செய்திகள் :

மும்பை தேர்தலில் போட்டியிடும் கவுன்சிலருக்கு ரூ.124 கோடி சொத்து! - 8 ஆண்டுகளில் 20 மடங்கு அதிகரிப்பு

post image

மும்பை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் சபாநாயகர் சகோதரனான மகரந்த் நர்வேகரின் சொத்து கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து 20 மடங்கு அதிகரித்துள்ளது. மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் இவர் தான் மிகவும் பணக்கார வேட்பாளராக கருதப்படுகிறார்.

தனது சொத்து குறித்து அவர் தனது தேர்தல் பிரமாண பத்திரத்தில் குறிபிட்டுள்ளார். தென்மும்பையில் உள்ள 226வது வார்டில் போட்டியிடும் மகரந்த் நர்வேகர் 2017ம் ஆண்டு தேர்லில் போட்டியிட்டபோது அவரது சொத்து ரூ.6.3 கோடியாக இருந்தது. ஆனால் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று 5 ஆண்டுகள் கவுன்சிலராக இருந்துள்ள மகரந்த் நர்வேகரின் சொத்து கடந்த 8 ஆண்டில் ரூ.124 கோடியாக அதிகரித்து இருக்கிறது.

இதில் அசையும் சொத்துக்கள் 32.14 கோடியும், அசையா சொத்துக்கள் 92.32 கோடியும் இருக்கிறது. கடந்த 8 ஆண்டில் நிலம், வீடுகள் என அசையா சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்.

ஸ்ரத்தா ஜாதவ்

ரூ.16.68 கோடி அளவுக்கு கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். சாதாரண ஒரு கவுன்சிலரின் சொத்து 8 ஆண்டில் 20 மடங்கு அதிகரித்து இருக்கிறது. கடற்கரை நகரமான அலிபாக்கில் மட்டும் 27 இடங்களில் சொத்து வாங்கி குவித்து இருக்கிறார்.

தேர்தலில் போட்டியிடும் 35 சதவீத வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர். நர்வேகரின் மைத்துனி ஹர்சிதா நர்வேகர் 225வது வார்டில் போட்டியிடுகிறார். அவரது சொத்தும் கடந்த 8 ஆண்டில் ரூ.10 கோடியில் இருந்து 63 கோடியாக அதிகரித்துள்ளது. சொத்து மதிப்பு அதிகரித்து இருப்பது குறித்து மகரந்த் நர்வேகர் கூறுகையில், ''கடந்த சில ஆண்டுகளில் நிலத்தின் மதிப்பு அதிகரித்துவிட்டதால் சொத்து மதிப்பு உயர்ந்து இருக்கிறது" என்று குறிப்பிட்டார்.

இத்தேர்தலில் போட்டியிடும் முன்னாள் மேயர் ஸ்ரத்தா ஜாதவ் தனக்கு ரூ.46 கோடிக்கு சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மான்கூர்டு பகுதியில் போட்டியிடும் ஆட்டோ டிரைவர் கந்து நானா கண்டேகர் தனக்கு சொத்து எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

21 வயது முதல் 76 வயது வரை வேட்பாளர்கள்

மும்பை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களில் 133 பேர் 60 வயதை கடந்தவர்கள் ஆவர். இது தவிர 24 பேர் 70 வயதை கடந்தவர்கள் ஆவர். அவர்களில் கலீனா பகுதியில் போட்டியிடும் கிருஷ்ணாவிற்கு 76 வயதாகிறது. இவர் இரண்டாவது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். இது குறித்து அவர் கூறுகையில், ''தேர்தலில் போட்டியிடுவதற்கும் வயதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது'' என்று தெரிவித்தார்.

இதே போன்று போரிவலி பகுதியில் 73 வயது நரேந்திர குமார் என்ற டாக்டர் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடுகிறார். இதே போன்று வேட்பாளர்களில் சுமித் சாஹில் என்ற 21 வயது இளம் வேட்பாளர் ஜெரிமெரி பகுதியில் போட்டியிடுகிறார்.

அரசியலில் நுழைவது குறித்து சுமித் சாஹில் (21) கூறுகையில், ``அரசியலில் நுழைவது எனது லட்சியம் அல்ல, விரக்தியால் எடுத்த முடிவு. ஒவ்வொரு நாளும் மக்கள் நீண்ட வரிசையில் தங்கள் பிரச்னைகளை தீர்க்க வருவதை நான் காண்கிறேன். இவை பெரிய பிரச்னைகள் அல்ல. ஒருவரின் குப்பைகள் எடுக்கப்படுவதில்லை, யாரோ ஒருவரின் வீட்டிற்கு வெளியே ஒரு அடைப்புள்ள வடிகால் உள்ளது. ஆனால் அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் உண்மையில் யாருக்கும் ஆர்வம் இல்லை. அதனால்தான் நான் களத்தில் இறங்க முடிவு செய்தேன்'' என்றார்.

30 வயதுக்கு உட்பட்ட 189 பேர் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். தேர்தல் பிரசாரத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கீழ்பாக்கம் மருத்துவமனை வளாகத்தில் ரௌடி வெட்டிக் கொலை; ஆளும் அரசைச் சாடும் எதிர்க்கட்சிகள்!

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில், பிரசவ வார்டின் எதிரே உறங்கிக்கொண்டிருந்த பிரபல ரௌடி ஆதி (20) இன்று அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்ப... மேலும் பார்க்க

`இரட்டை இலை' பானை; நயினார் செயலால் அண்ணாமலை ஷாக் - கோவை பாஜக பொங்கல் விழா ஹைலைட்ஸ்!

பாஜக அகில இந்திய செயல் தலைவர் நிதின் நபின் 2 நாள்கள் பயணமாக நேற்று முன் தினம் கோவை வந்தார். சனிக்கிழமை மாலை தனியார் கல்லூரியில் ஒரு நிகழ்ச்சி, பாஜக சக்தி கேந்திர நிர்வாகிகள் கூட்டம், பாஜக மாநில மையக்க... மேலும் பார்க்க

கூட்டணி ஆட்சி: "ஸ்டாலினும், ராகுலும்தான் முடிவெடுக்கணும்" - ஐ.பெரியசாமிக்கு செல்வப்பெருந்தகை பதில்

2026 சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் பங்கு தர வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.தமிழகத்துக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், காங்கி... மேலும் பார்க்க

அண்ணாவின் `முதல்’ வெற்றி - காங்கிரஸ் சரிவு தெரியும்; கம்யூனிஸ்ட் சரிந்தது ஏன்? | முதல் களம் - 01

`முதல் களம்’ - தமிழக தேர்தல் வரலாற்றில் பல்வேறு தலைவர்கள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அப்படியான தலைவர்களின் முதல் தேர்தலும் அதனை சுற்றி நடந்த முக்கிய சம்பவங்களும் சுவாரஸ்ய தகவல்களின் ... மேலும் பார்க்க

நாகர்கோவில்: "கறுப்பு-சிவப்புக் கொடி பறக்க ஆரம்பித்த பிறகுதான் மாற்றங்கள் ஏற்பட்டன" - திருச்சி சிவா

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்விழா பொதுக்கூட்டம் நாகர்கோவிலில்நடந்தது.விழாவிற்கு மாவட்... மேலும் பார்க்க

சிவசேனா: "பால் தாக்கரேவுக்கு இருந்த செல்வாக்கு தாக்கரே சகோதரர்களுக்கு இல்லை" - பட்னாவிஸ் தாக்கு

மும்பையில் வரும் 15ம் தேதி நடக்க இருக்கும் மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே), இந்தியக் குடியரசு கட்சி போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.இக்கூட்டணி மும்பை மாநகராட்சிக்கான... மேலும் பார்க்க