செய்திகள் :

போதையால் அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள் - என்ன நடக்கிறது கோவையில்?

post image

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே  சின்ன மத்தம்பாளையம் பகுதி உள்ளது. அங்கு தனியார் மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது. அங்கு 50 வயது வயதான மதிக்கத்தக்க ஒருவர் நேற்று இரவு மது அருந்தியுள்ளார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அவர் அந்த மனமகிழ் மன்றம் முன்பு சடலமாக மீட்கப்பட்டார்.

கொலை செய்யப்பட்ட சுரேஷ்

அவர் உடல் முழுவதும் வெட்டு காயங்கள் இருந்ததால், காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விசாரணையில் அவர் கோகுலம் காலனி பகுதியைச் சேர்ந்த சமையல்காரர் சுரேஷ் என்பது தெரியவந்துள்ளது. நேற்று மது அருந்திக்கொண்டிருந்தபோது அவருக்கும், திருமலை நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தமிழ்ச்செல்வன் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

சடலமாக

அருகில் இருந்தவர்கள் அவர்களை சமாதனப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து சுரேஷ் மதுபோதையில் அதே இடத்தில் தூங்கிவிட்டார். மனமகிழ் மன்றத்தை மூடுவதற்காக அதன் ஊழியர்கள் சுரேஷை தூக்கி வெளியில் படுக்க வைத்துள்ளனர்.

 அப்போது அங்கு வந்த தமிழ்ச்செல்வன் மோதலை நினைவில் வைத்து, சுரேஷை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.  கொலை செய்த தமிழ்ச்செல்வன் கைது செய்யப்பட்டுள்ளார். இதேபோல கணபதி அருகே கஞ்சா போதையில் இளைஞர்களிடையே மோதல் ஏற்பட்டது.

மோதல்

அப்போது ஒரு கும்பல் இளைஞர் ஒருவரை சாலையில் கொடூரமாக தாக்கினார்கள். அருகில் இருந்தவர்கள் அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா: பேருந்தில் எடுத்த வீடியோ வெளியானதால் ஊழியர் தற்கொலை செய்த வழக்கு - இளம் பெண் கைது

கேரள மாநிலம் கோழிக்கோடு வடகரா பகுதியை சேர்ந்தவர் ஷிம்ஜிதா முஸ்தபா(35). இன்ஸ்டா கன்டென்ட் கிரியேட்டரான இவர், கடந்த சில தினங்களுக்கு முன் பேருந்தில் பயணம் செய்தபோது கோழிக்கோடு கோவிந்தாபுரம் பகுதியைச் சே... மேலும் பார்க்க

திருச்சி: 'ரூ.8 லட்சம் மதிப்பு' - கள்ளநோட்டுகளை மாற்றிய வடமாநில கும்பல் சிக்கியது எப்படி?

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி பகுதியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் காருக்கு பெட்ரோல் போட்டவர்கள், 200 ரூபாய் நோட்டாக கொடுத்துள்ளனர். அந்த நோட்டை பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பரிசோத... மேலும் பார்க்க

தோழியுடன் தன்பாலின உறவு - எதிர்ப்பு தெரிவித்த கணவனை ஆள் வைத்து கொலை செய்த மனைவி

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரை சேர்ந்தவர் சுமன் சிங். இவர் அங்குள்ள திகர் என்ற கிராமத்தில் இருக்கும் தோட்டத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து வ... மேலும் பார்க்க

`தினமும் முட்டைகறியா?' எனக் கேட்ட கணவனின் நாக்கை கடித்து துப்பிய மனைவி கைது

கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன பிரச்னைக்கெல்லாம் சண்டை வருவதுண்டு. ஆனால் அந்த சண்டை அடுத்த சில மணி நேரத்தில் சரியாகிவிடும். ஆனால் உத்தரப்பிரதேசத்தில் திருமணமாகி ஒரு ஆண்டில் குழம்பு குறித்து கேள்வி எழுப... மேலும் பார்க்க

கரூர்: மதுபோதையில் பேருந்தை இயக்கிய டிரைவர்; குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பரளி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் விஜயகுமார் (வயது 30). இவர், நாமக்கலில் உள்ள தனியார் ஹோட்டலில் சமையலராக வேலைபார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆக... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழந்த SSI-யின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தாதது ஏன்?- முதல்வருக்கு பறந்த புகார்!

தூத்துக்குடி, தெர்மல்நகர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சுப்பையா. கடந்த 17.01.1986-ம் நாள், அப்போதைய ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந... மேலும் பார்க்க