செய்திகள் :

Ind vs SA : அதிரடி காட்டிய ஷெபாலி, ரிச்சா; 300 யை நெருங்கிய இந்தியா! - கோப்பையை வெல்லுமா?

post image

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பெண்கள் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடி முடித்திருக்கிறது. சிறப்பாக ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 298 ரன்களை சேர்த்திருக்கிறது.

India vs South Africa
India vs South Africa

நவி மும்பையில் மழை பெய்ததால் போட்டி இரண்டு மணி நேரம் தாமதமாகவே தொடங்கியது. தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாராதான் டாஸை வென்றிருந்தார். முதலில் பந்து வீசப்போவதாக அறிவித்திருந்தார். இது பேட்டிங்குக்கு சாதகமான பிட்ச். அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இமாலய இலக்கை எட்டி சாதனை படைத்திருக்கிறது. இதையெல்லாம் மனதில் வைத்து லாரா முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்திருக்கலாம்.

இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. அணியில் எந்த மாற்றமும் இல்லை. ஷெபாலியும் ஸ்மிருதியும் ஓப்பனிங். இருவருமே மிகச்சிறப்பாக ஆடினர். மழை பெய்தும் பௌலர்களுக்கு பிட்ச் பெரிதாக உதவவில்லை. ஆரம்பத்திலிருந்தே இருவரும் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு அடித்து அடித்து ரன்ரேட்டை 6 க்கு மேலேயே வைத்திருந்தனர். ஷெபாலி சௌகரியமாக அடித்து ஆடியதால் ஸ்மிருதி அழுத்தமில்லாமல் இலகுவாக ஆடினார்.

Shafali Varma
Shafali Varma

முதல் 10 ஓவர்களில் 64 ரன்களை சேர்த்திருந்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 104 ரன்களை எடுத்தனர். இடது கை ஸ்பின்னர்களுக்கு இந்திய அணியின் பேட்டர்கள் கொஞ்சம் திணறுகின்றனர். இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதிய கடைசிப் போட்டியிலும் நிறைய விக்கெட்டுகளை இடதுகை ஸ்பின்னருக்கு விட்டிருப்பர். இந்தப் போட்டியிலும் முதல் விக்கெட்டாக ஸ்மிருதியின் விக்கெட்டை இடது கை ஸ்பின்னரான ட்ரையான் தான் எடுத்தார். ஸ்மிருதி 45 ரன்களில் வெளியேறினார். ஷெபாலி தொடர்ந்து அதிரடியாக ஆடினார். பெரிய சிக்சர்களையெல்லாம் அடித்தார்.

சதத்தை நோக்கி செல்வார் என எதிர்பார்க்கையில் 87 ரன்களில் காகாவின் பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். இதன்பிறகு இந்தியாவுக்கு பெரிய பார்ட்னர்ஷிப்கள் வரவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தது. ஜெமிமா 24 ரன்களில் காகாவின் பந்திலும் ஹர்மன் 20 ரன்களில் லாபாவின் பந்திலும் அவுட் ஆகினர். ஆனால், இந்திய அணி பெரியளவில் தடுமாறவில்லை. தீப்தி சர்மா கடைசியில் நின்று அரைசதம் அடிக்க ரிச்சா கோஷ் அதிரடியாக 34 ரன்களை சேர்க்க, இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்களை எடுத்தது.

Deepti Sharma
Deepti Sharma

நவி மும்பை பிட்ச் முழுக்க முழுக்க பேட்டிங்குக்கு சாதகமான பிட்ச். இந்த பிட்ச்சில் 298 ரன்கள் கொஞ்சம் குறைவான ஸ்கோர் என்பது மிதாலி ராஜின் வாதம். என்ன நடக்கப்போகிறது? இந்தியா வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

``விளையாட்டில் ஆண்-பெண் பாகுபாடு இல்லை'' - கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா

தமிழகத்தின் பல பகுதிகளில் நடந்த கபடி போட்டிகளில் காயமடைந்த 8 வீரர்கள் மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்களுக்கு நம்பிக்கை அளித்து உடல் நலனை விசாரிப்பதற்காக இந்திய மகளிர் ... மேலும் பார்க்க

IPL Retentions : சென்னை அணியில் சாம்சன்; வெளியேறியது யார்? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஐ.பி.எல் மினி ஏலம் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நிலையில், அணிகள் தங்களின் டிரேடிங் அப்டேட்ஸை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். அதன்படி, சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கு வருவது உறுதியாகியிருக்கிறது.... மேலும் பார்க்க

IPL Retentions : மீண்டுமொரு சீசனில் தோனி; CSK கூண்டோடு வெளியேற்றப்போகும் வீரர்கள்? - IPL அப்டேட்ஸ்!

ஐ.பி.எல் மினி ஏலம் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்பாக ஒவ்வொரு அணியுன் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை ஐ.பி.எல் நிர்வாகத்திடம் சமர்பிக்க வேண்டும். இதற்கான கெ... மேலும் பார்க்க

'திராவிட மாடல் ஆட்சி, விளையாட்டின் பொற்காலம்!' - உதயநிதி பெருமிதம்!

சர்வதேச ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பைப் போட்டி சென்னையிலும் மதுரையிலும் வருகிற நவம்பர் 28 ஆம் தேதி முதல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலி... மேலும் பார்க்க

IPL: சென்னை அணியில் சஞ்சு சாம்சன்? விடைபெறும் ஜடேஜா?! - இந்த ட்ரேடிங் மூலம் யாருக்கு லாபம்?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடி வரும் சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் சென்னை அணி வாங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. சாம்சனுக்கு பதில் ஜடேஜாவையும் சாம் கரணையும் சென்னை அணி ராஜஸ்தானுக்கு விட்ட... மேலும் பார்க்க

உலகக் கோப்பை: ரூ.2.5 கோடி ரொக்கம், அரசு பணி, வீட்டு மனை: வறுமையைத் துரத்திய வீரமகளுக்கு அங்கீகாரம்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஐசிசி உலகக் கோப்பையை வென்று நாட்டுக்கே பெருமை சேர்த்திருக்கும் இந்தச் சூழலில், அணியில் இடம்பெற்ற வீராங்கனைகளுக்கு மாநில அரசுகள் அளித்த கௌரவம் உணர்வுப்பூர்வமானது. ஆந்திரப் ... மேலும் பார்க்க