செய்திகள் :

ரூ.40,000 கோடி மோசடி: அனில் அம்பானியின் ரூ.3,700 கோடி வீட்டை பறிமுதல் செய்த அமலாக்கப்பிரிவு!

post image

தொழிலதிபர் அனில் அம்பானி ரிலையன்ஸ் மொபைல் போனுக்காக ரூ.40 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு, அதனை திரும்ப செலுத்தவில்லை. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் இருந்து இக்கடனை வாங்கிவிட்டு திரும்ப செலுத்தவில்லை. இது தொடர்பாக அமலாக்கப்பிரிவு பணமோசடி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இதில் ஏற்கனவே அனில் அம்பானிக்கு சொந்தமான ஏராளமான சொத்துக்களை அமலாக்கப்பிரிவு பறிமுதல் செய்துள்ளது. அதோடு அனில் அம்பானியின் மும்பை வீடு உட்பட அவருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டும் நடத்தியது. அனில் அம்பானியை டெல்லிக்கு வரவைத்து விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது.

அனில் அம்பானியின் மனைவி தினா அம்பானியை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கப்பிரிவு இரண்டு முறை சம்மன் அனுப்பியது. ஆனால் தினா அம்பானி விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து அனில் அம்பானியின் மும்பை பாலிஹில் வீட்டை அமலாக்கப்பிரிவு பறிமுதல் செய்துள்ளது. இந்த வீடு மொத்தம் 17 மாடி கொண்டது ஆகும்.

அதன் மதிப்பு ரூ.3,700 கோடியாகும். முன்னதாக இதே சொத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியாக 473 கோடி சொத்தை பறிமுதல் செய்து இருந்தனர். இப்போது முழு வீட்டையும் பறிமுதல் செய்துள்ளனர். இதையும் சேர்த்து அமலாக்கப்பிரிவு இது வரை அனில் அம்பானிக்கு சொந்தமான 15,700 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்து இருக்கிறது.

மும்பை பாந்த்ராவில் உள்ள 17 மாடி வீட்டை அனில் அம்பானி குடும்பம் டிரஸ்ட்டிற்கு சொந்தமானது என்று காட்டி இருந்தார் என்றும், இதன் மூலம் அந்த வீடு அனில் அம்பானிக்கு சொந்தமானது கிடையாது என்று காட்டுவதற்கு முயற்சி செய்திருந்தனர் என்று அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது. சொத்துக்களை அறக்கட்டளையின் கீழ் கொண்டு செல்வதன் மூலம் அவற்றை பாதுகாக்க முயற்சி நடந்துள்ளது என்றும் அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது.

மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சிறப்பு சர்வதேச கருத்தரங்கம்!

சென்னையின் முதன்மையான பல்கலைக்கழகமாக திகழும் மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், 16 பிப்ரவரி 2026 அன்று, தொற்று நோய் மற்றும் வைரஸ் பயில் துறையை களமாக கொண்டு ஒரு சிறப்பு சர்வதேச கருத்தரங்கம... மேலும் பார்க்க

நீதித்துறையில் ஊழல்... NCERT பாடத்தில் சர்ச்சை : `திட்டமிட்ட தாக்குதல்' என சாடும் தலைமை நீதிபதி

8-ஆம் வகுப்பு NCERT பாடப்புத்தகத்தில், "நீதித்துறை ஊழல்" என்ற பெயரில் புதிய பாடம் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. இது நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ... மேலும் பார்க்க

சல்லடை, கூடைகளுடன் அஸ்தியில் தங்கத்தை தேடும் பொதுமக்கள் - கோதாவரி ஆற்றில் நடக்கும் தங்க வேட்டை

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓடும் கோதாவரி ஆறு, பைதன் என்ற இடம் வழியாக செல்கிறது. இந்த பைதன் என்ற இடத்தில் பிரபல ஏகநாத் மகாராஜாவின் சமாதி இருக்கிறது. இந்த கோதாவரி ஆற்றில் ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் தங்க வே... மேலும் பார்க்க

Vedan: `இந்திய அரசியலமைப்பின் சாட்சியாக..!' - ராப் பாடகர் வேடன் திருமணம் | வைரலாகும் படங்கள்

கேரள மாநிலத்தின் பிரபல ராப் இசைக்கலைஞர் வேடன் என்ற ஹிரண் தாஸ் முரளி, தனது நீண்டகாலத் தோழியும் எழுத்தாளருமான நவமி லதாவைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் திருச்சூர் திரூரில் உள்ள இல்லத்தில்... மேலும் பார்க்க

இரட்டை சகோதரிகளுக்கு இரட்டை சகோதரர்களுடன் திருமணம்; மணமக்களை அடையாளம் காண திண்டாடிய சுவாரஸ்யம்!

தெலங்கானாவில் இரட்டை சகோதரர்களுக்கு இரட்டை சகோதரிகளுடன் நடந்த திருமண வீடியோ சமூக வலைத்தளப் பக்கங்களில் வைரலாகி இருக்கிறது.அங்குள்ள காமாரெட்டி மாவட்டத்தில் தெமிகலன் என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள் கீர்த்தன... மேலும் பார்க்க

விஐடி துணை தலைவர் சங்கர் விசுவநாதனுக்கு `கவுரவ டாக்டர்' பட்டம்! - வழங்கியது தாய்லாந்து பல்கலைக்கழகம்

விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன் அவர்களுக்கு தாய்லாந்தின் பாங்காங் நகரில் உள்ள ராஜமங்கலா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் க்ருங்தெப் (RMUTK) “கவுரவ டாக்டர்” பட்டம் வழங்கியுள்ளது.தாய்லாந்து நாட்டின் பிரி... மேலும் பார்க்க