செய்திகள் :

``நான் பாமகவில் இருந்து விலக தயார், எந்தப் பதவியும் வேண்டாம்.!'' - ஜி.கே மணி வேதனை

post image

'ராமதாஸ் - அன்புமணி இருவரும் ஒன்றாக இணைந்தால், நான் பாமகவில் இருந்து விலக தயார்' என்று பாமக எம்.எல்.ஏ ஜி.கே மணி பேசியிருக்கிறார்.

சென்னையில் இன்று (டிச.15) செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஜி.கே மணி, "அன்புமணி இன்றைக்கு நிறைய விஷயங்களைப் பேசுகிறார்.

ஆனால் 35 வயதில் அன்புமணியை மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தவர் ராமதாஸ். இன்றைக்கு பாமக வளர்ந்ததற்கு ராமதாஸ்தான் முக்கிய காரணம்.

பாமகவுக்கு ஒரு சோதனை என்றால், ராமதாஸால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும். அன்புமணியின் செயல்பாடுகளால் ராமதாஸ் தான் கண்ணீர் வடிக்கிறார்.

ஜி.கே மணி
ஜி.கே மணி

என்னைப் பார்த்து, எங்கள் கட்சியில் உழைத்தவர்களைப் பார்த்து ராமதாஸ் உடன் இருப்பவர்களை எல்லாம் பார்த்து அன்புமணி துரோகி என்கிறார்.

ஜி.கே.மணி தான் என்னையும், எங்க அப்பாவையும் பிரித்துவிட்டார் என்று சொல்கிறார்.

இதெல்லாம் எவ்வளவு வேதனையாக இருக்கும். அன்புமணிக்கு ஒன்றிய அமைச்சர் பதவி வாங்கிக் கொடுக்குமாறு ராமதாஸை நான்தான் சம்மதிக்க வைத்தேன்.

இதுகுறித்து பேசும்போது ராமதாஸ் என் மீது மிகவும் கோபப் பட்டார். அன்புமணிக்கு எந்த வகையிலும் நான் கெடுதலோ, துரோகமோ நினைத்ததில்லை.

அப்பாவையும் மகனையும் பிரித்துவிட்டதாக மனசாட்சி இல்லாமல் பேசுகிறார் அன்புமணி.

அப்பாவையும், மகனையும் பிரிக்க முடியுமா? ராமதாஸிடமிருந்து, கட்சியை பிரித்து எடுத்துச் செல்லவேண்டுமென அன்புமணி நினைக்கிறார்.

நான் ராமதாஸிடன் இருப்பதால் தான் அன்புமணி இப்படிப் பேசுகிறார். நாங்கள் ராமதாஸை ராஜாவாக பார்க்கிறோம்.

அன்புமணியை ராஜா வீட்டு கன்னுக்குட்டியாக பார்க்கிறோம். ராஜா வீட்டு கன்னுக்குட்டி, எட்டி உதைக்கும், சீறீப்பாயும் என நாங்கள் பொறுமையாகத்தான் இருக்கிறோம்.

அன்புமணி, ராமதாஸ்
அன்புமணி, ராமதாஸ்

ராமதாஸ் - அன்புமணி இருவரும் ஒன்றாக இணைந்தால், நான் பாமகவில் இருந்து விலக தயார், பாமகவில் எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம்.

அன்புமணி யார் யார் துரோகிகள் என நினைக்கிறாரோ, அவர்கள் அனைவரும் கட்சியில் இருந்து வெளியேற தயாராக இருக்கிறோம்.

நானோ என் குடும்பத்தினரோ கட்சியில் இருக்க மாட்டோம். எம்எல்ஏ பதவியைக் கூட ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்.

வேறு கட்சியிலும் சேரமாட்டோம், மீண்டும் நீங்கள் அழைத்தால் பாமகவில் சேருகிறோம்" என்று பேசியிருக்கிறார்.

பிரியாங்கா காந்தி - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு: காங்கிரஸுடன் இணையுமா ஜன் சுராஜ்?- பின்னணி என்ன?

பத்து வருடங்களுக்கும் மேலாக, தேர்தல் வியூக வகுப்பாளராக அரசியல் வட்டாரங்களில் கோலோச்சியவர் பிரசாந்த் கிஷோர். பிரதமர் மோடி முதல், மாநில அரசியல் தலைவர்களான நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, ஸ்டாலின் என சக்தி... மேலும் பார்க்க

'திமுக ஒரு ஆமை; உதயநிதி அப்டேட்டே ஆகவில்லை!' - ஜெயக்குமார் கடும் தாக்கு!

2026 சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் இரண்டரை மாதங்களே இருக்கிறது. இந்நிலையில், இன்று (15.12.2025) முதல் அதிமுக விருப்ப மனுக்களை விநியோகம் செய்ய தொடங்கியிருக்கிறது. இன்று மதியம் 12 மணிக்கு ராய... மேலும் பார்க்க

BJP: வலுவான ஆர்.எஸ்.எஸ் பின்னணி டு பாஜகவின் தேசிய செயல் தலைவர் - யார் இந்த நிதின் நபின்?

பாஜகவின் தேசியத் தலைவராக கடந்த 2020-ஆம் ஆண்டு ஜே.பி. நட்டா நியமிக்கப்பட்டார்.அவரது 3 ஆண்டு பதவிக் காலம் ஏற்கெனவே முடிந்துவிட்டது. எனினும், 2024 மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் அவரது பதவிக் காலம... மேலும் பார்க்க

``யார் துரோகி, யார் அப்பாவி, யார் செய்வது நியாயம் என தமிழக மக்களுக்குத் தெரியும்'' - TTV தினகரன்

தஞ்சாவூரில் நடைபெற்ற திருமணம் உள்ளிட்ட பல நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடி.வி.தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறியதாவது, அமமுக-வை தவிர்த்து விட்டு எந்த ஒரு கூட்டணியும்... மேலும் பார்க்க

அமித்ஷா சந்திப்பு: ``கூட்டணி குறித்து பேசவில்லை; இதற்கு தான் டெல்லி சென்றேன்'' -நயினார் நாகேந்திரன்

பாஜகவின் தேர்தல் முன்னெடுப்புகள் பரபரக்கத் தொடங்கிவிட்டன.கடந்த ஜூலை மாதம் முதல் இதுவரை இந்திய பிரதமர் மோடி மூன்று முறை தமிழ்நாடு வந்துவிட்டார்.கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை இந்திய உள்துறை அமைச்சர் அ... மேலும் பார்க்க