செய்திகள் :

Doctor Vikatan: வயதுக்கேற்ற உயரம் இல்லாத டீன் ஏஜ் மகள்; 15-16 வயது பிறகு வளர்ச்சி நின்றுவிடுமா?

post image

Doctor Vikatan:  டீன் ஏஜில் இருக்கும் என் மகளுக்கு அந்த வயதுக்கேற்ற உயரம் இல்லை. 15-16 வயதுக்குப் பிறகு வளர்ச்சி நின்றுவிடும் என்கிறார்கள் சிலர். அது உண்மையா... வயதுக்கேற்ற உயரத்தைப் பெற ஏதேனும் வழிகள் உண்டா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்.

 ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்
ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்

ஒருவரது உயரம் என்பது மரபியல் ரீதியாகவும் தீர்மானிக்கப்படுவது. அம்மாவிடமிருந்தோ, அப்பாவிடமிருந்தோ அல்லது இருவரின் மரபு வழியிலிருந்தோ வருவதுதான் நம் உயரம்.   

பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை 14-15 வயதில் பூப்பெய்துவார்கள். அதன் பிறகு அவர்களுக்கு உயரம் அதிகரிக்க வாய்ப்பில்லை.

பருவ வயதை எட்டியபிறகு பிள்ளைகளின் வளர்ச்சி நின்றுவிடும்.   ஆண் குழந்தைகளுக்கு 15-16 வயது வரை  வளர்ச்சி இருக்கும். உடலியல்ரீதியாக இப்படித்தான் எல்லோரும் படைக்கப்பட்டிருக்கிறோம். எனவே, இந்த வயதைத் தாண்டி அவர்களுடைய எலும்புகள் வளர்ச்சியடைய வாய்ப்பில்லை. அப்படிப் பார்க்கும்போது பூப்பெய்தியதிலிருந்து ஒரு வருட காலம்வரை மட்டுமே வளர்ச்சி இருக்கும். அதன் பிறகு நின்றுவிடும்.

எனவே, சப்ளிமென்ட் எடுப்பதன் மூலமோ, உடற்பயிற்சி செய்வதன் மூலமோ ஒருவரது உயரத்தை அதிகரிக்கச் செய்ய முடியாது. அது அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படவும் இல்லை. சிறுவயதிலிருந்தே குழந்தைகளை ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைப் பின்பற்றக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

பருவ வயதை எட்டியபிறகு பிள்ளைகளின் வளர்ச்சி
பருவ வயதை எட்டியபிறகு பிள்ளைகளின் வளர்ச்சி

சிறுவயதிலிருந்தே குழந்தைகளை ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தைப் பின்பற்றக் கற்றுக்கொடுக்க வேண்டும். அது அவர்களுடைய எலும்புகளை உறுதியாக வளரச் செய்யும். ஓடியாடி விளையாடுவதால் உயரம் அதிகரிக்காது என்றாலும் உடல் உறுதியாகும்.  மார்க்கெட்டில் விற்கப்படும் ஊட்டச்சத்து பானங்கள், ஹெல்த் டிரிங்க்ஸ் போன்றவையும் உயரத்தை அதிகரிக்காது என்பதைப் புரிந்துகொள்ளவும். 

உங்களுடைய பெண் குழந்தைக்கு மாதவிடாய் தொடர்பான பிரச்னைகள் இருக்கின்றனவா, ஹார்மோன் கோளாறுகள் உள்ளனவா என்பதையெல்லாம் மருத்துவரிடம் அழைத்துச்சென்று தெரிந்துகொள்வதும் அவசியம். உயரத்தை அதிகரிக்கச் செய்வதாக வாக்குறுதி கொடுக்கும் மருந்துகள், சிகிச்சைகள் போன்றவற்றை நம்பாதீர்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

உங்க சாப்பாட்ல மசாலா பொருள்கள் இருக்கா? - மருத்துவர் கு. சிவராமன்

தினசரி உணவில், நாம் எத்தனைவிதமான நறுமணப் பொருட்களை, மசாலாப் பொருட்களைச் சேர்க்கிறோம் தெரியுமா? வாரா வாரம் சாம்பார் பொடி, ரசப் பொடி, புளிக்குழம்பு பொடி எனத் திரித்துவைக்கும் அம்மாக்கள் இன்றைக்கும் சிலர... மேலும் பார்க்க

Doctor Vikatan: தாம்பத்திய உறவு, நீண்ட நேரம் ஈடுபடுவது பிரச்னையின் அறிகுறியா?

Doctor Vikatan: 34 வயது நண்பனின் சார்பாக இந்தக் கேள்வியை எழுப்புகிறேன். அவனுக்கு சமீபத்தில்தான் திருமணமானது. வழக்கமாக பெரும்பாலான ஆண்களுக்கும், நீண்ட நேரம் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியவில்லை என்பதுதா... மேலும் பார்க்க

Doctor Vikatan: கையேந்தி பவன் முதல் பெரிய ரெஸ்டாரன்ட் வரை, போலி பனீரை எப்படி அடையாளம் காண்பது?

Doctor Vikatan: என்குழந்தைகள் இருவருக்கும் பனீர் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால், சமீபகாலமாக பல கடைகளிலும் போலி பனீர் விற்கப்படுவதாகச் செய்திகள் வருகின்றன. போலி பனீரை எப்படித் தயாரிக்கிறார்கள்... அத... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஃபேஷனுக்காக சைடு காது குத்திக்கொண்டால் இன்ஃபெக்‌ஷன் வருமா? தவிர்க்க என்ன வழி?

Doctor Vikatan: என்மகளுக்கு 14வயதாகிறது. ஏற்கெனவே காது குத்தியிருக்கிறோம். இப்போது ஃபேஷனுக்காக காதின் பக்கவாட்டில், இன்னும் இரண்டு துளைகள் போட வேண்டும் என அடம் பிடிக்கிறாள். அப்படிக் குத்தினால் ஏதேனும... மேலும் பார்க்க

எந்த பாலை காய்ச்சணும்; எந்த பாலை சுட வைக்கணும்? உணவியல் நிபுணர் அட்வைஸ்!

காலையில் எழுந்ததும் ஒரு கப் டீயோ, காபியோ குடித்தால்தான் சுறுசுறுப்பு நாடி நரம்பெல்லாம் பரவும் என்ற மனப்பழக்கத்துக்கு ஆளாகி இருப்பவர்கள் நாம். குழந்தைகளுக்கும், முதியவர்களுக்குமான முக்கியமான ஊட்டச்சத்த... மேலும் பார்க்க

``500+ மலை கிராமங்களுக்கு நடந்தே சென்று மருத்துவ சேவையைச் செய்துள்ளோம்'' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

உடல் நலன் குறித்த கவலைகள் இன்று அதிகரித்தவண்ணம் உள்ளன. 'வரும் முன் காப்போம்' என்பதற்கேற்ப முறையான விழிப்புணர்வுடன் செயல்பட்டால் கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது. அத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்தும் ந... மேலும் பார்க்க