செய்திகள் :

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - தில்லி போட்டி மீண்டும் தொடங்குமா?

post image

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா மேற்கொண்டது. இதன் விளைவாக, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் அதிகரித்து, இரு தரப்பிலிருந்தும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதனால் ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.

ஹிமாசலில் மே.8ஆம் தேதி நடைபெற்ற பஞ்சாப் -தில்லி ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பஞ்சாப் அணி 10.1 ஓவர்களில் 122/1 ரன்கள் குவித்திருந்தது.

இந்தப் போட்டியில் பிரியான்ஷ் ஆர்யா 70 ரன்களுக்கு ஆட்டமிழக்க பிரப்சிம்ரன் சிங் 50 ரன்களுடனும் ஷ்ரேயாஸ் ஐயர் பூஜ்ஜியத்துடனும் களத்தில் இருந்தார்கள்.

இந்தப் போட்டி கைவிடப்பட்டாலும் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகளை ஐபிஎல் நிர்வாகம் வழங்கவில்லை. அதனால், இந்தப் போட்டி மீண்டும் தொடங்குமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இந்நிலையில், இந்தப் போட்டி 10.1ஆவது ஓவரில் இருந்து மீண்டும் தொடங்குமெனக் கூறப்படுகிறது.

இது குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகாத நிலையில் கிரிக்கெட் ரசிகர்களிடையே வாக்குவாதம் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமானது. ஒருவேளை இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளியை வழங்கினால் தில்லிக்கு சற்று பின்னடைவாக இருக்கலாம்.

வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் நினைவுகள்..! நெகிழ்ந்த சிஎஸ்கே வீரர்!

சிஎஸ்கே வீரர் டெவால்டு ப்ரீவிஸ் சென்னை ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 22 வயதான டெவால்டு ப்ரீவிஸ் மாற்று வீரராக சிஎஸ்கே அணியில் இணைந்தார். சிறப்பாக விளையாட... மேலும் பார்க்க

ஐபிஎல் நிறுத்தம்: எஞ்சிய போட்டிகளை நடத்திக்கொள்ள இங்கிலாந்து அழைப்பு

புது தில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் காரணமாக ஒரு வாரத்திற்கு ஐ.பி.எல். போட்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், எஞ்சிய போட்டிகளை தங்கள் நாட்டில் நடத்திக் கொள்ள இங்கிலாந்து கிரிக... மேலும் பார்க்க

ரசிகர்களுக்கு ஐபிஎல் டிக்கெட் கட்டணத்தை திருப்பியளிக்கும் அணிகள்!

ஐபிஎல் தொடர் அடுத்த ஒரு வாரத்துக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் ரசிகர்களுக்கு டிக்கெட் கட்டணத்தை திருப்பியளிக்கும் பணியை அணிகள் தொடங்கியுள்ளன.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா... மேலும் பார்க்க

ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் எப்போது நடைபெறும்?

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர்ப் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் ஒரு வாரத்துக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி க... மேலும் பார்க்க

ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு நிறுத்தம்: பிசிசிஐ

போர்ப் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.18-ஆவது ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச். 22ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வருகின்றன. ஐபிஎல் இறுதிப... மேலும் பார்க்க

நாடுதான் முதன்மையானது..! சிஎஸ்கேவின் வைரல் பதிவு!

பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் மூலமாக இந்தியா தனது பதிலடியைக் கொடுத்து வருகிறது.இதன் எதிரொலியாக வியாழக்கிழமை இரவு வடக்கு, மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களி... மேலும் பார்க்க