செய்திகள் :

BB Tamil 9: "கண்ணு முன்னாடி நடக்கும்போது குமட்டிட்டு வரும்" - மனம் திறக்கும் பிக் பாஸ் பிரவீன்

post image

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து பிரவீன் ராஜ் எலிமினேட் ஆனது பிக்பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்திருந்தது.

வெளியேறும்போது அவர் கண்ணீர் விட்டு கதறியது பிக்பாஸ் வீட்டாரையும் கண்கலங்க வைத்திருந்தது. பெரிதாக சர்ச்சைகளில் சிக்காமல், வீண் கூச்சல் இல்லாமல் விளையாண்ட பிரவீன் வெளியேற்றப்பட்டிருப்பது, 'பிக்பாஸில் என்ன செய்தால்தான் சர்வைவ் ஆக முடியும்' என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

பிக்பாஸ் பிரவீன் நேர்காணல்
பிக்பாஸ் பிரவீன் நேர்காணல்

பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்பு சென்ற இடங்களில் எல்லாம் பிரவீனுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பும், அன்பும் கிடைத்து அடையாளம் பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் 'டெலி விகடன்' சேனலுக்கு பிரவீன் அளித்திருக்கும் நேர்காணலில் 'பிக்பாஸில் என்ன செய்தால்தான் சர்வைவ் ஆக முடியும்' என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த பிரவீன், "எனக்கும் அந்தக் கேள்விதான் மண்டையில ஓடிக்கிட்டே இருக்கு. பிக்பாஸ், 'திறமையும் டாஸ்க்கும் இந்த வீட்டின் ஒரு அங்கம்தான். அதைவிடவும் உங்கள் கருத்துகளைச் சுதந்திரமாக முன்வைக்க வேண்டியது முக்கியம்' என்பார்.

ஆனால், என்ன பண்ணாதான் பிக்பாஸில் வீட்டில் இருக்க முடியும் என்பது தெரியவில்லை. சண்டை, சர்ச்சை, திறமை என எல்லாம் கலந்த கலவையாகத்தான் இருக்க வேண்டும். பாரு, விக்கல்ஸ் விக்ரம், சுபிக்ஷா என இந்த மூன்று பேரின் கலவையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

பிக்பாஸில் நிறைய குரூப்பிஸம் இருக்கும். நானும் ஒரு குரூப்பில் சிக்கிக் கொண்டேன். ஆனால், சீக்கிரமே அதை உணர்ந்து தனியாக விளையாட ஆரம்பித்துவிட்டேன்.

நான் வெளியேறியதற்குக் காரணம் யாருமில்லை. என்னுடைய தன்னம்பிக்கை குறைவாக இருந்ததுதான் காரணம்" என்று பேசியிருக்கிறார்.

அடல்ட் டாபிக் குறித்து கேட்டதற்கு, "எங்க முன்னாடியே அது நடந்திருக்கு. அதெல்லாம் நேர்ல பார்க்கும்போது குமட்டிட்டு வரும். நாங்களே கூப்டு இதெல்லாம் பண்ணாதீங்கனு சொல்லிருக்கோம். சொன்ன பிறகு எங்க முன்னாடி அப்படி நடந்தது இல்ல. ஆனா அதெல்லாம் சிலர் கண்டெண்ட்டுக்காகத்தான் பண்ணாங்க" என்றவர் இன்னும் பல விஷயங்கள் குறித்துப் பேசியிருக்கிறார்.

வீடியோவைக் காண:

Prankல தான் எல்லாருடைய உண்மை முகம் தெரிஞ்சது..! - Biggboss Praveen Raj Dev Shares | Serial | Cinema

நாலு வருஷமா வள்ளியூர் கோர்ட்டுல ஆஜராகிட்டு வர்றேன்; ஆனா...! - பிக் பாஸ் தினேஷ்

பிக் பாஸ் தினேஷ் கைது செய்யப்பட்டதாகப் பரவிய செய்தியை மறுத்துள்ளார் அவர்.தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கி மோசடி செய்ததாக திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த கருணாந... மேலும் பார்க்க

BB Tamil 9: ரேங்கிங் டாஸ்க்; சிறைக்குச் செல்லும் FJ, பார்வதி, திவாகர்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 5 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 7 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் துஷாரும், பிரவீன் ராஜூம் வெளியேறி இருக்... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 38: ராஜா - ராணி டாஸ்க் சொதப்பல்; திவாகரை பங்கம் செய்த வினோத்!

ராஜா - ராணி டாஸ்க் இரண்டாவது நாளிலும் சொதப்பல்தான். திவாகரை பங்கம் செய்து வினோத் சொல்லும் கமெண்ட்டுகள் மட்டுமே சற்றாவது கலகலப்பை ஏற்படுத்துகின்றன.பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 38‘பொன்னிநதி ப... மேலும் பார்க்க

BB Tamil 9: ``நெருக்கமானவர்கள மட்டும் முதல் 5 இடத்துல வச்சுருக்காங்க'' - திவாகர் காட்டம்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 5 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 7 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் துஷாரும், பிரவீன் ராஜூம் வெளியேறி இருக்... மேலும் பார்க்க

BB Tamil 9: யாருக்கு எவ்வளவு சம்பளம்?- அதிக சம்பளம் இவருக்கா?!

விஜய் டிவியில் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 9 விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது.இருபது பேருடன் தொடங்கிய சீசனில் தற்போது நந்தினி, பிரவீன் காந்த், அப்சரா, ஆதிரை, துஷார், பிரவீன்... மேலும் பார்க்க