செய்திகள் :

``ரஷ்ய அதிபரின் வருகையால் இந்தியாவுக்கு பொருளாதார இழப்புதான்'' - சொல்கிறார் அப்பாவு

post image

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சபாநாயகர் அப்பாவு,

“ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்றாலும், ரூ.6 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடக்கிறது. எனினும், இங்கிருந்து ரூ.45 ஆயிரம் கோடிக்குத்தான் ஏற்றுமதி நடக்கிறது.

ராணுவ தளவாடங்கள் அங்கிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. நான்கு பெரிய தொழிலதிபர்கள் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறார்கள்.

அப்பாவு
அப்பாவு

அதனால் இந்திய மக்களுக்கு ஒருவருக்கும் லாபம் இல்லை. அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட ரஷ்ய நாட்டு பிரதமரை இந்திய பிரதமர் இந்தியா வரவழைத்துள்ளார்.

சோவியத் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டுவர சென்னையில் உள்ள அதானி துறைமுகத்திற்கு கடல் வழியே கொண்டு வரவுள்ளனர். இதனால் 40 சதவீதம் மிச்சம் எனத் தெரிவித்துள்ளதை மகிழ்ச்சியாகக் கருதுகிறோம். ஆனால் எல்லா வகையிலும் இந்தியாவிற்கு பொருளாதார இழப்புதான்.

லாபம் வர வேண்டும் என்றால், குறைந்த விலையில் கச்சா எண்ணெயை வாங்கி மக்களுக்கு குறைந்த விலையில் கொடுக்க வேண்டும். ரூ.40க்கு விற்கப்பட வேண்டிய பெட்ரோலை ரூ.100க்கு விற்கின்றனர். அந்த 60 சதவீத லாபம் தனியாருக்குச் செல்கிறது; மக்களுக்கு இல்லை. இதற்காகத்தான் ரஷ்ய அதிபர் தற்போது இந்தியா வந்துள்ளார்.

அப்பாவு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சதி திட்டம் தீட்டி 50 பேரை உள்ளே அனுப்பியுள்ளனர். இதற்காக சில அதிகாரிகள், நிர்வாகங்கள் துணை போகின்றன.

நீதிமன்றத்தில் பெற்ற உத்தரவை வைத்துக் கொண்டு கலவரத்தை உருவாக்க சதி செய்கின்றனர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் முதல்வர் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. எதுவந்தாலும் எதிர்கொள்வார்” என்றார்.

ரூ.10200000000 `ஓராண்டு பட்ஜெட்டே போடலாம்; திமுக ஊழல் கறைவேட்டிகள் கம்பி எண்ணுவது உறுதி" - எடப்பாடி

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைக் கவனித்து வரும் திமுக மூத்த அமைச்சர் கே.என். நேரு, தனது துறையில் ரூ. 1,020 கோடி வரையில் ஊழல் செய்திருப்பதாகவும், வழக்குப் பதிவு செய்யவும் தமிழக தலைம... மேலும் பார்க்க

"அன்புமணிக்கும், பாமக-வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என உறுதியாகிவிட்டது" - எம்.எல்.ஏ அருள்

சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பாமக சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, "ஒரு சில பொறுப்பாளர்கள் கட்சியை திருட பொய... மேலும் பார்க்க

ஹைதராபாத்தில் வரவிருக்கும் 'டொனால்ட் ட்ரம்ப் சாலை' - ரேவந்த் ரெட்டி முடிவுக்கு பாஜக எதிர்ப்பு!

'தெலங்கானா ரைசிங் குளோபல் உச்சி மாநாட்டிற்கு' (Telangana Rising Global Summit) முன்னதாக, உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் நோக்கில், அந்த மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஹைதராபாத்தில் உள்ள ஒரு முக்கியச் சாலைக... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை உடைக்க சதி - கொந்தளிக்கும் கு.பாரதி

அம்பத்தூர் மண்டலத்தில் தூய்மைப் பணியாளர்களின் சம்பள விவகாரத்தில் ஊழல் நடப்பதாக பாஜகவின் மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனிடம் புகார் கொடுத்திருந்தார்.கராத்தே திய... மேலும் பார்க்க

TVK : கட்டையை போட்ட ரங்கசாமி; சங்கடத்தில் விஜய்! - புதுச்சேரி விசிட் பின்னணி என்ன?

தவெக தலைவர் விஜய் நாளை புதுச்சேரியில் பொதுக்கூட்டத்தை நடத்தவிருக்கிறார். கட்சி ஆரம்பித்த பிறகு விஜய் முதல் முறையாக புதுச்சேரிக்கு செல்கிறார். ஏற்கனவே டிசம்பர் 5 ஆம் தேதி அங்கே கூட்டம் நடத்துவதாக இருந்... மேலும் பார்க்க

US: ``உங்கள் மனைவி உஷாவை இந்தியாவுக்கு அனுப்புங்கள்'' - ஜேடி வான்ஸ் மீது கடும் விமர்சனம் ஏன்?

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் (JD Vance) “அதிகப்படியான குடியேற்றம் (Mass Migration) என்பது அமெரிக்கக் கனவைத் திருடுவது” என்று தெரிவித்த கருத்து, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.`இந்தக் கருத்து முரண... மேலும் பார்க்க