செய்திகள் :

'பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட், மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் காத்திருக்கிறதா?'|மத்திய பட்ஜெட் 2026

post image

2026-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட் நெருங்கிவிட்டது.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில், ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அறிவித்தது மைல்ஸ்டோன் அறிவிப்பாக இருந்தது.

இந்த ஆண்டின் வருமான வரி சம்பந்தமாக என்னென்ன அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என்று ஆடிட்டர் கோபால கிருஷ்ண ராஜு விளக்குகிறார்...

"இதுவரை 1961-ம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தின் திருத்தங்களைத் தான் மத்திய பட்ஜெட்டில் பார்த்து வந்தோம்.

கடந்த ஆண்டு, புதிய வருமான வரிச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அது வருகிற ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.

அதனால், அந்தச் சட்டத்தின் அடிப்படையில், இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகும். அதனால், இந்த ஆண்டு பட்ஜெட் ஸ்பெஷலானது.

ஆடிட்டர் கோபால கிருஷ்ண ராஜு
ஆடிட்டர் கோபால கிருஷ்ண ராஜு

இனி 'ஓகே' கொடுத்தால் போதும்!

இந்த ஆண்டு ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாக உள்ளது. வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யும்போது, இதுவரை நாம் வருமானம் சம்பந்தமான தகவல்களை நிரப்பி வருவோம்.

ஆனால், இனி அரசிடம் இருக்கும் தரவுகளை வைத்து, ஏற்கெனவே அந்தப் படிவம் நிரப்பப்பட்டிருக்கும். அதை செக் செய்து 'ஓகே' கொடுத்தால் மட்டும் போதும். உங்களது வருமான வரிக் கணக்கு ஈசியாக தாக்கல் ஆகிவிடும்.

இது குறித்து, கடந்த இரண்டு - மூன்று ஆண்டுகளாகவே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி வந்தார். ஆனால், இது இந்த ஆண்டு அமலுக்கு வருகிறது.

வீட்டுக் கடனில் சலுகை

இந்த ஆண்டு வருமானம் மற்றும் பென்சன்களில் Standard deduction அறிவிப்பு வரும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.

தற்போது ரியல் எஸ்டேட் கொஞ்சம் தோய்வில் இருக்கிறது. அதை பூஸ்ட் செய்யும் வகையில் இந்தப் பட்ஜெட்டில் சலுகைகள் இருக்கும். வீட்டுக் கடன் வட்டியில் சலுகைகள் இருக்கலாம்.

ரியல் எஸ்டேட் |Real Estate
ரியல் எஸ்டேட்

இந்தப் பட்ஜெட்டில் விவசாயத்திற்கு மிக முக்கியமான அறிவிப்புகள் வெளிவரலாம். மத்திய அரசு இளைஞர்களை தகவல் தொழில்நுட்பத்தைத் தாண்டி, விவசாய தொழில்நுட்பத்திற்கு அழைக்கலாம்.

இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக 60 வயது மேற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது... இனியும் அதிகரிக்கும். அதனால், அவர்களுக்கு ஏற்ற முதலீட்டுச் சலுகைகள்... தள்ளுபடிகள் மருத்துவம் மற்றும் மருத்துவக் காப்பீட்டுச் சலுகைகள் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

இந்த ஆண்டு வருமான வரி ஸ்லாப்கள் கூட அதிகரிக்கப்படலாம்". என்றார்.

பழனி முருகன் கோயிலில் ஒலித்த 'உங்க விஜய்' பாடல்; இளைஞர் அட்ராசிட்டி - போலீஸில் புகார்!

பழனி முருகன் கோயிலில் ஒவ்வொரு தைப்பூசத்தின் போதும் ஏராளமான பக்தர்கள் முருகனை தரிசிக்க வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் முருகன் கோயிலுக்கு எளிதாகச் செல்வதற்கு யானை பாதையைத்தான் பயன்படுத்துவார்... மேலும் பார்க்க

'96 க்குப் பின் ஒற்றை இலக்க வாக்கு வங்கி மட்டுமே!' - தமிழகத்தில் காங்கிரஸின் பலம்தான் என்ன?

திமுக காங்கிரஸ் இடையே மூன்று மாதங்களுக்கு முன்பாக புகைய தொடங்கிய நெருப்பு இன்னும் அணையவில்லை. 'அமைச்சரவையில் பங்கு கிடையாது' என முதல்வர் ஸ்டாலின் ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன பிறகும் காங்கிரஸார் விடுவதாக இல்லை... மேலும் பார்க்க

நாடாளுமன்றம்: `இடைநீக்கங்கள், பதில் இல்லா கேள்விகள்' - முடங்குகிறதா ஜனநாயகத்தின் இதயம்?

நாடாளுமன்றம்இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்ல, உலகிலேயே மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பைக் கொண்ட நாடாகவும் திகழ்கிறது. நமது ஜனநாயகத்தின் இதயமாகத் திகழும் நாடாளுமன்றம், மக்களவை மற்றும் ... மேலும் பார்க்க

"2 அரசுகளும் அலைக்கழித்தால் எங்கே போவது?" - நயினார் நாகேந்திரனிடம் குமுறிய அங்கன்வாடி ஊழியர்கள்

காலமுறை ஊதியம், பதவி உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே 10வது நாளாக தொடர் காத்திருப்பு... மேலும் பார்க்க

பாஜக வானதி சீனிவாசன் vs அதிமுக சந்திரசேகர்; கோவை வடக்கு தொகுதி யாருக்கு? தகிக்கும் தேர்தல் களம்!

சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே கோவை வடக்கு தொகுதியில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. பாஜக-வின் சிட்டிங் எம்எல்ஏவான வானதி சீனிவாசன், அதிமுகவில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நிழலான சந்திர... மேலும் பார்க்க

"மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?"- மீண்டும் எதிர்வினை ஆற்றிய மாணிக்கம் தாகூர்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக- காங்கிரஸ் இடையே தொடர்ந்து புகைச்சலாக இருக்கிறது.அதிக சீட்டுகள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர்.இந்தச் ச... மேலும் பார்க்க