செய்திகள் :

நீலகிரி: கம்பியில் சிக்கி உயிருக்கு போராடிய பெண் சிறுத்தை - போராடி மீட்ட வனத்துறை

post image

நீலகிரியில் அதிகரித்து வரும் காடழிப்பு காரணமாக வனத்தை விட்டு வெளியேறும் வனவிலங்குகள் தேயிலை தோட்டங்களில் தஞ்சமடைந்து வருகின்றன. தடுப்பு வேலிகள், சுருக்கு கம்பிகள், மின் வேலிகள் போன்றவற்றில் சிக்கி வனவிலங்குகள் உயிரிழந்து வருகின்றன‌.

வேலியில் சிக்கிய சிறுத்தை

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் இன்று காலை 7 மணியளவில் சிறுத்தையின் பயங்கர உறுமல் சத்தம் கேட்டிருக்கிறது. அருகில் சென்று பார்த்த உள்ளூர் மக்கள், வேலி கம்பியில் சிறுத்தையின் கால்கள் சிக்கியிருப்பதைக் கண்டு உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

சம்பவ இடத்திற்கு சென்று பார்த்து உறுதி செய்த வனத்துறையினர் சிறுத்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வலியால் துடித்த அந்த சிறுத்தை மிகவும் ஆக்ரோஷமாக சீறியதால் மயக்க ஊசி செலுத்தி மீட்கும் முடிவை எடுத்திருக்கிறார்கள்.

வேலியில் சிக்கிய சிறுத்தை

வனவிலங்குகளுக்கான சிறப்பு கால்நடை மருத்துவர் உதவியை நாடிய வனத்துறையினர், முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து மருத்துவரை வரவழைத்து சிறுத்தையை மீட்கும் பணியில் இறங்கியுள்ளனர். மதியம் ஒரு மணியளவில் அந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி சாந்தப்படுத்தியுள்ளனர். வேலிக் கம்பியில் இருந்து சிறுத்தையை பத்திரமாக மீட்டு கூண்டு மூலம் முதுமலைக்கு கொண்டுச் சென்றுள்ளனர்.

சிறுத்தை மீட்பு பின்னணி குறித்து வனத்துறையினர், " பந்தலூர் வனச்சரக எல்லைக்குட்பட்ட பாறைக்கல் சாலை அருகில் ராஜலிங்கம் என்பவரின் பட்டா நிலம் இருக்கிறது. அங்குள்ள கம்பி வேலியில் சிக்கிய‌ சிறுத்தை மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.

மீட்பு பணிகள்

வனத்துறை குழுவினர் மற்றும் வன கால்நடை மருத்துவர் உதவியுடன் சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது. சுமார் 2 வயதுடைய பெண் சிறுத்தை நல்ல உடல்நலனுடன் இருக்கிறது. மீண்டும் வனப்பகுதிக்குள் விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் " என்றனர்.

ஊட்டி: டாஸ்மாக் பாராக மாறிய நீர்நிலை - வனவிலங்குகள் பாதிப்பு; வனத்துறை, வருவாய்த்துறை அலட்சியம்!

நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது காட்டேரி அணை. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த அணையிலிருந்து அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலைக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு ... மேலும் பார்க்க

1 லட்சம் சிலந்திகளுடன் உலகின் மிகப்பெரிய சிலந்தி வலை கண்டுபிடிப்பு - எங்கே தெரியுமா?

ருமேனிய விஞ்ஞானிகள் உலகின் மிகப்பெரிய சிலந்தி வலையைக் கண்டுபிடித்துள்ளனர். கிரீஸ்-அல்பேனியா எல்லையில் அமைந்துள்ள ஒரு பிரம்மாண்ட குகைக்குள், சுமார் 1 லட்சத்து 11 ஆயிரம் சிலந்திகள் ஒன்றாக வசிக்கும் இந்த... மேலும் பார்க்க

நுரையீரல் இல்லாமலும் சுவாசிக்கும் தவளைகள் - சுவாரஸ்யத் தகவல்கள்

தவளைகள், நிலத்திலும் நீரிலும் வாழக்கூடிய உயிரினம் என்று பலருக்கும் தெரியும். அவை நுரையீரல்கள் இல்லாமலேயே தங்கள் தோல் மூலம் சுவாசிக்கும் திறன் கொண்டது என்பது பலருக்கும் தெரியாது. இதுகுறித்து விரிவாக தெ... மேலும் பார்க்க

தென்காசி: யானை - மனித மோதல்களைத் தடுக்க பூர்வீகத் தாவரங்கள் நடவு; வனத்துறை திட்டத்தின் பின்னணி என்ன?

தென்காசி மாவட்டத்தில், சமீபகாலமாக மனித-யானை மோதல் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. உணவுத் தேவைக்காக யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவது, இங்குள்ள விளை நிலங்களைச் சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து ... மேலும் பார்க்க

சீனாவில் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை முட்டையிடும் பாறை; அறிவியல் சொல்லும் ரகசியம் இதுதான்

சீனாவின் குயிசூ மாகாணத்தில் உள்ள ஒரு மலைப்பாறை, சுமார் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை முட்டை வடிவிலான பெரிய கற்களை வெளியிடுவதாக டைம்ஸ் ஆப் இந்தியா வலைதளத்தில் கூறப்பட்டுள்ளது.இந்த விசித்திரமான நிகழ்வு விஞ்ஞா... மேலும் பார்க்க

சென்னை: கேப்டன் காட்டன் கால்வாய் தூர்வாரும் பணி; ஆகாயத்தாமரை அகற்றும் ஊழியர்கள் | Photo Album

கொடுங்கையூர் கேப்டன் காட்டன் கால்வாயில் ஆகாயத்தாமரை அகற்றும் பணிகொடுங்கையூர் கேப்டன் காட்டன் கால்வாயில் ஆகாயத்தாமரை அகற்றும் பணிகொடுங்கையூர் கேப்டன் காட்டன் கால்வாயில் ஆகாயத்தாமரை அகற்றும் பணிகொடுங்கை... மேலும் பார்க்க