செய்திகள் :

''ஸ்டாலின் தோல்வி அடைந்தது கஷ்டமாக இருக்கிறது" - தேம்பி அழுத சத்யராஜ்

post image

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 'தமிழாய்வுக்கு பேரறிவுத் தலைவர், கலையாவும் நன்கறிந்த கலைஞர்' என்ற தலைப்பில் ‘புத்தெழுச்சி நாள் விழா’ பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சத்யராஜ், "கொளத்தூரியில் தலைவர் வெற்றிபெற்று இருக்க வேண்டும். அவர் தோல்வி அடைந்தது கஷ்டமாக இருக்கிறது. எப்பேர்ப்பட்ட தலைவரை தோற்கடித்திருக்கிறார்கள்" என்று அழுத சத்யராஜ், ''மக்களுக்குப் பட்டால்தான் புத்தி வரும்'' என்றிருக்கிறார்.

சத்யராஜ்
சத்யராஜ்

தொடர்ந்து பேசிய அவர், "தேர்தலில் தோற்ற மறுநாளே பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் துணிச்சல் கலைஞருக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் மட்டுமே இருந்தது. நீதிக்கட்சியின் கொள்கைகளை மக்களுக்காக திமுக கையில் எடுத்தது.

ஆனால், இன்றைய முதல்வர் ‘வாயில் நன்றாக வருகிறது’ என்கிறார். இதெல்லாம் ஒரு முதல்வர் பேசும் பேச்சா?

உலக அளவில் பருவநிலை மாற்றங்கள் அச்சுறுத்தும் வேளையிலும், மேகதாது அணை போன்ற அண்டை மாநிலப் பிரச்னைகள் எழும்போதும், தமிழ்நாட்டை வழிநடத்த ஆளுமைமிக்க ஒரு தலைவர் தேவை.

அத்தகைய ஆளுமைமிக்க தலைவரை தமிழ்நாடு தற்போது இழந்து தவிக்கிறது. ஸ்டாலின் அவர்கள் செய்த நற்பணிகளுக்குப் பெயரை வேண்டுமானால் மாற்றி ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளுங்கள், ஆனால் திட்டங்களை மாற்றாதீர்கள்.

சத்யராஜ்
சத்யராஜ்

'வெயிலின் அருமை நிழலில் தெரியும்' என்பார்கள். நிழல் வேண்டுமென்றால் கூட வெயில் தேவை, அதற்குச் சூரியன் உதிக்க வேண்டும். திமுக எனும் சூரியன் நிரந்தரமானது, அது ஒருபோதும் அஸ்தமிக்காது" என்று பேசியிருக்கிறார்.

’நவீன தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி’ - பட்டியலின மக்களின் கிராமத்திற்கு இயக்கப்படும் அரசுப் பேருந்து!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகேயுள்ள அண்ணா நகர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட பட்டியலினக் குடும்பங்கள் உள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் படிப்பு மற்றும் வேலைகளுக்குச் செல்ல அரசுப் பேருந்தையே பயன்படு... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் தூண் விவகாரம்: ``அமைச்சரின் பேச்சைக் கண்டிக்கிறேன்" - தமிழிசை காட்டம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தனி நீதிபதியின் உத்தரவின் அடிப்படையில் தீபம் ஏற்றாததால், பதியப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு அரசு தன் நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என உயர்... மேலும் பார்க்க

'தவெக-வின் கொள்கை குறித்து அதிகம் பேசினார்' - TVK-வில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன்

எம்.எஸ்.எம். ஆனந்தன், அ.தி.மு.க- வின் இரண்டாம் கட்ட தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். விவசாயம் மற்றும் வணிக குடும்பப் பின்னணியைக் கொண்ட இவர், 2011-ம் ஆண்டு முதன் முதலாக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க த... மேலும் பார்க்க

CPI அலுவலகத்திற்குச் சென்ற ப.சிதம்பரம்; இடதுசாரிகளைக் கூட்டணிக்குள் இழுக்க முயற்சியா?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்குச் சென்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியனை காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் சந்தித்திருக்கிறார்.இடதுசாரிகளைக் கூட்டணியில் சேர்க்க ப.சிதம்பரம் மு... மேலும் பார்க்க

`பவர் முக்கியம் அமைச்சரே!’ ஜெயலலிதா குட்புக்கில் இருந்த எம்.சி.சம்பத், தவெகவில் தஞ்சமடைந்த பின்னணி!

தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றிபெற்றதையடுத்து, அதன் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அதே போல இந்தத் தேர்தலில் 47 இடங்களில் வெற்றிபெற்ற அ.தி.... மேலும் பார்க்க

Vijay: 'முதல்வர் விஜய் செய்தியாளர்களைச் சந்திக்க மறுப்பது ஏன்?'- நிர்மல்குமார் சொல்லும் காரணம் என்ன?

மதுரை அழகர் கோவில் சாலை பகுதியிலுள்ள அரசு சுற்றுலா மாளிகையில் அமைச்சர் நிர்மல்குமார் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமை... மேலும் பார்க்க