செய்திகள் :

Bihar Election Results Live: பீகாரில் வெற்றி யாருக்கு? முதல்வர் மாற்றம் வருமா? நாளை வாக்கு எண்ணிக்கை!

post image

பீகார் சட்டமன்றத் தேர்தலின் இரண்டு கட்ட (நவம்பர் 6, 11) வாக்குப்பதிவுகளும் முடிந்துவிட்டது. முதற்கட்ட வாக்குப்பதிவில் 65.08 சதவிகிதமும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 68.76 சதவிகிதமும் என மொத்தமாக 66.91 சதவிகித வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. பீகார் தேர்தல் வரலாற்றில் அதிகளவில் பதிவான வாக்கு சதவிகிதம் இதுதான்.

2005-க்குப் பிறகு சுமார் 20 வருடங்களாக எந்தக் கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும், அந்தக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் குறைவான இடங்களைக் கொண்டிருந்தாலும் நிதிஷ் குமார்தான் முதல்வராக இருப்பதால் இம்முறை மாற்றம் வருமா என்ற எதிர்பார்ப்பை இத்தேர்தல் உருவாக்கியிருக்கிறது.

பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025
Bihar Assembly Election 2025

ஆனால், கருத்துக்கணிப்பு முடிவுகள் அனைத்திலும் நிதிஷ் குமார் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சுமார் 140 இடங்களுடன் ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்டிருக்கின்றன.

மறுபக்கம், ``கருத்துக்கணிப்பு முடிவுகள் எல்லாம் ஒரு உளவியல் அழுத்தம். மாற்றம் உறுதி, 18-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும்" என்று நம்பிக்கையோடு இருக்கிறார் மகாபந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ்.

நிதிஷ் குமார் - தேஜஸ்வி யாதவ்
நிதிஷ் குமார் - தேஜஸ்வி யாதவ்

இதற்கிடையில், ஜன் சுராஜ் என்ற தனிக்கட்சி தொடங்கித் தனித்துக் களமிறங்கிய பிரசாந்த் கிஷோர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போவதில்லை ஓரிரு இடங்களில் தான் அவரின் கட்சி வெல்லும் என்றும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இவையனைத்துக்கும் மக்களின் அதிகாரப்பூர்வ பதில் நாளை தெரியும். பீகார் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நாளை காலை 8 மணி முதல் தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை முடிவுகளை நேரலையாக உடனுக்குடன் தெரிந்துகொள்ள இப்பக்கத்தில் இணைந்திருங்கள்.

DMK 75: 'இந்த உரையாடல் அவசியமானது!' அறிவுத் திருவிழா ஒரு விரிவான பார்வை

'கதை கேளு... கதை கேளு... ஒரு கதை சொல்றோம் கேளு!' என பறையடித்தபடி ஒரு கருஞ்சட்டை குழு மேடையேறுகிறது. சிவப்புத் துண்டை தோளில் போர்த்திய ஒரு பெண்மணி, 'கட்சின்னா என்னன்னு தெரியுமா?' எனக் கேட்கிறார். காவி ... மேலும் பார்க்க

'என்னை தாக்க முயன்ற முக்கிய குற்றவாளியை பனையூரில் பதுக்கி வைத்துள்ளார்கள' -எம்.எல்.ஏ., அருள் பேட்டி

பாமக சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி A ஃபார்ம், B ஃபார்ம் கையெழுத்திடுவது நான்தான் என்று... மேலும் பார்க்க

வந்தே மாதரம் 150 : அரிச்சல்முனையில் NCC மாணவர்கள், ராணுவ வீரர்களுடன் தேசியக்கொடி ஏந்தி மரியாதை!

வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மாதரம் 150வந்தே மா... மேலும் பார்க்க

தமிழிசை: "விஜய்க்கு இந்த புத்தகத்தை அனுப்பியிருக்கிறேன்" - SIR விவகராத்தில் விளக்கம்

முன்னாள் ஆளுநரும் தமிழக பா.ஜ.க -வின் முன்னாள் தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று (நவ. 13) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது SIR நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குரலெழுப்புவது தேவையற்றது என்ற... மேலும் பார்க்க

மோதிக்கொள்ளும் பெருசுகள்; நொந்துகொள்ளும் காவி இளசுகள் டு வசூலுக்குத் தயாராகும் எம்.பி! | கழுகார்

கொதிக்கும் மதுரை ரத்தத்தின் ரத்தங்கள்!“அவர்கள்மீது அப்படியென்ன பாசமோ?”மதுரையில், இலைக் கட்சியின் பூத் கமிட்டிப் பயிற்சி நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய இலைக் கட்சியின் ‘சூரிய’ மாஜி, “நமது தல... மேலும் பார்க்க

US: ரூட்டை மாற்றுகிறாரா ட்ரம்ப்? H-1B விசா, வெளிநாட்டு மாணவர்களுக்கு திடீர் ஆதரவு!

அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்கர்களை விடுத்து வெளிநாட்டினரை குறைந்த சம்பளத்திற்கு பணிக்கு அழைத்து வருகிறார்கள். அமெரிக்காவில் வெளிநாட்டினரின் குடியேற்றம் அதிகம் இருக்கிறது. வெளிநாட்டு மாணவர்கள் அரசுக்கு... மேலும் பார்க்க