செய்திகள் :

பாலியல் விருந்து, மிரட்டல்; ரூ.954 கோடி வங்கி மோசடி! - அமெரிக்காவில் சிக்கிய இந்திய வம்சாவளி யார்?

post image

அமெரிக்காவின் ஆடம்பர மாளிகையில் ஒரு கைது... அதன் பின்னணியில் 100 மில்லியன் டாலர் வங்கி மோசடி... சட்டத்தின் பிடியில் சிக்கிய இந்திய வம்சாவளி தொழிலதிபர்! அமெரிக்காவின் நிதித்துறையை அதிர வைத்திருக்கும் இந்த பிரம்மாண்ட மோசடியின் சூத்திரதாரி யார்?

யார் இந்த மகேந்தர் மகிஜானி?

அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற்று வசித்து வரும் இந்திய வம்சாவளி தொழிலதிபர் மகேந்தர் மகிஜானி (44), சுமார் 100 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.954 கோடி) வங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். கலிபோர்னியாவின் நியூபோர்ட் பீச்சில் உள்ள தனது பிரம்மாண்ட மாளிகையில் வைத்து புதன்கிழமை காலை அவர் கைது செய்யப்பட்டார். காப்பீட்டு பாலிசிகளின் உரிமைப் பத்திரப் பதிவுகளைத் திருத்தி, ஒரு வங்கியை ஏமாற்றி இந்த மாபெரும் மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளி | மகேந்தர் மகிஜானி
மகேந்தர் மகிஜானி

மோசடியின் பின்னணி என்ன?

அமெரிக்காவின் மத்திய கலிபோர்னியா மாவட்டத்தின் முதல் உதவி அட்டர்னி பிலால் எஸ்ஸாய்லி இதுபற்றி கூறுகையில், "இந்தியாவிலிருந்து சட்டப்பூர்வமாக குடியேறிய மகேந்தர் மகிஜானி, சுமார் 100 மில்லியன் டாலர் மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்," என்று உறுதிப்படுத்தினார்.

அமெரிக்க வருமான வரித்துறையின் (IRS) விசாரணையின்படி, மகிஜானியின் தந்திரம் மிகவும் கச்சிதமாக திட்டமிடப்பட்டுள்ளது. போலியான உரிமை காப்பீட்டுப் பதிவுகளை உருவாக்குவது, உண்மையான பற்றுரிமை நிலைகளை மறைப்பது, மற்றும் பல போலி நிறுவனங்களின் வலையமைப்பைப் பயன்படுத்தி வங்கியைத் திசைதிருப்புவது என பல அடுக்குகளைக் கொண்டதாக இந்த மோசடி அரங்கேறியுள்ளது.

மகிஜானிக்கு சொந்தமான 'கேண்டர் குரூப் V LLC' என்ற நிறுவனம், சம்பந்தப்பட்ட வங்கியுடன் கடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, நிலங்களை அடிப்படையாகக் கொண்ட கடன்களை உருவாக்க அல்லது வாங்க, வங்கி சுமார் 100 மில்லியன் டாலர்களை கேண்டர் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. கேண்டர் நிறுவனம், அந்த கடன்களையும் அதன் அடிப்படை சொத்துக்களையும் வங்கிக்கு ஈடாக வைத்து, கடன் வருவாயிலிருந்து வங்கிக்கான தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டும். ஆனால், செப்டம்பர் 2024 முதல் ஏப்ரல் 2025 வரை, மகிஜானி போலியான உரிமை காப்பீட்டுப் பத்திரங்களைத் தயாரித்து, சில சொத்துக்களின் மீது தனது நிறுவனத்திற்கே முதல் பற்றுரிமை (first lien position) இருப்பதாக வங்கியை நம்ப வைத்துள்ளார்.

மோசடி
மோசடி

போதை விருந்துகள், ஆள் கடத்தல், கொலை மிரட்டல்!

பணம், அதிகாரம், மிரட்டல்... மகிஜானியின் சாம்ராஜ்யம் குற்றத்தின் நிழலில்தான் கட்டமைக்கப்பட்டதா? என்ற கேள்வியை எழுப்புகின்றன நீதிமன்ற ஆவணங்கள். இந்த மோசடி மட்டுமல்லாமல், மகிஜானி மீது அடுக்கடுக்கான பல பாலியல் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் பங்கேற்ற தனிப்பட்ட விருந்துகளை இவர் நடத்தியதாகவும், இந்த விருந்துகளில் சில வங்கி ஊழியர்களும் கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர், இந்த விருந்துகளில் நடந்த நிகழ்வுகளை வைத்து அவர்களை 'பிளாக்மெயில்' செய்து, தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் தெரிகிறது.

அதுமட்டுமின்றி, தனது கீழ் பணிபுரிபவர்களை "கொன்றுவிடுவேன்" என்றும், "உங்கள் குடும்பத்தை தெருவில் நிறுத்துவேன்" என்றும், "உங்கள் பிள்ளைகளை அரசின் நலத்திட்டங்களில் வாழ வைப்பேன்" என்றும் கொடூரமாக மிரட்டியதாக ஆவணங்கள் கூறுகின்றன. மேலும், ஆயுதம் ஏந்திய அடியாட்களைப் பயன்படுத்தி தெற்கு கலிபோர்னியாவின் முக்கிய பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் ஒரு உணவகத்தை கைப்பற்றியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

மற்றொரு வழக்கில் 1.3 பில்லியன் டாலர் அபராதம்!

கடந்த மாதம், லகுனா பீச் தொழிலதிபர் முகமது ஹோனர்கர் என்பவருடனான ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக, மகிஜானிக்கு 1.3 பில்லியன் டாலருக்கும் (சுமார் ரூ.12,391 கோடி) அதிகமான நஷ்டஈடு செலுத்த வேண்டும் என ஒரு நடுவர் தீர்ப்பளித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கிலும், தனது தொழில் போட்டியாளர்களை அச்சுறுத்தல், மிரட்டல் மற்றும் வன்முறை மூலம் ஒடுக்க மகிஜானி முயன்றதாக நியூயார்க் போஸ்ட் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள மகிஜானி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அமெரிக்காவின் நிதி அமைப்புகளையே ஏமாற்றும் அளவுக்கு வளர்ந்த ஒரு தொழிலதிபரின் இந்த செயல், பல அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போலீஸ்காரரிடமே தங்க செயின், செல்போன் திருட்டு - வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் அலறும் பயணிகள்!

காஞ்சிபுரம் டவுன் வ.உ.சி நகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் அக்‌ஷய்பிரதீப் (வயது 32). செங்கல்பட்டு காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் அண்மையில், உறவினரின் வீ... மேலும் பார்க்க

கோவை: கடத்தப்பட்ட இளைஞர்கள்; ரூ.50 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த காவலர்கள் - அதிர்ச்சி சம்பவம்

கோவை மாவட்டம், போத்தனூரை அடுத்த சித்தண்ணபுரம், இந்திரா நகரைச் சேர்ந்தவர் நவீன் (29). இவர் வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பகுதியில் தங்கியிருந்து ஆன்லைன் டிரேடிங் செய்து வந்துள்ளார். கடந்த 8-ஆம் தேதி மதியம்,... மேலும் பார்க்க

கன்னியாகுமரி: விசாரணைக்கு சென்ற போலீஸை நாயை ஏவி கடிக்கவைத்த தம்பதி - மோசடி புகாரில் சிக்கிய பின்னணி!

கன்னியாகுமரி மாவட்டம், சிராயன்விளையைச் சேர்ந்தவர் கிரேட் பிரின்ஸ்ராஜ் (31). ஐவுளிக்கடை உரிமையாளரான கிரேட் பிரின்ஸ்ராஜ் காதல் திருமணம் செய்துள்ளார். இவரது மனைவியின் பூர்வீக சொத்து சம்பந்தமாக பிரச்னை இர... மேலும் பார்க்க

ஈரோடு: தீ வைத்துக் கொளுத்தப்பட்ட பயிர்கள்; `மாற்றுச் சமூகத்தினர்தான்...'- குமுறும் பட்டியலின விவசாயி

ஈரோடு மாவட்டம், ஆர்.என்.புதூர், அமராவதி நகரைச் சேர்ந்தவர் விவசாயி மாணிக்கம். பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த இவர், காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு உட்பட்ட விளை நிலத்தில் 2 ஏக்கர் பரப்பளவை கடந்த 5 ஆ... மேலும் பார்க்க

போலீஸ் ரெய்டு: குக்கரில் சாதத்துடன் கஞ்சாவை அவித்த இளைஞர் - காட்டிக்கொடுத்த விசில்!

கேரள மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்ட பிறகு போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்கும் விதமாக 'ஆப்ரேஷன் தூஃபான்' செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்ற... மேலும் பார்க்க

கடலூர்: `கடன் கொடுத்தால் அப்படிக் கூப்பிடுவியா..?' - சீறிய இளம்பெண்... அடித்துக் கொன்ற முதியவர்!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் மீதிக்குடியைச் சேர்ந்த காமாட்சிக்கும், கார்த்திக் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன... மேலும் பார்க்க