செய்திகள் :

பெங்களூரு: ATM-க்கு வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.7.11 கோடி கொள்ளை - என்ன நடந்தது? சந்தேகம் என்ன?

post image

நேற்று பெங்களூரில் பட்டப்பகலில் ஏ.டி.எம்மிற்கு எடுத்து சென்ற ரூ.7.11 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

என்ன நடந்தது?

சி.எம்.எஸ் இன்ஃபோ சிஸ்டம் என்னும் கம்பெனியின் வாகனம் பெங்களூரு ஜே.பி நகரில் உள்ள தனியார் வங்கியிலிருந்து ஏ.டி.எம்மிற்கு பணம் எடுத்து சென்று கொண்டிருந்திருக்கின்றது.

அந்த வாகனத்தை ஒரு கார் வந்து இடையில் மறித்துள்ளது. அந்தக் காரில் வந்திறங்கிய நபர்கள் தங்களை இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் என்று அடையாளப்படுத்தி உள்ளனர்.

பின்னர், அவர்கள் பணத்திற்கான ஆவணங்களை ஆராய வேண்டும் என்று வாகனத்தில் பணத்திற்கான இன்சார்ஜாக வந்தவரை தங்களது காரில் பணத்துடன் ஏற்றியுள்ளனர்.

குறிப்பிட்ட இடத்தை நோக்கி சென்ற அவர்கள், அந்த இடம் வந்ததும் இன்சார்ஜை தள்ளிவிட்டு, பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கின்றனர்.

பெங்களூரு - கொள்ளை
பெங்களூரு - கொள்ளை

விசாரணை

தற்போது இந்த சம்பவத்தை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதற்காக சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

வாகனத்தின் டிரைவர், இரண்டு பாதுகாப்பு காவலர்கள், இன்சார்ஜ் ஆகியோர் கஸ்டடியில் எடுக்கப்பட்டுள்ளனர்.

இன்சார்ஜிடம் இருந்து காரில் இருந்தவர்கள் குறித்த முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு இவர்களோ அல்லது நிறுவனத்திற்குள் இருக்கும் யாராவதோ காரணமாக இருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர்.

காரணம், இந்த சம்பவம் நடந்த உடனே அந்த வாகனத்தின் ஓட்டுநர் போலீசாரிடம் தெரிவிக்கவில்லை. மேலும், அவரிடம் விசாரிக்கையில் முற்றிலும் மாறான தகவலை தந்திருக்கிறார்.

அடுத்ததாக, ஆயுதம் ஏந்திய பாதுகாவலர் சம்பவத்தின் போது, ஏன் ஆயுதத்தைப் பயன்படுத்தவில்லை என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் போக்சோ கைதி தற்கொலை - அடுத்தடுத்து இரு சம்பவங்கள்

தென்காசி மாவட்டம், ஆய்க்குடியைச் சேர்ந்தவர் திருமலைக்குமார். சமீபத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரால் கைது செய்யப்ப... மேலும் பார்க்க

படத் திருட்டு மோசடி: பிரபல இணையதள மூளையாக செயல்பட்டவர் கைது - பாராட்டும் பவன் கல்யாண்!

திரைப்படத் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட திரைத் துறையினருக்கும் பெரும் சிக்கலாக இருந்தது திரைப்படத் திருட்டு (Piracy). திரைப்படம் திரையரங்குக்கு வந்த உடனே, அதை இணையதளத்தில் பதிவேற்றுவதால், திரைத் துறையினரு... மேலும் பார்க்க

விருதுநகர்: புகாரளிக்க வந்த பெண்ணுடன் திருமண மீறிய உறவு; காவலர் சஸ்பெண்ட்

விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில், கடந்த சில நாட்களுக்கு முன் ஒருவருக்கு பணம் கொடுத்து வாங்க முடியாததால் இளம்பெண் ஒருவர் புகார் அளிக்க வந்துள்ளார்.இதுதொடர்பாக அந்தக் காவல் நிலையத்தில் ஆய்வாளர் தலைமை... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: ரத்த வெள்ளத்தில் சடலமாக மனைவி; திருமணமான 4வது மாதத்தில் நடந்த கொடூரம்; என்ன நடந்தது?

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகா, பாக்கம், சிலாவட்டம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன். லாரி டிரைவரான இவரின் மகள் மதுமிதாவும் அதே பகுதியைச் சேர்ந்த சரண் என்பவரும் காதலித்து க... மேலும் பார்க்க

மனிதர்களை கொன்று குவிக்க இத்தாலியர்கள் சென்ற இன்பச் சுற்றுலா? - 90-களில் நேர்ந்த கொடூரம்!

பொதுவாக சுற்றுலா எதற்கு செல்வோம்? குடும்பம் அல்லது ஃபிரண்ட்ஸ் உடன் ஜாலி ட்ரிப், சுற்றி பார்க்க, குறிப்பிட்ட ஏதோ ஒரு இடத்தை பார்க்க வேண்டும் போன்ற காரணங்களுக்காக தானே? ஆனால், 1990-களில், மனிதர்களை சுட்... மேலும் பார்க்க

ராமேஸ்வரம்: மாணவி குத்தி கொலை; வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபரை ஒப்படைக்க கோரி உறவினர்கள் சாலை மறியல்

கொலையாளியை ஒப்படைக்க கோரி காவல் நிலையம் முற்றுகைராமேஸ்வரம் சேரான்கோட்டை பகுதியை சேர்ந்த மாணவி ஷாலினி ராமேஸ்வரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் வசித்து வ... மேலும் பார்க்க