செய்திகள் :

`வயதென்பது தடையல்ல' - 50 வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த ஜெமினி கணேசன் பேத்தி!

post image

சென்னையைச் சேர்ந்த பிரபல மகப்பேறு மருத்துவர் பிரியா செல்வராஜ், உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம், வெறும் 7 மாதங்களுக்குள் 8,000 மீட்டருக்கும் அதிக உயரமுள்ள இரண்டு சிகரங்களில் வெற்றிகரமாக ஏறிய 50 வயதுக்கு மேற்பட்ட ஒரே இந்தியப் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

பிரியா செல்வராஜ் - ஜெமினி கணேசன் பேத்தி

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், தனது பயண அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், கடும் குளிரால் தனது கைகளிலும் கால்களிலும் ஏற்பட்ட கடுமையான காயங்கள் மற்றும் கொப்புளங்களின் புகைப்படங்களையும் காட்டி, இந்த வெற்றியின் பின்னணியில் இருந்த போராட்டங்களை விவரித்தார்.

பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் பேத்தியான மருத்துவர் பிரியா, சென்னை ஜி.ஜி மருத்துவமனையின் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.

தினமும் நீண்ட நேர மருத்துவப் பணி, மருத்துவமனை நிர்வாகப் பொறுப்புகள் மற்றும் குடும்பக் கடமைகளுக்கு இடையே பல மாதங்கள் கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்து அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். எவரெஸ்ட் சிகரத்தை ஏறுவதற்கு முன்பாக, மனாஸ்லு, கிளிமஞ்சாரோ மற்றும் லோபுசே ஈஸ்ட் ஆகிய சிகரங்களையும் ஏறி தன்னை முழுமையாகத் தயார்படுத்திக்கொண்டார்.

பிரியா செல்வராஜ் - ஜெமினி கணேசன் பேத்தி

இந்தப் பயணத்தின் மூலம் வயது என்பது லட்சியங்களுக்கு ஒரு தடையே இல்லை என்பதை அவர் நிரூபித்துள்ளார்.

எவரெஸ்ட் சிகரம் நம்முடைய மன உறுதியையும் உடல் வலிமையையும் முழுமையாகச் சோதிக்கும் என்றும், உண்மையான விடாமுயற்சியும் அர்ப்பணிப்பும் இருந்தால் வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் நாம் நினைத்த இலக்குகளை எட்ட முடியும் என்றும் மருத்துவர் பிரியா செல்வராஜ் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

- சுபிக்ஷா.ஆ, கலையரசி.மு

விஜய் : எம்.ஜி.ஆர் பாணியில் `வாள்' காணிக்கை - கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் தரிசனம்!

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் முடித்த கையோடு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று லேண்ட் ஆனது மங்களூரில். அங்கே புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். கூடவே, மூகாம்பி... மேலும் பார்க்க

`ஆண் சடலங்களின் அந்தரங்க உறுப்பை ஒப்பிட்டு பேசுவோம்' - காமெடி ஷோவில் பெண் டாக்டர் சர்ச்சை கருத்து

மும்பையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கே.இ.எம்.மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் படித்தவர் டாக்டர் சாஜல் பவார். இவர் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை தொடர்பான பயிற்சியின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை... மேலும் பார்க்க

திறந்துக் கிடந்த வீட்டின் கேட்; சாலைக்குத் தவழ்ந்து வந்த குழந்தை; சாமர்த்தியமாகச் செயல்பட்ட டிரைவர்!

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் கொண்டோட்டியிலிருந்து வலியபறம்பு செல்லும் 'சபா மர்வா' என்ற தனியார் பேருந்து பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. பேருந்து கிணறுபடி என்ற பகுதியில் வளைவான சாலையில் பேருந்து சென... மேலும் பார்க்க

இடி தாக்கி இறந்த காளை; ஏர்கலப்பையில் மனைவியைப் பூட்டி உழவடித்த விவசாயி - முதல்வரை உலுக்கிய சம்பவம்!

இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிக அளவு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடக்கின்றன. சமீபத்தில் மகாராஷ்டிரா அரசு விவசாயிகளின் வங்கிக்கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இரண்டு லட்சம் ர... மேலும் பார்க்க

ஐ.நா மேடையில் ஒலிக்கவிருக்கும் தமிழக இளைஞரின் குரல்! - யார் இந்த அபிஷேக் அசீர்?

ஜூலை 13-ம் தேதி, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வில் பங்கேற்றுப் பேசவிருக்கிறார் 24 வயதேயான அபிசேக் அசீர். திருநெல்வேலி பாளை பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக் அசீர... மேலும் பார்க்க

மும்பை: `28,000 குடிசைவாசிகளுக்கு அடுக்குமாடி வீடுகள்' - அதானியைத் தொடர்ந்து களமிறங்கும் அம்பானி

மும்பையில் அதானி நிறுவனம் பெரிய அளவில் குடியிருப்பு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் தாராவி குடிசை மேம்பாட்டுப் பணிகளை அதானி நிறுவனம்தான் மேற்கொண்டு... மேலும் பார்க்க