புல்லட் பாபா: காவல் நிலையத்திலிருந்து மாயமாகும் புல்லட் - கோயில் கட்டி கும்பிடும...
10-ம் வகுப்பு தேர்ச்சி போதும், தமிழிலும் தேர்வு எழுதலாம்; CAPF & SSF-ல் 25,487 காலிப்பணியிடங்கள்
பணியாளர் தேர்வு ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ன பணி?
தொழில் பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு போலீஸ், ரிசர்வ் போலீஸ் படை, சாஸ்திர சீமா பால் (SSB), இந்தோ திபெத் எல்லை போலீஸ், அசாம் ரைபிள்ஸ், செயலக பாதுகாப்பு படை (SSF) ஆகிய பிரிவுகளில் பணி.
மொத்த காலிப்பணியிடங்கள்: 25,487
வயது வரம்பு: 18 - 23 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
சம்பளம்: ரூ.21,700 - 69,100
கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
கணினி அடிப்படையிலான தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை.
குறிப்பு: கணினி அடிப்படையிலான தேர்வு தமிழிலும் நடத்தப்படும்.
தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் எங்கே?
சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், கிருஷ்ணகிரி.
விண்ணப்பிக்கும் இணையதளம்:ssc.gov.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 31, 2025
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!




















