செய்திகள் :

``எந்தன் உயிர்த்துணை உந்தன் அன்பிற்கு ஏது எல்லையே?'' -மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சீமான்

post image

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மனைவி கயல் விழி இன்று (நவ.24) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

அவருக்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். சீமான் வெளியிட்டிருக்கும் பதிவில்,

"கசிந்து உள்ளம் உருகும் காதலின் மெய்ப்பொருளும் நீயே..!

நசிந்து போகாது நாளும் காக்கும் வாழ்வின் முதற்பொருளும் நீயே..!

மணக்கோலம் பூண்ட நாள் முதலாக போர்க்காலம் என்றாலும் பூக்காலம் என்றாலும் நீ தருகின்ற அன்பினில் குறையேதும் வைத்ததில்லையே..!

சீமான் தன் மனைவி கயல்விழியுடன்
சீமான் தன் மனைவி கயல்விழியுடன்

எந்தன் உயிர்த்துணை உந்தன் அன்பிற்கு ஏது எல்லையே?

இடம்மாற்றி கொண்ட இதயத்தில் இருப்பவளே!

தடுமாறும் பொழுதிலும் தடுத்தாளும் பரம்பொருளே !

இனமானப் பெரும்பணியில் இடர்பாடுகள் யாவையும் ஏற்றும் சுமந்தும் யாதுமாகி நின்றாய் நீயே..!

எனக்கு நீ இன்னொரு தாயே!

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் என்னுயிரே..!" என்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

``40 நாள் கூட ஆகல, அதுக்குள்ளயே ரோடு பொலந்துட்டு வந்துடுச்சி'' - குமுறும் அரசராம்பட்டு மக்கள்

"இந்த ரோட்டுல போறதே, இரண்டு மூன்று பஸ்கள் தான்..எப்பவாது லோடு வாகனம் போகும்.அதுக்கே இப்படின்னா, என்ன சொல்றது நீங்களே பாருங்க"கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசராம்பட்டு எனும் கிராமத்தி... மேலும் பார்க்க

S.I.R : 'திமுகவின் மேஜையில் தேர்தல் ஆணையத்தின் BLOக்கள்!' - கடுமையாக சாடும் அதிமுக, நாதக

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் தொடர்பாக இன்று சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் சார்பில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்திருந்தது. அதில், சென்னையில் S.I.R நடைமுறைப... மேலும் பார்க்க

SIR: "ஒன்றுமே புரியவில்லை, நாங்கள் மட சாம்பிராணியாக இருக்கிறோம்" - செல்லூர் ராஜூ ஆதங்கம்

SIR பணியில் நடைபெறும் குழப்பங்கள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமாரிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மனு அளித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், "SIR கணக்கெடுப்பில் வாக்குச்சாவடி நி... மேலும் பார்க்க

"திமுக-வினருக்கு தவெக என்றாலே ஒரு உறுத்தலாக இருக்கிறது" - டிடிவி தினகரன்

அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது பேசிய அவர், "எஸ்.ஐ.ஆர் பணிகள் எப்படி நடைபெறுகின்றன என்பதை வாக்காளர் பட்டியல் வெளிவரும் வரை பொறுத்து இருந்து ... மேலும் பார்க்க

`உதயநிதி ஸ்டாலினுக்கு சப்ஜெக்ட் அறிவு கிடையாது’ - சாடும் அண்ணாமலை

திருச்சியில் பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் சந்திப்பதே இல்லை. கோவையிலும், மதுரையிலும் மெட்ரோ ரயில் த... மேலும் பார்க்க

``நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே?" - எடப்பாடியை தாக்கும் முதல்வர் ஸ்டாலின்!

வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு, நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்தக்கோரி தமிழ்நாடு அரசு சார்பில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறைக்கு கோரிக்கை கடிதம... மேலும் பார்க்க