மகாபந்தன் கூட்டணியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 143 இடங்களிலும், காங்கிரஸ் 61 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார்
பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

இந்த இரு கூட்டணிக்கு மத்தியில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 238 இடங்களில் தனித்துக் களமிறங்கியிருக்கிறது.

இவ்வாறிருக்க, தேசிய ஜனநாயகக் கூட்டணி சுமார் 140 இடங்களுடன் ஆட்சியமைக்கும் என்றும், மகாபந்தன் கூட்டணி சுமார் 90 இடங்கள் பெரும் என்றும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருக்கின்றன.

மேலும், தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று களமிறங்கிய ஜன் சுராஜ் கட்சி ஓரிரு இடங்களில் வெல்லக்கூடும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருக்கின்றன.

இந்த நிலையில், ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வென்றுவிட்டால் அரசியலை விட்டே விலகுவதாக ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருக்கிறார்.

நியூஸ் 18 (இந்தி) ஊடகத்துடனான நேர்காணலில், கருத்துக்கணிப்பு முடிவுள் பற்றி பிரசாந்த் கிஷோரிடம் நெறியாளர் கேள்வியெழுப்பினார்.

ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர்
ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர்

அதற்கு பிரசாந்த் கிஷோர், ``தேர்தல் முடிவுகளில் ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வென்றிருந்தால் என்னிடம் வந்து கூறுங்கள். அதேபோல், ஜன் சுராஜ் வெற்றி பெற்றிருந்தாலும் என்னிடம் கூறுங்கள். இது நடக்கவில்லையென்றால் அரசியலை விட்டே நான் விளக்குவேன்.

இது எப்படி நடக்கும் என்று நீங்கள் கேட்கிறீர்கள். ஆனால், நான் உறுதியாகச் சொல்கிறேன் 25 இடங்களுக்கு மேல் ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெறாது.

இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இதில் விளக்குவதற்கு ஒன்றுமில்லை. இதுவொரு சாவல், இந்தத் தேர்தலோடு ஐக்கிய ஜனதா தளம் முடிந்துவிட்டது என்றுதான் பார்க்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

நீதிபதி கவாய்க்கு எதிராக அமெரிக்கா வாழ் இந்துக்கள் போராட்டம் - காரணம் என்ன?

அமெரிக்காவில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர். கவாய் சமீபத்தில் கூறிய கருத்துக்களுக்கு எதிராக நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் இந்... மேலும் பார்க்க

'பிச்சையா எடுக்க முடியும்.. இன்னும் பல தொழில் தொடங்குவேன்' - அண்ணாமலை பரபரப்பு விளக்கம்

கோவையில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தென்னிந்திய இயற்கை விவசாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 19-ம் தேதி ... மேலும் பார்க்க

DMK 75: 'இந்த உரையாடல் அவசியமானது!' அறிவுத் திருவிழா ஒரு விரிவான பார்வை

'கதை கேளு... கதை கேளு... ஒரு கதை சொல்றோம் கேளு!' என பறையடித்தபடி ஒரு கருஞ்சட்டை குழு மேடையேறுகிறது. சிவப்புத் துண்டை தோளில் போர்த்திய ஒரு பெண்மணி, 'கட்சின்னா என்னன்னு தெரியுமா?' எனக் கேட்கிறார். காவி ... மேலும் பார்க்க

'என்னை தாக்க முயன்ற முக்கிய குற்றவாளியை பனையூரில் பதுக்கி வைத்துள்ளார்கள' -எம்.எல்.ஏ., அருள் பேட்டி

பாமக சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி A ஃபார்ம், B ஃபார்ம் கையெழுத்திடுவது நான்தான் என்று... மேலும் பார்க்க

வந்தே மாதரம் 150 : அரிச்சல்முனையில் NCC மாணவர்கள், ராணுவ வீரர்களுடன் தேசியக்கொடி ஏந்தி மரியாதை!

வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மா... மேலும் பார்க்க

தமிழிசை: "விஜய்க்கு இந்த புத்தகத்தை அனுப்பியிருக்கிறேன்" - SIR விவகராத்தில் விளக்கம்

முன்னாள் ஆளுநரும் தமிழக பா.ஜ.க -வின் முன்னாள் தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று (நவ. 13) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது SIR நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குரலெழுப்புவது தேவையற்றது என்ற... மேலும் பார்க்க