Indigo: "மத்திய அரசின் அதிகார நோக்கமே இண்டிகோ நிறுவனத்தின் வீழ்ச்சிக்குக் காரணம்...
Indigo Cancelled : 'அவதியுறும் பயணிகள்; அவஸ்தைப்படும் ஊழியர்கள்' - சென்னை விமான நிலைய ஸ்பாட் விசிட்
இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம் சமீப காலமாக, விமான தாமதம், விமானப் பயணம் ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது.
நவம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 1,232 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்படிருக்கின்றன.
இதில் கடந்த 4–5 நாட்களாக தினமும் கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

சிவில் விமான போக்குவரத்து துறை கொண்டு வந்த DGCA விதிகளுக்கு ஏற்ப, இண்டிகோ நிறுவனம் தனது நெட்வொர்க்கை மறுசீரமைக்கத் தடுமாறி வருவதால் தான் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று கூறப்படுகிறது.
இண்டிகோ நிறுவனம் நாளுக்கு நாள் சரிவை நோக்கி நகரும் சூழலில் லட்சக்கணக்கான விமானப் பயணிகள் இதனால் பாதிக்கப்படுகின்றன.
சென்னை விமான நிலையம் ஸ்பாட் விசிட்
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் நிலைமை என்னவாக இருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ள கள ஆய்வு செய்திருந்தோம்.
உள்ளே போக முடியாது, போனால் வெளியே வரவும் முடியாது! இப்போதைக்கு இதுதான் சென்னை விமான நிலையத்தின் நிலைமையாக இருக்கிறது.
பல மணி நேரங்களாக ஏன் சில நாட்களாக கூட சென்னை விமான நிலையத்துக்குள் சிக்கி அவஸ்தைப் படுகிறார்கள் பொதுமக்கள்.

அவதியுறும் பயணிகள்
சிங்கப்பூரிலிருந்து கனெக்டிங் பிளைட் மூலம் தனது சொந்த ஊருக்கு திரும்ப வந்த ஒரு பெண் தனது குடும்பத்துடன் இங்கேயே சிக்கிக் கொண்டிருக்கிறார்.
சபரிமலைக்கு விமானம் மூலம் முன்பதிவு செய்ய இருந்த பக்தர்கள் அனைவரும் இப்பொழுது சபரிமலை செல்ல முடியாமல் தவித்துக் கிடக்கிறார்கள்.
பொதுமக்களின் பிரச்னைகளுக்கு அதிகாரிகள் கைவிரிக்க கிரவுண்ட் ஸ்டாஃப்கள் எனப்படும் உள்நிலை ஊழியர்கள் பொதுமக்களிடம் சிக்கி அவஸ்தைப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
குவிக்கப்பட்ட CRPF வீரர்கள்
விமான நிலையத்துக்கு உள்ளேயே நாள் கணக்கில் சிக்கித் தவிப்பவர்கள் உள்ளே உணவில்லாமல் அதிகபட்ச விலைக்கு உணவுப் பொருட்களை வாங்க வேண்டி இருக்கிறது.
சென்னை விமான நிலையத்தில் இப்பொழுது கூச்சலும் சண்டையுமாக இருக்கும் இந்த நிலையில் CRPF வீரர்களும் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இன்னும் இந்த பிரச்சனை எத்தனை நாட்கள் நீடிக்கும் என்று தெரியவில்லை.
இண்டிகோ நிறுவனம் விரைந்து இந்தப் பிரச்னையை சரி செய்ய வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக இருக்கிறது.!

















