செய்திகள் :

Indigo: "மத்திய அரசின் அதிகார நோக்கமே இண்டிகோ நிறுவனத்தின் வீழ்ச்சிக்குக் காரணம்" - ராகுல் காந்தி

post image

இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம் சமீப காலமாக, விமான தாமதம், விமானப் பயணம் ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது.

நவம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 1,232 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

இதில் கடந்த 4–5 நாட்களாக தினமும் கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

இண்டிகோ நிறுவனம்
இண்டிகோ நிறுவனம்

மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை கொண்டு வந்த DGCA விதிகளுக்கு ஏற்ப, இண்டிகோ நிறுவனம் தனது நெட்வொர்க்கை மறுசீரமைக்கத் தடுமாறி வருவதால்தான் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று கூறப்படுகிறது.

நிலைமை நாளுக்கு நாள் மோசமாகும் நிலையில், மத்திய அரசு இதில் தலையிட வேண்டும் என்ற குரல்களும் எழுந்திருக்கின்றன.

இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "மத்திய அரசின் தனி அதிகார நோக்கமே இண்டிகோ நிறுவனத்தின் வீழ்ச்சிக்குக் காரணம்.

விமான நிலையத்தில் காத்திருக்கும் பொதுமக்கள்
விமான நிலையத்தில் காத்திருக்கும் பொதுமக்கள்

விமான தாமதங்கள், சேவை ரத்துகளால் பொதுமக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு துறையிலும் 'மேட்ச் ஃபிக்சிங்' செய்யாமல் நியாயமான போட்டிகள் நடைபெற வேண்டும்” என்று ராகுல் காந்தி பதிவிட்டிருக்கிறார்.

'இதுதான் திராவிட மாடலா?' - தலைமைச் செயலகம் நோக்கி தூய்மைப் பணியாளர்கள்; கைது செய்த காவல்துறை

சென்னையில் மண்டலங்கள் 5 மற்றும் 6 ஐ சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் வேண்டியும் தனியார்மயமாக்கலை எதிர்த்தும் 100 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இந்நிலையில், இன்று குறளகம் அருகே இருந... மேலும் பார்க்க

அதிமுக: "தனிக்கட்சி ஆரம்பிப்பேன் எனச் சொல்லவே இல்லை" - ஓ.பன்னீர்செல்வம்

நாடாளுமன்றத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு பா.ஜ.க-விடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக முக்கியத்துவம் குறைந்தது.குறிப்பாக, தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியைச் சந்திக்க அனுமதி கோரியு... மேலும் பார்க்க

கொங்கு அரசியலில் பரபரப்பு: திமுக அமைச்சரை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி! - காரணம் என்ன?

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கொங்கு திருப்பதி கோவில் அமைந்துள்ளது. வீட்டு வசதி வாரியத்திற்கு உட்பட்ட நிலத்தில் கட்டப்பட்ட கோவில் அப்புறப்படுத்துவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருந்தது. இதனால... மேலும் பார்க்க

`ஆணுறை, கருத்தடை பொருள்களுக்கு வரி' - குழந்தைகள் பெற ஊக்குவிக்கும் சீன அரசு; என்ன காரணம்?

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான சீனாவில் குழந்தை பிறப்பை அதிகரிப்பதற்காக ஆணுறைகள் மற்றும் பிற கருத்தடைப் பொருட்களின் விலையை உயர்த்த அந்த நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளிய... மேலும் பார்க்க

``மதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது..?" - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

திருப்பரங்குன்றம் விவகாரம் தற்போது தமிழ்நாட்டின் பேசுபொருளாகியிருக்கிறது. திருப்பரங்குன்ற மலையில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாகஅருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு மேல் மலையில் இருக்கும் உச்ச... மேலும் பார்க்க