செய்திகள் :

ஸ்பெயின்: "விசித்திரமான விபத்து" - மோதிக்கொண்ட ரயில்கள்; 21 பேர் பலி; அரசு சொல்வது என்ன?

post image

ஸ்பெயினில் நேற்று இரவு இரண்டு அதிவேக ரயில்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து தென் ஸ்பெயினில் உள்ள அடமுஸ் நகரத்திற்கு அருகே நடந்துள்ளது.

மலகாவில் இருந்து மாட்ரிட்டிற்குச் சென்று கொண்டிருந்த அதிவேக ரயில் பக்கத்து தண்டவாளத்தில் போய்க்கொண்டிருந்த இன்னொரு அதிவேக ரயில்மீது மோதியுள்ளது.

இதுவரை இந்த விபத்தால் 21 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இன்னும் அதிக உயிரிழப்புகள் இருக்கலாம் என்று ஸ்பெயின் அதிகாரிகள் கூறுகின்றனர்.

விபத்தான ரயில்
விபத்தான ரயில்

விசித்திரமானது

இந்த விபத்து குறித்து ஸ்பெயினின் போக்குவரத்து அமைச்சர் ஆஸ்கார் புவென்ட், “இந்த விபத்து மிகவும் விசித்திரமாக உள்ளது. காரணம், தண்டவாளம் மிக நன்றாக உள்ளது. ஸ்ட்ரைட்டாக உள்ளது. கடந்த மே மாதம்தான், இந்தத் தண்டவாளம் புதுப்பிக்கப்பட்டது” என்று கூறியுள்ளார்.

இந்த இரண்டு ரயில்களும் ஒட்டுமொத்தமாக கிட்டத்தட்ட 400 பயணிகள் பயணித்துள்ளனர்.

இதுவரை கிடைத்துள்ள தகவலின்படி, 73 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 30 பேர் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றனர்.

ஊட்டி: கழிவறை இல்லாத கூலித் தொழிலாளர்கள் குடியிருப்பு; காட்டுமாடு முட்டி பெண் பலியான சோகம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது கொதுமுடி படுகர் கிராமம். மலை காய்கறி, தேயிலை சாகுபடி அதிகம் நடைபெறும் இந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாயக் கூலித... மேலும் பார்க்க

MSC ELSA 3: கடலில் மூழ்கிய லைபீரியக் கப்பல்; சிறைப்பிடித்த கேரள அரசு; ரூ.1227 கோடி செலுத்தி மீட்பு!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து, கொச்சி துறைமுகத்துக்குச் சென்ற எம்.எஸ்.சி எல்சா 3 என்ற லைபீரியா நாட்டு சரக்குக் கப்பல் மே 24-ம் தேதி கொச்சியில் இருந்து 38 நாட்டிக... மேலும் பார்க்க

36 பயணிகளுடன் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்; கவலைக்கிடமான நிலையில் ஒருவர் - ஊட்டியில் சோகம்!

நீலகிரி மாவட்டம், ஊட்டியிலிருந்து இன்று மதியம் தங்காடு கிராமத்தை நோக்கிப் பயணிகளுடன் இயக்கப்பட்ட தனியார் மினி பஸ் ஒன்று, மணலாடா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த வேளையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து,... மேலும் பார்க்க

ஊட்டி: பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ் - 30 பேர் காயம்... கோர விபத்தின் காட்சிகள்!

பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்பயணிக... மேலும் பார்க்க

இந்தூரில் அசுத்தமான தண்ணீரால் 7 பேர் பலி: `தேவையில்லாத கேள்வி வேண்டாம்'- சீறிய அமைச்சர்

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள பாக்யரபுரா என்ற இடத்தில் அசுத்தமான தண்ணீரை குடித்ததால் 200க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேர் உயிரிழந்திருப்பதாக மாநில அரசு அதிகாரபூர்வம... மேலும் பார்க்க

Switzerland: புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது தீ விபத்து; 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

உலகமெங்கும் புத்தாண்டை வெகு விமரிசையாக கொண்டாடி வரவேற்று வருகின்றனர். அப்படி புத்தாண்டு கொண்டாட்டத்தின்போதும் சுவிட்சர்லாந்தில் பயங்கர தீ விபத்து ஒன்று ஏற்பட்டிருக்கிறது. இந்த தீ விபத்தில் 40-க்கும் ம... மேலும் பார்க்க