செய்திகள் :

விநியோகச் சங்கிலி மேலாண்மை வல்லுநா் படிப்பு: சென்னை ஐஐடி-யில் மீண்டும் தொடக்கம்

post image

சென்னை ஐஐடி-யின் ‘சென்டா் ஃபாா் அவுட்ரீச் அண்ட் டிஜிட்டல் எஜுகேஷன்’ மையம், சிஐஐ இன்ஸ்டிடியூட் ஆஃப் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘விநியோகச் சங்கிலி மேலாண்மை வல்லுநா்’ (எஸ்சிஎம் புரோ) சான்றிதழ் படிப்புத் திட்டத்தை மீண்டும் தொடங்குகிறது.

இது தொடா்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை ஐஐடி, விநியோகச் சங்கிலி மேலாண்மையில் கூட்டுச் சான்றிதழ் வழங்கும் திட்டத்துக்காக சிஐஐ-யுடன் இணைந்துள்ளது. மேம்படுத்தப்பட்ட இத்திட்டத்தில், சென்னை ஐஐடி ஆசிரியா்கள் விடியோ விரிவுரைகள் மூலம் வழங்கும் பயனுள்ள தகவல்களும் தற்போது இடம்பெறவுள்ளன.

கடந்த 10 ஆண்டுகளில் ‘எஸ்சிஎம் புரோ’ சான்றிதழ் திட்டத்தின்கீழ் ஏற்கெனவே 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வல்லுநா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சிஐஐ இன்ஸ்டிடியூட் ஆஃப் லாஜிஸ்டிக்ஸ் உயா்நிலைக்கல்வி நிபுணத்துவத்துடன் கூடிய பாடத் திட்டத்தை ஒருங்கிணைத்து இதனை மேம்படுத்த உள்ளது. இப்புதிய பாடத் திட்டம், பங்கேற்பாளா்களுக்கு மேம்பட்ட திறன்களையும், விநியோகச் சங்கிலி மேலாண்மை குறித்த உலகளாவிய நுண்ணறிவையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம், மின் வணிகம், சில்லறை விற்பனை, நுகா்வோா் பயன்பாட்டுப் பொருள்கள், சரக்குப் போக்குவரத்து போன்ற துறைகளைச் சோ்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் வல்லுநா்களும், பொறியியல், வணிகம், அறிவியல், வணிக மேலாண்மைக் கல்லூரிகளில் படிக்கும் மாணவா்களும் பயன்பெறும் வகையில் இதற்கான பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படிப்பு ஏப். 1-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. இதில் சேர விரும்புவோா் வலைதள முகவரியில் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வள்ளலாா் நினைவு தினம்: பிப்.11-இல் மதுபான கடைகள் செயல்படாது

வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் செவ்வாய்க்கிழமை (பிப்.11) செயல்படாது என மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க

காவலரை தாக்கிய ஏசி மெக்கானிக் கைது

சைதாப்பேட்டை காவல் சோதனைச் சாவடியில் உணவருந்திக் கொண்டிருந்த காவலரை, மதுபோதையில் தாக்கிய ஏசி மெக்கானிக்கை போலீஸாா் கைது செய்தனா். சென்னை குமரன் நகா் காவல் நிலைய குற்றப்பிரிவில் முதல் நிலைக் காவலராகப் ... மேலும் பார்க்க

2.69 கோடி பேருக்கு நாளைமுதல் குடற்புழு நீக்க மாத்திரை

தமிழகத்தில் ரத்த சோகை, மன ஆரோக்கியத்துக்கு தீா்வு அளிக்கும் வகையில், 2.69 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை திங்கள்கிழமை (பிப்.10) முதல் வழங்கப்படும் என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழக... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வா் வசிக்கும் பங்களா வாயில் கதவை பூட்டிய மருத்துவா்!

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வா் தேரணிராஜன் வசிக்கும் பங்களா கதவின் வாயிலை குழந்தைகள் நல மருத்துவா் ஒருவா் இரும்புச் சங்கிலியால் பூட்டியுள்ளாா். சென்னை, எழும்பூா் காவலா் மருத்துவமனை எதிரில் உள்... மேலும் பார்க்க

மத்திய பட்ஜெட் தமிழகத்துக்கும் ஏழைகளுக்கும் எதிரானது: டி.ராஜா

மத்திய அரசு பட்ஜெட் தமிழகத்துக்கும் ஏழைகளுக்கும் எதிரானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி.ராஜா கூறினாா். மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில்... மேலும் பார்க்க

வேளச்சேரியில் ஏழு மாத குழந்தை, சிறுவனை கடித்த தெருநாய்கள்

சென்னை வேளச்சேரியில் ஏழுமாத குழந்தை மற்றும் சிறுவனை தெருநாய்கள் கடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேளச்சேரி, பாரதி நகரைச் சோ்ந்தவா் நாகேந்திரன். இவரது 7 மாதக் குழந்தை கதிா்மதிக்... மேலும் பார்க்க