செய்திகள் :

வீசிய முதல் பந்திலேயே விக்கெட்; தமிழ்நாட்டுக்காக அசத்தும் திருநெல்வேலி வீரர் இசக்கிமுத்து!

post image

சையத் முஷ்தாக் அலி டிராபியில் தமிழ்நாடு அணிக்காக அறிமுகமான திருநெல்வேலியைச் சேர்ந்த இசக்கி முத்து, சௌராஷ்டிராவுக்கு எதிரான அறிமுகப் போட்டியில் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்தியிருக்கிறார்.

இசக்கி முத்து
இசக்கி முத்து

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் சௌராஷ்டிரா அணியை தமிழக அணி இன்று எதிர்கொண்டது. சௌராஷ்டிரா அணி முதலில் பேட் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களை எடுத்திருந்தது. ஜெகதீசன் தலைமையிலான தமிழ்நாட்டு அணியில் இன்று 23 வயதான இசக்கி முத்து அறிமுகமாகியிருந்தார்.

பவர்ப்ளே முடிந்த உடனே 7 வது ஓவரை இசக்கிமுத்துவுக்கு கொடுத்தனர். வீசிய முதல் பந்திலேயே ராணாவையும் அந்த ஓவரின் கடைசிப் பந்தில் ஜெய் கோஹில் என்பவரையும் இசக்கிமுத்து வீழ்த்தினார். 4 ஓவர்களை வீசிய இசக்கி முத்து 29 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.

இசக்கிமுத்து திருநெல்வேலியின் களக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர். தமிழ்நாடு ப்ரீமியர் லீகில் திருப்பூர் அணிக்காக ஆடியிருந்தார். கடைசி சீசனில் 8 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அந்த சீசன் 'Emerging Bowler of the Season' விருதையும் வென்றிருந்தார்.

இசக்கி முத்து
இசக்கி முத்து

இப்போது தமிழ்நாடு அணிக்கும் சிறப்பாக அறிமுகமாகியிருக்கிறார். வரவிருக்கும் ஐ.பி.எல் ஏலத்திலும் தன்னுடைய பெயரை பதிவு செய்திருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உட்பட நான்கைந்து அணிகளின் ட்ரையல்ஸூக்கும் சென்று வந்திருக்கிறார்.

``எனது முதல் சர்வதேச போட்டியிலேயே தங்கப் பதக்கம் வென்றிருக்கேன்'' - கேரம் வீரர் அப்துல் ஆஷிக்

7வது கேரம் உலகக் கோப்பை போட்டி 2025 டிசம்பர் 2 முதல் 6 வரை மாலத்தீவின் மாலே நகரில் நடைபெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த 150 வீரர்கள் பங்கேற்றிருந்தனர்இந்திய அணியில் தமிழகத்தைச் சார்ந்த கீர்த்தனா, கா... மேலும் பார்க்க

"நானும், கீர்த்தனாவும் ஒரே கிளப்பில் தான் பயிற்சி பெற்றோம்" - கேரம் வீராங்கனை காசிமா

7வது கேரம் உலகக் கோப்பை போட்டி 2025 டிசம்பர் 2 முதல் 6 வரை மாலத்தீவின் மாலே நகரில் நடைபெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த 150 வீரர்கள் பங்கேற்றிருந்தனர்இந்திய அணியில் தமிழகத்தைச் சார்ந்த கீர்த்தனா, கா... மேலும் பார்க்க

"10-வது தான் படிச்சிருக்கேன்; வீடு இல்ல" - கேரம் உலக சாம்பியன் காசிமேடு கீர்த்தனா அரசிடம் கோரிக்கை

7-வது கேரம் உலகக் கோப்பை டிசம்பர் 2 முதல் டிசம்பர் 6 வரை மாலத்தீவில் நடைபெற்றது.இந்தியா, இலங்கை, மாலத்தீவு, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் என மொத்தம் 17 நாடுகளிலிருந்து 150-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்... மேலும் பார்க்க

``எனக்கு சரியான வீடு கூட இல்லை'' - கேரம் போட்டியில் சாதித்த வீராங்கனை கீர்த்தனா நெகிழ்ச்சி பேட்டி

மாலத்தீவில் 7-வது கேரம் உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த 150 வீரர்கள் பங்கேற்றனர். இந்திய மகளிர் அணியில் தமிழகத்தைச் சார்ந்த கீர்த்தனா, காசிமா, மித்ரா, இளவழகி, அப்துல் ஆசிக் ... மேலும் பார்க்க

``திருமணம்‌ ரத்தாகிவிட்டது'' - முதன்முதலாக‌ மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா

இந்திய மகளிர்‌ கிரிக்கெட்‌ அணியின் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது திருமணம் நின்றது குறித்து முதன்முதலாக மனம் திறந்துள்ளார்.ஸ்மிருதி மந்தனாவுக்கும், இசையமைப்பாளர்‌ பலாஷ் முச்சாலுக்கும் கடந்த 23-ம் தேதி... மேலும் பார்க்க

மதுரை: ஜல்லிக்கட்டு களத்தில் ஹாக்கி வீரர்கள்; பந்தாடிய காளைகள்! | Photo Album

ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள்ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள்ஜல்லிக்கட்டு களத்தில் ஹாக்கி வீரர்கள். ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள்ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்... மேலும் பார்க்க