செய்திகள் :

”பாஜகவின் கிளைக்கழகம் அதிமுக; சொல்வதை கேட்கும் கேட்பார் பிள்ளை” - மனோஜ் பாண்டியன் அட்டாக்

post image

தூத்துக்குடி மாவட்டம்,  விளாத்திகுளத்தில் `தமிழ்நாடு தலை குனியாது' என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இந்த  பொதுக்கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ஆலங்குளம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  மனோஜ் பாண்டியன்,  விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டடேயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில்  பேசிய மனோஜ் பாண்டியன், “கொடநாடு கொலை வழக்கு  என்றைக்கு எடுக்கப்பட்டாலும் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமல்ல,  சட்டமன்ற உறுப்பினராகக்கூட வர முடியாது.  

எடப்பாடி பழனிசாமி

எத்தனை ஆதாரங்களை அளித்தாலும் எத்தனை கோணங்களில் நீங்கள் எதை செய்தாலும் சட்டம் உங்களை துரத்தி துரத்தி அடிக்கும்.  இன்று உங்களுக்கு மத்திய அரசினுடைய பாதுகாப்பு இருக்கலாம்.  தேர்தலுக்குப் பின்னால் கூவத்தூரில் உருவான அ.தி.மு.க பெறக்கூடிய சட்டமன்ற தொகுதிகள் எவ்வளவு என்று யூகித்து பார்த்தால் என்னுடைய யூகம் எல்லாம் மூன்றாவது இடம்.

 ஒரு தொகுதி கூட அதிமுக பெறாது என்பதுதான்.   காரணம், அ.தி.மு.க-வை பாஜகவின் கிளைக் கழகமாக மாற்றி விட்டார்கள். தனித்தன்மை என்பதே இல்லை.  கொள்கை என்பதே இல்லை. சொல்வதைக் கேட்டு நடக்கக்கூடிய கேட்ப்பார் பிள்ளைகள் என்ற அடிப்படையில்  மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதை செய்கிறார்கள்.  தலைமைக் கழகத்தில் வைத்து அ.தி.மு.கவுக்கும் பா. ஜ.கவுக்கும் கூட்டணி ஏற்படவில்லை.

மனோஜ் பாண்டியன்

  ஸ்டார் ஹோட்டலில் வைத்துதான் கூட்டணி ஏற்பட்டுள்ளது. இந்த அளவுக்குதான் அவர்களுடைய சுயமரியாதை உள்ளது. சுயமரியாதை இல்லாத கட்சியாக அ.தி.மு.க மாறிவிட்டது.  ஆனால், தி.மு.க கூட்டணி கட்சிகள் அறிவாலயத்திற்கு வருகை தந்து தலைவரை சந்தித்து கூட்டணி குறித்து பேசுகிறார்கள். இங்குதான் கொள்கையும் சுயமரியாதையும் உள்ளது. இதுதான் திராவிட மாடல்.” என்றார்.

`4 சுவருக்குள் முடிந்திருக்க வேண்டியது' பூதாகரமாக்கிய அண்ணாமலை - விலகல் அறிவிப்பின் பின்னணி!

சட்டமன்ற தேர்தல் பரபரப்புகளால் அரசியல் களம் சூடாகியுள்ளது. மதுராந்தகம் பொதுக்கூட்டத்தை நடத்தி தெம்புடன் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணியில், அண்ணாமலை 6 தொகுதிகளுக்கான பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகியிர... மேலும் பார்க்க

"ஒரு கட்சி தலைவருக்கு நாலு விஷயங்கள் தெரிய வேண்டாமா?" - விஜய்க்கு எடப்பாடி பதிலடி!

கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதற்கட்டமாக 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருந்தார்.குறிப்பாக திமுக ஆட்சியில் மாதந்தோறும் 1000 ரூபாயாக வழங்கப்படும் உதவித்த... மேலும் பார்க்க

``பிரதமர் வந்தால் நானே நேரில் சென்று இதை வழங்குவேன்" - நரவானே எழுதிய புத்தகம் குறித்து ராகுல் காந்தி

சீன ஊடுருவல் குறித்தும், அப்போது ராணுவத் தளபதியாக இருந்த நரவானே, தான் சந்தித்த சவால்கள் குறித்தும், அரசின் சில நடவடிக்கைகள் குறித்தும் 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி' என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார... மேலும் பார்க்க

'ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம் டு கல்விக்கடன் ரத்து' - 2ம் கட்ட வாக்குறுதிகளை அறிவித்த எடப்பாடி

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிகொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் என அரசியல் களம் அனல் பறக்கிறது.இது ஒருபுறம் இருக்... மேலும் பார்க்க

``ராகுல் கேள்விகளைக் கண்டு மத்திய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது?" - முதல்வர் ஸ்டாலின்

சீனா ஊடுருவல் குறித்தும் அப்போது இராணுவத் தளபதியாக இருந்த நரவானே சந்தித்த சவால்கள் குறித்தும், அரசின் சில நடவடிக்கைகள் குறித்தும் 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆ டெஸ்டினி' என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அந்த ... மேலும் பார்க்க

”இன்று அரசியலுக்கு வரக்கூடிய நடிகர்கள் அரசியலிலும் நடிக்கிறார்கள்!” - ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முந்தைய காங்கிரஸ் ஆட்சியைவிட பிரதமர் மோடி ஆட்சியில்தான் தமிழகத்துக்கு அதிக நிதி வந்... மேலும் பார்க்க