"மம்மூட்டிக்கு விருது கொடுக்க அவர்களுக்கு தகுதியில்லை" - தேசிய விருதுகள் குறித்த...
Maldives: 2007-ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள் மாலத்தீவில் புகைப்பிடிக்க தடை; மீறினால்?
2007-ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள், மாலத்தீவில் கண்டிப்பாக புகைப்பொருள்களைப் பயன்படுத்தவே கூடாது என்கிற புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது அந்த நாட்டு அரசு.
என்ன அறிவிப்பு?
இந்த அறிவிப்பு Tobacco Control Act-ன் இரண்டாவது திருத்தம் என்று அழைக்கப்படுகிறது.
மாலத்தீவு நாட்டின் அதிபர் முகமது முய்சு, "புதிய சட்டத்தின் படி, 2007-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்கு பின் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் புகைப்பொருள்களை வாங்கவோ, விற்கவோ அல்லது பயன்படுத்தவோ முற்றிலும் தடை" என்று அறிவித்துள்ளார்.
இந்தச் சட்டம் நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்தச் சட்டம் சுற்றுலா பயணிகளுக்கும் பொருந்தும். இவர்களிடம் அடையாளச் சான்றுகள் சரிபார்க்கப்படும்.
இதை மீறினால் 10,000 – 50,000 ரூபியோக்கள் (இந்திய ரூபாயில் ரூ.54,000 - 2,70,000) விதிக்கப்படும்.
ஏன் இந்தச் சட்டம்?
மாலத்தீவு அரசு எதிர்காலத் தலைமுறையினரை முழுமையாக புகைப்பழக்கத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில் இந்தப் புதிய சட்டத் திருத்தங்களை அமல்படுத்தியுள்ளது.
வேறு என்ன தடை?
அங்கே எல்லா வயதினருக்கும் இ-சிகரெட்டுகள், வேப்பிங் சாதனங்கள் மற்றும் புகைப்பொருள் சார்ந்த அனைத்து சாதனங்களுக்கும் தடை. புகைப்பொருட்கள் தொடர்பான விளம்பரங்கள், இறக்குமதி, உற்பத்தி, இயந்திரங்கள் முற்றிலும் தடை. 21 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், விற்பனையில் ஈடுபட்டால் கடுமையான தண்டனைகள் - அபராதம் மற்றும் சிறைத்தண்டனை - வழங்கப்படும்.

இதற்கு முன்பு...
அந்த நாட்டு அரசு அறிக்கையின் படி, ஆண்டுக்கு 240-க்கும் மேற்பட்டோர் புகைப்பழக்கத்தால் உயிரிழக்கின்றனர். இதை குறைக்கவே இந்த நடவடிக்கை.
இதற்கு முன்பு, 2022-ம் ஆண்டு 2009-ம் ஆண்டுக்கு பிறகு, பிறந்தவர்களுக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டது. அதன் பின், 2023-ம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடி மற்றும் வரி இழப்பு காரணமாக அந்த சட்டம் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.




















