செய்திகள் :

IND vs SA: பலவீனமான பேட்டிங் வரிசை; பூடகமாக விரக்தியை வெளிப்படுத்தும் கருண் நாயர்!

post image

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கும் சூழலில், அணியில் இடம்பெறாத இந்திய பேட்ஸ்மேன் கருண் நாயர் சமூக வலைத்தளத்தில் தனது விரக்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கருண் நாயர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்றார். ஆனால் அதன்பிறகு அணியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் தனது எக்ஸ் வலைத்தளத்தில், "சில கண்டிஷன்கள் (மைதான சூழல்) உங்களுக்கு நன்றாக தெரிந்த உணர்வைக் கொடுக்கும் - ஆனால் அங்கு இல்லாததன் மௌனம் வலியை ஏற்படுத்தும்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதனை அவர் அணியில் எடுக்கப்படாததன் விரக்தியை வெளிப்படுத்தும் பதிவாக கருதுகின்றனர்.

இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு ரஞ்சி டிராபியில் கலக்கி வருகிறார் கருண். கர்நாடகா அணிக்காக அவர் ஆடிய 5 போட்டிகளில், 100-க்கும் அதிகமான சராசரியுடன் 600 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தியுள்ளார். ஆனாலும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடருக்கு அவர் தேர்வுக்குழுவால் பரிசீலிக்கப்படவில்லை.

மாறாக, கொல்கத்தாவில் நடந்த டெஸ்டில் வாஷிங்டன் சுந்தர் 3-வது இடத்தில் பேட்டிங் இறங்கி சோதிக்கப்பட்டார். கவுகாத்தி போட்டியில் சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

Team India
Team India

கழுத்து வலி காரணமாக கில் விலகியதால் இந்திய பேட்டிங் ஆர்டர் நிலைத்தன்மையற்று பலவீனமாக உள்ளது. சாய் சுதர்சன் மூன்றாவது இடத்திலும், துருவ் ஜுரேல் நான்காவது இடத்திலும் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

கடைசியாக இங்கிலாந்துக்கு எதிராகத்தான் 2016-ஆம் ஆண்டு, முதல் இன்னிங்ஸில் 400-க்கும் அதிகமான ரன்களை விட்டுக் கொடுத்தப் பிறகு இந்தியா வெற்றி பெற்றது. சென்னையில் நடந்த அந்தப் போட்டியில் முச்சதம் அடித்து சாதனை படைத்தவர் இளம் கருண் நாயர்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இங்கிலாந்து தொடரில் நாயருக்குக் குறுகிய காலமே வாய்ப்பளிக்கப்பட்டது. அந்தத் தொடரில், பேட்டிங் வரிசையில் அவர் மூன்றாவது இடம் மற்றும் ஆறாவது இடத்திற்கு மாற்றப்பட்டுக்கொண்டே இருந்தார்.

முன்னதாக, மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து கருண் நாயர் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து பிசிசிஐ-யின் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கரிடம் கேட்கப்பட்டபோது, அனுபவம் வாய்ந்த அவரிடம் இருந்து இன்னும் அதிகமாக எதிர்பார்த்ததாக ஒப்புக்கொண்டார்.

கருண் நாயர்
கருண் நாயர்

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்கத் தவறியிருக்கும் இந்தச் சூழலில், சாய் சுதர்சன், துருவ் ஜுரேல் போன்ற இளம் வீரர்களைப் பயன்படுத்தாமல், இந்தத் தொடரில் இந்தியாவின் நிலையைப் பொறுத்து, கருண் நாயர் போன்ற அனுபவம் வாய்ந்த ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால், அது இந்திய அணிக்குச் சிறப்பாக இருந்திருக்குமோ? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்புகின்றனர்.

ஏனெனில், தற்போது சொந்த மண்ணில் இரண்டாவது முறையாக ‘ஒயிட்வாஷ்’ ஆகும் அபாயத்தை இந்தியா எதிர்கொள்வதோடு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பையும் இழக்கும் நிலையில் உள்ளது.

`அன்று கோலி விக்கெட்; இன்று சதம்' - இந்தியாவுக்கெதிராக ஜொலிக்கும் தமிழன்! Senuran Muthusamy யார்?

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகளில் ஆட இந்தியா வந்திருக்கிறது.நவம்பர் 14-ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டனில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய ... மேலும் பார்க்க

Women's Blind T20 World Cup: உலகக்கோப்பை வென்ற பார்வைசவால் கொண்ட இந்தியப் பெண்கள்; ஸ்டாலின் பாராட்டு

நேற்று பார்வை சவால் கொண்ட பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நடைபெற்றது. அதில் இந்திய அணி வெற்றி வாகையைச் சூடியுள்ளது.கொழும்பில் உள்ள பி சாரா ஓவலில் நடந்த இந்தப் போட்டியில் நேபாள அணியை ஏ... மேலும் பார்க்க

smriti mandana: தீடீரென தந்தைக்கு மாரடைப்பு; இன்று நடக்கவிருந்த ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு

கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், அவருடைய காதலரான இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது.ஆனால், திடீரென அவருடைய திருமணம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஸ்மிருதி மந்த... மேலும் பார்க்க

Ashes: டிராவிஸ் ஹெட்டின் அதிரடி சதம்!; 104 வருடங்களுக்குப் பிறகு இரண்டாவது நாளில் முடிந்தப் போட்டி!

104 வருடங்களுக்குப் பிறகு ஆஷஸ் போட்டி இரண்டாவது நாளிலேயே முடிவடைந்திருக்கிறது. ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் முதல் போட்டியில் வெற்றிப் பெற்றிருக்கிறது.ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான 74-வத... மேலும் பார்க்க

Smriti Mandhana: நடு மைதானத்தில் Proposal; ரீல்ஸில் நிச்சயதார்த்த அறிவிப்பு; திருமணம் எப்போது?

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, தன் திருமணத்துக்கு முந்தைய 'ஹல்தி' சடங்கில் சக வீராங்கனைகளுடன் இணைந்து ஆடிய துள்ளலான நடனம், இணையத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தையும... மேலும் பார்க்க