செய்திகள் :

மோடி போன்கால்: 'இனி இந்தியா ரஷ்யாவிடமிருந்து அதிக எண்ணெய் வாங்காது; பாக். உடன் போரில்லை' - ட்ரம்ப்

post image

இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது.

மோடி - ட்ரம்ப் போன்கால்

இந்த நிலையில், நேற்று இந்திய அமெரிக்க பிசினஸ்மேன் நிகழ்ச்சி ஒன்றில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "இப்போது தான் உங்கள் பிரதமரிடம் பேசினேன். நாங்கள் வர்த்தகம் குறித்து உரையாடினோம். இன்னும் நிறைய விஷயங்கள் குறித்து பேசினோம். ஆனால், முக்கியமாக, வர்த்தகத்தைப் பற்றியே பேசினோம். அவர் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்.

மோடி - புதின்
மோடி - புதின்

எங்களுக்குள் நல்ல உறவு இருக்கிறது. அவர் இனி ரஷ்யாவில் இருந்து அதிக எண்ணெய் வாங்கப்போவதில்லை.

அவருக்கும் ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தத்தைக் காணவேண்டும்.

தொலைபேசி உரையாடலின்போது, போர் குறித்தும் கொஞ்சம் பேசினோம். வர்த்தகம் பற்றிப் பேசியதால் போர் குறித்தும் பேசமுடிந்தது. இனி இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே போர் இருக்காது. இது மிக மிக நல்ல விஷயம்" என்று‌ பேசியுள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் நிறுத்தத்திற்குப் பிறகு, வர்த்தகத்தைக் காட்டி இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக பலமுறை ட்ரம்ப் கூறிவிட்டார். இப்போது, அதே மாதிரியான கூற்றை தான் ட்ரம்ப் கூறியுள்ளார். இதற்கு இந்தியாவின் பதில் என்னவாக இருக்கும்?

பீகார் தேர்தல்: லாலுவை கைவிடாத யாதவர்கள் - அணுகுமுறையை மாற்றிய பாஜக கூட்டணி!

பீகார் சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கு பா.ஜ.க தங்கள் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை விரைவில் முடித்துக்கொண்டன. ஆனால் எதிர்க்கட்சிகளின் கூட்ட... மேலும் பார்க்க

பட்டாசு குப்பைகளை அகற்றிய எம்.பி. சச்சிதானந்தம்; உடன் சேர்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

தீபாவளி என்றாலே குதூகலம் தான் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரும் பட்டாசுகளை ஆர்வத்தோடு வெடித்து மகிழ்கின்றனர். ஒவ்வொரு வருடமும் பட்டாசுகள் எவ்வளவு அதிகமாக வெடிக்கபடுகிறதோ அதே அளவிற்கு காற்று... மேலும் பார்க்க

``குடிமக்களாகிய நமது முதன்மையான பொறுப்பு" - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

பிரதமர் மோடி குடிமக்களுக்கு சிறப்பு தீபாவளி செய்தியாக கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் ``தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன... மேலும் பார்க்க

Lokpal: '7 BMW கார்கள்':`ஊழல் பற்றி கவலைப்படாமல் ஆடம்பரங்களில் திளைக்கும் லோக்பால்'- பிரசாந்த் பூஷண்

பிரதமர், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய அரசின் உயர்மட்ட அதிகாரிகள் போன்ற நாட்டின் அதிமுக்கியத் தலைவர்கள் மீது ஊழல் புகார் எழுந்தால் அதை சுதந்திரமாக விசாரிக்க உருவாக்கப்பட்... மேலும் பார்க்க

"உங்கள் திருமண ஆர்டருக்கு காத்திருக்கிறோம்" - ராகுல் காந்தியிடம் திருமணம் செய்யச் சொன்ன கடைக்காரர்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் மிகவும் பழமையான சந்தாவாலா மிட்டாய் கடைக்கு மிட்டாய் வாங்க சென்றார்.அவரை கடை உரிமையாளர் சுஷாந்த் ஜெயின் அன்புடன் வரவேற்றார். ராஜீவ் ... மேலும் பார்க்க