செய்திகள் :

``ரங்கராஜ் சொல்றதை காமெடியா எடுத்துக்கலாம்" - மகளிர் ஆணைய தலைவர் குமாரி

post image

மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிறிசில்டா விவகாரம் இப்போதைக்கு ஓயாதுபோல.

'தன்னைத் திருமணம் செய்துவிட்டு தற்போது சேர்ந்து வாழ மறுக்கிறார்' என ஏற்கெனவே திருமணமான ரங்கராஜ் மீது அவரது முன்னாள் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிசில்டா போலீஸில் புகார் கொடுத்தது நினைவிருக்கலாம்.

இந்த விவகாரம் நீதிமன்றமும் சென்ற நிலையில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்திருந்தார் ஜாய்.

அந்தப் புகார் தொடர்பாக இருவரையும் இரண்டு முறை அழைத்து விசாரித்த மகளிர் ஆணையம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது.

அதில், ரங்கராஜ் ஜாய் கிறிசில்டாவைத் திருமணம் செய்ததை ஒப்புக் கொண்டார் எனவும் அவருக்குப் பிறந்த‌ குழந்தைக்குத் தந்தை தான் தான் என்றூம் ஒப்புக் கொண்டார்' எனவும் குறிப்பிடப் பட்டிருந்தது.

மேலும் ரங்கராஜ் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.

ஜாய் கிறிசில்டா
ஜாய் கிறிசில்டா

இந்த நிலையில் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட ரங்கராஜ் அதில், மகளிர் ஆணைய அறிக்கையில் குறிப்பிட்டது போல் தான் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. ஆணையத்தின் பரிந்துரை உத்தரவுக்கு எதிராக‌ நீதிமன்றத்தில் முறையிடப் போகிறேன்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மகளிர் ஆணையம் என்பது பெண்களுக்கு எதிரான பிரச்னைகளுக்குத் தீர்வு காண அரசால் நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகும். தேசிய அளவில் செயல்படும் தேசிய மகளிர் ஆணையத்துடன் மாநில மகளிர் ஆணையங்கள் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இங்கு விசாரணைக்கு ஆஜராகும் ஒருவர் ஆணையத்தின் உள்ளே ஒன்றைப் பேசிவிட்டு வெளியில் அதை மறுக்க முடியுமா'' என்கிற கேள்வி எழவே, மகளிர் ஆணையத் தலைவரான குமாரியிடமே பேசினோம்.

''ஆணையத்துல ஆஜரான அன்னைக்கு தனக்கு அந்தப் பெண்ணுடன் திருமணம் நடந்ததை ஒத்துக்கிட்டவர், இப்ப ஏன் இப்படியொரு அறிக்கை தர்றார்னு தெரியலை. தான் மிரட்டப்பட்டு நடந்த கல்யாணம்னு இப்ப சொல்றார். அந்தப் பொண்ணு இவரை மிரட்டினாங்கன்னு சொன்னா நம்பற மாதிரியாங்க இருக்கு. நல்ல காமெடினு இதை எடுத்துக்கலாம். சோஷியல் மீடியாவுலயே வாழ்ந்திட்டிருக்கிறவர்னு நினைக்கிறேன். அதனால அங்க எதையாச்சும் பேசிட்டுப் போகட்டும். அது பத்தி எங்களுக்குக் கவலையில்லை. நாங்க எங்க அதிகாரத்துக்கு உட்பட்டு என்ன செய்யணுமோ அதைச் சரியா செய்திருக்கோம்' என முடித்துக் கொண்டார்.

மகளிர் ஆணையம் சொல்வது பொய் என்கிற ரீதியில் ஒருவர் பொதுவெளியில் பேசுகிறார் என்றால், ஆணையத்தின் மீது பெண்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்?

தேசிய மகளிர் ஆணையம்
மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை
மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை

இதற்கு முன் தங்களின் பிரச்னைக்காக ஆணையம் சென்ற சிலரிடம் பேசியபோது,

'பொதுவெளியில் ஆணையம் குறித்து இந்த மாதிரி புகாருக்குள்ளான ஒருத்தர் பேசறார்னா ஆணையத்தின் செயல்பாடு சரியில்லைனுதான் அர்த்தம். கடந்த ஆட்சிக் காலத்துல கௌரின்னு ஒருத்தங்க தலைவரா இருந்தாங்க. அவங்க இருந்தப்ப எந்த ஒரு வழக்கானாலும் விசாரணையின் போது ஒப்புதல் வாக்குமூலம் வாங்கி கையெழுத்து வாங்கிடுவாங்க. தவிர வாக்குமூலத்தை வீடியோவும் எடுத்திடுவாங்க. ரங்கராஜ் விஷயத்துல அப்படி நடந்ததா தெரியலை. அந்தம்மாவை பதவிக்காலம் முடியற வரைகூட இருக்கவிடாம தொந்தரவு கொடுத்தே அனுப்பிட்டாங்க. அதெல்லாம் அரசியல். அரசியலை விடுங்க, தன்னுடைய கடமையை ஆணையம் முறையா செஞ்சாலே போதும்ங்க. பிரச்னைன்னு இங்க வர்ற பெண்களுக்கு ஓரளவுக்கு நல்லது நடக்கலாம்' என்றார்கள் அவர்கள்.

BB Tamil 9: "பெண்களின் காவலராகவும், ஹீரோவாகவும் தன்னைக் காட்டிக்கிறாரு, ஆனா"- குற்றம்சாட்டிய கனி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர். கனி, திவாகர் இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என்று ... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 42: “விஜய்சேதுபதி மாதிரியே நடிப்பேன்"- கலகல திவாகர்; பம்மி நிற்கும் அடாவடி நபர்கள்

திவாகர் வெளியேற்றப்பட்டார். இதற்காக தமிழக மக்கள் அதிகம் சந்தோஷமடைய முடியாது. “பிக் பாஸ்ல நிறைய நாள் என்னால் இருக்க முடியாது செல்லம்... வெளில நிறைய சூட்டிங் இருக்கு. தயாரிப்பாளர்கள் வெயிட்டிங்” என்று இ... மேலும் பார்க்க

BB Tamil 9: "என்னோட லிஸ்ட்லயே நீ இல்ல" - கொளுத்திப் போடும் டாஸ்க்!

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர். கனி, திவாகர் இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என்று ... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 41: பாரு, திவாகரை வறுத்தெடுத்த விசே; பார்வையாளர்களை குதூகலிக்க வைக்கும் பிக் பாஸ்

இந்த எபிசோடு நன்றாக சமைக்கப்பட்ட ஒன்று. எனவே தீயாக இருந்தது. ஆனால் முழுக்கவும் நியாயமாக இருந்ததா?வில்லன் பாத்திரம் வலுவாக அமைக்கப்படுவது கமர்ஷியல் திரைப்படங்களின் வெற்றிக்கான ஆதாரமான ஃபார்முலா. அதுபோல... மேலும் பார்க்க

Serial update: ரெண்டாவது பாப்பா, மகிழ்ச்சியில் பரதா; தூர்தர்ஷன் டு பிக்பாஸ் சபரி கடந்து வந்த பாதை

ரெண்டாவது பாப்பா.. மகிழ்ச்சியில் பரதா!சீரியல் நடிகை பரதா இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்கப்போகிறார். ஏற்கனவே மகள் இருக்கும் சூழலில் இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் அவருக்கு நண்பர்கள் பலரும் வாழ... மேலும் பார்க்க

Top Cook Dupe Cook: "சினிமாவுக்கு வந்துட்டா மானம், ரோஷத்தை மூட்டைக் கட்டி வைச்சிடணும்!" - டி.எஸ்.ஆர்

'அயலி' உள்ளிட்ட பல படைப்புகளில் நடித்து நமக்கு பரிச்சயமானவர் காமெடி நடிகர் டி.எஸ்.ஆர் (எ) ஶ்ரீனிவாசன். சமூக வலைதளப் பக்கங்களில் இவர் பதிவிடும் உணவு வீடியோக்கள் பெரும் டிரெண்டிங் என்றே சொல்லலாம். சினிம... மேலும் பார்க்க