செய்திகள் :

விலங்குகளுக்கான தீபாவளி எப்படி இருக்கும்? நாம் என்ன செய்யலாம்?

post image

ஒளி, மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டத்தின் திருவிழாவான தீபாவளி, மனிதர்களுக்குப் பிரகாசமான நினைவுகளைத் தந்தாலும், விலங்குகளுக்கு இது பெரும்பாலும் பயம் மற்றும் துன்பத்தின் காலமாகவே இருக்கிறது.

பட்டாசுகளின் சத்தம், செல்லப்பிராணிகள் மற்றும் தெரு விலங்குகள் இரண்டையும் கடுமையாக பாதிக்கின்றன. மனிதர்களின் கொண்டாட்டம் விலங்குகளுக்கு எப்படி திண்டாட்டமாக மாறுகிறது என்பதைப் பற்றியும் விரிவாகக் காணலாம்.

விலங்குகளை இந்த பட்டாசு சத்தம் எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து கால்நடை விரிவாக்க கல்வித்துறை பேராசிரியர் முனைவர். க. தேவகி விகடனுக்கு பகிர்ந்துகொண்டுள்ளார்.

Diwali: பட்டாசு,கொண்டாட்டம்

முனைவர். க. தேவகி கூற்றுப்படி, பட்டாசுகளின் பயங்கர சத்தம் நாய்கள், பூனைகள் போன்ற விலங்குகளுக்குக் கடுமையான பதற்றத்தையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. இதனால் அவை நடுங்குதல், மூச்சு வாங்குதல், பாதுகாப்பான இடங்களைத் தேடி ஒளிந்து கொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன.

பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் திடீர் சத்தத்தால் விலங்குகள் பீதியடைந்து சாலைகளில் ஓடும்போது வாகனங்களில் அடிபட்டு இறக்கின்றன. பல விலங்குகள் தீக்காயங்களால் பாதிக்கப்படுகின்றன.

பட்டாசு சத்தத்தால் பயந்துபோகும் பல செல்லப்பிராணிகளும், தெரு விலங்குகளும் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெகுதூரம் ஓடிவிடுகின்றன” என்று கூறுகிறார் முனைவர். தேவகி.

தீபாவளி பண்டிகையின் போது சுமார் 30% தெரு நாய்கள் காணாமல் போவதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.

எப்படி பாதுகாப்பு?

மேலும் அந்த விஷயங்களை எப்படி பாதுகாப்பாக எடுத்துபோது என்பது குறித்து விளக்குகிறார் முனைவர். க. தேவகி. இது குறித்து அவர் கூறியதாவது”தீபாவளியன்று உங்கள் செல்லப்பிராணிகளை வீட்டிற்குள்ளேயே வைத்திருங்கள். ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி, பட்டாசு சத்தம் குறைவாகக் கேட்கும் ஒரு அறையில் அவற்றுக்கு வசதியான இடத்தை ஏற்படுத்திக் கொடுங்கள்.

பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்கும்போது, விலங்குகளுக்குப் பிடித்த இசையை ஒலி அல்லது அவைகளுக்கு வழக்கமான டிவி சத்தத்தை ஏற்படுத்துவது மூலமோ, அவற்றுடன் விளையாடுவதன் மூலமோ அவற்றின் கவனத்தை திசை திருப்பலாம்.​ செல்லப்பிராணிகளுக்கு வீட்டின் பாதுகாப்பு ஓரளவிற்கு இருந்தாலும், தெரு விலங்குகளின் நிலை மிகவும் மோசமானது. அவற்றுக்கு ஒளிந்துகொள்ள பாதுகாப்பான இடங்கள் கிடைப்பதில்லை, பொதுகழிப்பறைகளில் சென்று ஒளிந்துக்கொள்ளும், அல்லது பட்டாசு சத்தம் கேட்கும் அந்த குறிப்பிட்ட இடத்திலேயே இருக்காது என்றார் முனைவர். க. தேவகி.

ஆர்ஜே தீபக்கின் தொப்பி பட்டாசு, அனிதா சம்பத்தின் ஆடம்பர ஆட்டோ, தீபாவின் குவா குவா - தீபாவளி மெமரீஸ்!

பண்டிகைகளோட ஹைலைட்ஸ்ல ஒண்ணு, சந்தோஷ நினைவுகளை உருவாக்குறது. அப்படி, சில செலிப்ரிட்டீஸ்கிட்ட அவங்களோட ஹேப்பி தீபாவளி மெமரீஸ் கேட்டோம்...ஆர். ஜே தீபக்"எனக்குப் பட்டாசு போட ரொம்பப் பிடிக்கும். ஆனா, எங்க ... மேலும் பார்க்க

Gold: தங்கம், வெள்ளி நகைகளை பிங்க் நிற காகிதத்தில் வைத்து கொடுக்கக் காரணம் என்ன தெரியுமா?

இந்தியாவின் அனைத்து நகைக்கடைகளிலும் பொதுவாக தங்கம், வெள்ளி நகைகளை பிங்க் நிறக் காகிதத்தில் வைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது ஒரு வழக்கமாகப் பின்பற்றி வருகின்றனர். ஆனால் இதற்கான காரணம் என்னவென்றும்... மேலும் பார்க்க

கொலு‌ - அக்ரஹாரம் முதல் ஆஸ்திரேலியா வரை! - நெகிழும் 60ஸ் பெண்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

`என் கடன் பலகாரம் செய்து கிடப்பதே’ என... தீபாவளியைக் கழிக்கும் பெண்களே... கேளுங்கள்!

ஒளி, உலகெங்கும் பரவுவதைப்போல, இந்தியர்களின் உள்ளமெங்கும் மகிழ்ச்சி பரவும் பண்டிகை... தீபாவளி!புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் என தீபாவளிக்கே உரித்தான கொண்டாட்டங்கள் அனைத்தும் சேரும் மையச் சரடு... உ... மேலும் பார்க்க

நன்றியுணர்வின் சக்தி : எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது? | மறந்துபோன பண்புகள் - 5

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சாலையோர வியாபாரி டூ டிஜிட்டல் படைப்பாளர்! - இளைஞரின் உத்வேக கதை #நானும்விகடனும்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க