செய்திகள் :

SIR: "ஒன்றுமே புரியவில்லை, நாங்கள் மட சாம்பிராணியாக இருக்கிறோம்" - செல்லூர் ராஜூ ஆதங்கம்

post image

SIR பணியில் நடைபெறும் குழப்பங்கள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமாரிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மனு அளித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், "SIR கணக்கெடுப்பில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் முழுமையாகச் செயல்படவில்லை, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள், சத்துணவுப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.

SIR
SIR

மதுரையில் பல பகுதிகளில் SIR கணக்கெடுப்பு படிவம் வழங்கப்படவில்லை, வாக்காளரிடம் வழங்கப்பட்ட SIR படிவங்கள் பல இடங்களில் திரும்பப் பெறவில்லை, மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் 284 வாக்குச்சாவடிகளிலும் SIR படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அப்லோட் செய்துள்ளனர். இதில் எவ்வளவு படிவங்கள் திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டது என்பதைத் தெரிவிக்கவில்லை.

பல வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு SIR ஆப் செயல்படுத்த தெரியவில்லை. சிலருக்கு நெட் வசதி இல்லை, பலருக்கு ஆப் பயன்படுத்தும் வகையில மொபைல்போன்கள் இல்லை. கட்சி முகவர்கள்தான் அவர்களுக்கு உதவி செய்கிறார்கள். இறந்து போனவர்களையும், இரண்டு வாக்கு உள்ளவர்களையும் நீக்க வேண்டும் என்பதுதான் வாக்காளர் திருத்தப் பட்டியலின் நோக்கம். கணக்கெடுக்கும் பணி இப்படி நடந்தால் அந்த நோக்கமே நிறைவேறாது.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வரும் SIR பணிகள் குறித்து எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை, நாங்கள் மட சாம்பிராணியாக இருக்கிறோம், ஒரு சில வாக்குகளை மட்டும் எடுத்துவிட்டு அத்தனை வாக்குகளையும் வாக்காளர் பட்டியலில் பதிவேற்றம் செய்வதற்காக மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறதோ என்கிற அச்சம் வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என அமைச்சர் மூர்த்தி கூறி வருகிறார்.

போலி வாக்காளர்களை வைத்து திமுக வெற்றி பெறத் திட்டமிட்டுள்ளது, SIR கணக்கெடுப்பில் மாவட்ட நிர்வாகம் குழப்பங்களை ஏற்படுத்திவருகிறது, தேர்தல் ஆணையத்தின் நோக்கத்தை சிதைக்கும் வண்ணம் ஆளும் கட்சி மோசடியில் ஈடுபட்டு வருகிறது" என்றார்.

"திமுக-வினருக்கு தவெக என்றாலே ஒரு உறுத்தலாக இருக்கிறது" - டிடிவி தினகரன்

அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது பேசிய அவர், "எஸ்.ஐ.ஆர் பணிகள் எப்படி நடைபெறுகின்றன என்பதை வாக்காளர் பட்டியல் வெளிவரும் வரை பொறுத்து இருந்து ... மேலும் பார்க்க

`உதயநிதி ஸ்டாலினுக்கு சப்ஜெக்ட் அறிவு கிடையாது’ - சாடும் அண்ணாமலை

திருச்சியில் பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் சந்திப்பதே இல்லை. கோவையிலும், மதுரையிலும் மெட்ரோ ரயில் த... மேலும் பார்க்க

``நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே?" - எடப்பாடியை தாக்கும் முதல்வர் ஸ்டாலின்!

வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு, நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்தக்கோரி தமிழ்நாடு அரசு சார்பில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறைக்கு கோரிக்கை கடிதம... மேலும் பார்க்க

"அண்ணாமலை சொன்னது சரிதானா என்று 4 மாதத்தில் தெரிந்துவிடும்" - அமைச்சர் அன்பில் மகேஸ்

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி, ஆற்றுக்குள் மீன் வளத்தைப் பேணி காக்கும் வகையில் மீன் குஞ்சுகளை ஆற்றுக்குள்ளே விட்டுவருகிறோம்.... மேலும் பார்க்க

டெல்லி: காற்று மாசுக்கு எதிரான போராட்டத்தில் தடியடி; போலீஸ் மீது மிளகாய்ப்பொடி ஸ்பிரே; என்ன நடந்தது?

டெல்லியில் நாளுக்கு நாள் காற்று அதிக அளவில் மாசுபட்டு வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த செயற்கை மழையை வரவைப்பது, தண்ணீரைப் பீய்ச்சியடிப்பது போன்ற காரியங்களில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது. ஆனால் காற்று மாசுப... மேலும் பார்க்க

"பாஜக-வின் சி டீம் தான் விஜய்; ஸ்லீப்பர் செல்" - சாடும் அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் ரகுபதி, "த.வெ.க தலைவர் விஜய் ஆச்சரியகுறியாக இருந்தாலும் சரி, தற்குறியாக இருந்தாலும் சரி, அவர் எந்த குறியாக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்... மேலும் பார்க்க