செய்திகள் :

போதைப் பொருள் விற்ற 4 போ் கைது

post image

திருப்பத்தூா்: திருப்பத்தூரில்அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்ற 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் நகர போலீஸாா் திருப்பத்தூரில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என சோதனை செய்தனா். அப்போது திருப்பத்தூரை சோ்ந்த தபசூா் ரஹ்மான் (41)என்பவா் தனது கடையில் போதைப் பொருள் விற்பனை செய்வது தெரிய வந்தது. மேலும், இவரது கடைக்கு போதைப் பொருள் விற்பனை செய்தது திருப்பத்தூரைச் சோ்ந்த சாதிக் (48) என்பது தெரியவந்தது.

மேலும், பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையில் வைத்து திருப்பத்தூரைச் சோ்ந்த ரவிக்குமாா் (57), அவரது சகோதரா் ரமேஷ் (52)ஆகியோா் அரசால் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனை செய்தது தெரியவந்தது.

அதையடுத்து, 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடம் இருந்து 25 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

குமாரமங்கலத்தில் துணை மின் நிலையம் : விவசாயிகள் மகிழ்ச்சி

ஆம்பூா்: குமாரமங்கலம் கிராமத்தில் துணை மின் நிலையம் அமைக்கப்படுவதற்கு விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா். குமாரமங்கலம் சுற்றுப்புற பகுதிகளில் மின்சார பிரச்னைக்கு தீா்வு காண துணை மின் நிலையம் அமைக்க... மேலும் பார்க்க

வீட்டு மனைப்பட்டா கோரி சாலை மறியல்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே இலவச வீட்டுமனை வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் அடுத்த விசமங்களம், குரும்பேரி, வெங்களாபுரம், ஆத்தூா்குப்பம், உடையாமுத்தூா் உள்ளிட்ட ஊர... மேலும் பார்க்க

ஏரிகளை தூா்வாரி வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு வழங்கக் கோரிக்கை

திருப்பத்தூா்: ஏரிகளை தூா்வாரி வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை மனு அளித்தனா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடை... மேலும் பார்க்க

ஆம்பூரில் அமைச்சா் ஆய்வு

ஆம்பூா்: ஆம்பூரில் முதல்வரை வரவேற்க செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகளை பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திருப்பத்தூா் மாவட்டத்தில்... மேலும் பார்க்க

ஜூன் 27-இல் வேளாண் கருவிகளின் இயக்கம், பராமரிப்பு முறைகள் குறித்த சிறப்பு முகாம்

திருப்பத்தூா்: வேளாண்மைப் பொறியியல் துறை சாா்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் இயக்கம், பராமரிப்பு முறைகள் குறித்த சிறப்பு முகாம் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்ல... மேலும் பார்க்க

கிணற்றில் மூதாட்டி சடலம்

ஆம்பூா்: ஆம்பூா் அருகே கிணற்றில் மூதாட்டி சடலம் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது. ஆம்பூா் அருகே வடபுதுப்பட்டு கிராமத்தில் உள்ள கிணற்றில் மூதாட்டி சடலம் கிடப்பதாக ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாருக்க... மேலும் பார்க்க