செய்திகள் :

மதிமுக: ``விஜய் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது; அவர் வெற்றிப் பெற வேண்டுமெனில்'' -துரை வைகோ பேச்சு

post image

காஞ்சிபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரைவைகோ அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போது, “பீகாரைப் போல தமிழ்நாட்டிலும் பா.ஜ.க அமோக வெற்றி பெறும் என தமிழக பா.ஜ.க தலைவர் பேசியிருப்பது, அவர்களின் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்குதான் பயன்படும்.

இது பெரியார், அண்ணா உலவிய மண். தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் அவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. பீகாரின் அமோக வெற்றிக்கு முக்கிய காரணம், தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு 1.25 கோடி பெண்களுக்கு ரூ.10,000 நிதியாக கொடுத்திருக்கிறார்கள்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

ரூ.12,100 கோடி இதற்காக செலவழிக்கப்பட்டிருக்கிறது. பீகாரில் தொழிற்சாலைகள் கிடையாது, கல்விக்கட்டமைப்பு கிடையாது. படித்தவர்கள், படிக்காதவர்கள் என எல்லோரும் தமிழ்நாடு போன்ற பிற மாநிலங்களுக்கு தினக்கூலிகளாகத்தான் வருகிறார்கள்.

அவர்கள் உழைக்கிறார்கள்; அவர்களுக்கு தமிழ்நாடு மக்களும் ஆதரவு கொடுக்கிறார்கள். ஆனால், அந்த மாநிலத்தின் தேவைகளை நிறைவேற்ற தொழிற்சாலைகளை உருவாக்க இந்த ரூ.12,000 கோடியை செலவழித்திருக்கலாம். மகாராஷ்டிரா தேர்தலின் போதும் இதேபோலதான் திட்டத்தின் மூலம் பணம் கொடுத்தார்கள்.

த.வெ.க நடத்திய SIR-க்கு எதிரான போராட்டத்தில் விஜய் கலந்துகொள்ளவில்லை. அவர் மிகப் பெரும் திரைநட்சத்திரம். அவருக்குப் பின்னால் லட்சக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்மீது ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

அதனால்தான் இளைஞர்களில் சிலர் அவர் பின்னால் இருக்கிறார்கள். அதே நேரம் சினிமா வேறு, அரசியல் வேறு. அரசியல் மிகவும் கடினமானது.

விஜய்
விஜய்

அவர் வெற்றி பெற வேண்டுமெனில் மக்களை நேரடியாகச் சென்று சந்திக்க வேண்டும். மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் போராட்டங்களில், ஆர்ப்பாட்டங்களில் கட்சியின் தலைவராக அவரும் கலந்துகொள்ள வேண்டும்.

கொள்கை விரோதி பா.ஜ.க என உறுதியாக அறிவித்திருக்கிறார். எனவே, அந்த பா.ஜ.க-வுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரவு கொடுத்துவிடக் கூடாது என்பதுதான் என் விருப்பம். அவருக்கு காலப்போக்கில் எல்லாம் தெரியவரும் என நம்புகிறேன்," என்றார்.

Bihar: 10-வது முறையாக முதல்வராகும் நிதீஷ் குமார்; புதிய அமைச்சரவை குறித்து வெளியான தகவல்!

பீகாரில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி எப்போதும் இல்லாத அளவுக்கு அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 206 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகளின் மகாகட்பந்தன் ... மேலும் பார்க்க

வங்கதேச வன்முறை : `ஷேக் ஹசீனா குற்றவாளி; மரண தண்டனை விதிக்கிறோம்’ - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, அரசு வேலைகளில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக 2024 ஜூலை மாதம் பல்கலைக்கழக மாணவர்கள... மேலும் பார்க்க

மும்பை: மாநகராட்சி தேர்தல்; `சுயமாக முடிவெடுக்கலாம்!’ - காங்கிரஸை கைகழுவ தயாராகும் உத்தவ்?

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் ஜனவரி மாதம் மாநகராட்சி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. ஏற்கனவே மாநகராட்சி வார்டுகள் குலுக்கல் முறையில் எது பெண்களுக்கானது என்பத... மேலும் பார்க்க

Mexico: அதிபர் மீது அதிருப்தி; மெக்சிகோவிலும் வெடித்த Gen Z போராட்டம் - ஏன், என்ன நடந்தது?

இந்தோனேசியா, வங்கதேசம், மடகாஸ்கர் மற்றும் நேபாளத்தில் ஆளும் அரசாங்கத்தின் பல்வேறு நிர்வாகக் கோளாறுகளை எதிர்த்து மிகப் பெரிய 'ஜென் Z' போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்கள் அனைத்தும் அந்தந்த நாடுக... மேலும் பார்க்க

Pa.Ranjith:``கம்யூனிஸ்ட்டுகள் ஏன் அம்பேத்கரை வாசிக்கவில்லை?" - பா.ரஞ்சித் முன்வைக்கும் குற்றச்சாட்டு

நீலம் பண்பாட்டு மையம் சார்பில், சென்னை தேனாம்பேட்டையில் அறிஞர் ராஜ் கௌதமன் நினைவு விருது வழங்கும் விழா நடைபெற்றது. 2025-ம் ஆண்டுக்கான அறிஞர் ராஜ் கெளதமன் நினைவு விருது ஆய்வாளர், எழுத்தாளர் வ.கீதா அவர்... மேலும் பார்க்க