செய்திகள் :

பட்டாசு குப்பைகளை அகற்றிய எம்.பி. சச்சிதானந்தம்; உடன் சேர்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

post image

தீபாவளி என்றாலே குதூகலம் தான் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரும் பட்டாசுகளை ஆர்வத்தோடு வெடித்து மகிழ்கின்றனர். ஒவ்வொரு வருடமும் பட்டாசுகள் எவ்வளவு அதிகமாக வெடிக்கபடுகிறதோ அதே அளவிற்கு காற்று மாசுபாடும், பட்டாசு குப்பைகளும் அதிகமாகிக்கொண்டே போகிறது. தீபாவளியன்று இரவே தூய்மை பணியாளர்களும் பட்டாசுக் குப்பைகளை அகற்றத் தொடங்கிவிடுகிறார்கள்.

இந்த வருடமும் நேற்று தீபாவளி வெகு விமர்சையாகக் கொண்டாடி பலரும் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். பெரிய அளவில் பேப்பர்களை ரோல் செய்து இருக்கும் பட்டாசுகளையே இளைஞர்கள் விரும்பி வாங்கி வெடித்தனர். இதனால் அதிக அளவு பட்டாசு குப்பைகள் சாலைகளில் காணப்பட்டது. மழையும் விட்டு விட்டு பெய்து வந்ததால் பட்டாசு குப்பைகள் எல்லாம் மழைநீரில் அடித்து செல்லப்பட்டு சாக்கடைகளில் தேங்கியது.

குப்பைகளை அகற்றிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்

இதனால் நேற்று இரவிலிருந்தே தூய்மைப் பணியாளர்கள் பட்டாசுக் குப்பைகள் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். குப்பைகளை அகற்றும் பணியில் அவர்களுக்கு உதவிகரமாக இருப்பதற்காகவும் மக்களுக்கு பட்டாசுக் குப்பைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்திலும் தூய்மைப் பணியாளர்களுடன் இணைந்து இன்று காலை திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தமும் குப்பைகளை அகற்றத் தொடங்கினார்.

இவருடன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த இளைஞர்களும் இணைந்து குப்பைகளை அகற்றத் தொடங்கினர். மணிக்கூண்டு கடைவீதி பகுதிகளில் கொட்டும் மழையிலும் பட்டாசு குப்பைகளை அகற்றும் வேலைகளில் ஈடுபட்டனர்.

குப்பைகளை அகற்றிய திண்டுக்கல் எம்பி

திண்டுக்கல் மாநகராட்சியில் இன்று மதியம் வரை சுமார் 150 டன் பட்டாசு குப்பைகள் தூய்மைப் பணியாளர்களால் அகற்றபட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

``குடிமக்களாகிய நமது முதன்மையான பொறுப்பு" - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

பிரதமர் மோடி குடிமக்களுக்கு சிறப்பு தீபாவளி செய்தியாக கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் ``தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன... மேலும் பார்க்க

Lokpal: '7 BMW கார்கள்':`ஊழல் பற்றி கவலைப்படாமல் ஆடம்பரங்களில் திளைக்கும் லோக்பால்'- பிரசாந்த் பூஷண்

பிரதமர், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய அரசின் உயர்மட்ட அதிகாரிகள் போன்ற நாட்டின் அதிமுக்கியத் தலைவர்கள் மீது ஊழல் புகார் எழுந்தால் அதை சுதந்திரமாக விசாரிக்க உருவாக்கப்பட்... மேலும் பார்க்க

"உங்கள் திருமண ஆர்டருக்கு காத்திருக்கிறோம்" - ராகுல் காந்தியிடம் திருமணம் செய்யச் சொன்ன கடைக்காரர்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் மிகவும் பழமையான சந்தாவாலா மிட்டாய் கடைக்கு மிட்டாய் வாங்க சென்றார்.அவரை கடை உரிமையாளர் சுஷாந்த் ஜெயின் அன்புடன் வரவேற்றார். ராஜீவ் ... மேலும் பார்க்க

"தமிழ்நாட்டில் மழை அதிகமாகும் வாய்ப்பு; போர்கால நடவடிக்கை தேவை" - திமுகவை வலியுறுத்தும் பழனிசாமி

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்யலாம் என்று சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியிருக்கிறது. மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மாலை 4 மணி வர... மேலும் பார்க்க

புதின் போன் காலுக்குப் பின், ஜெலன்ஸ்கியை நெருக்கும் ட்ரம்ப் - என்ன நடந்தது?

ரஷ்யா - உக்ரைன் போர் பொறுத்தவரையில், ஆரம்பதில் இருந்தே அமெரிக்கா உக்ரைனின் பக்கம் நின்று வருகிறது.சுமுக உறவு ஆனால், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதும், அவர் பெரிதும் ஆதரவு தந்துவருவது அவரின் நண்பர... மேலும் பார்க்க

'ஒப்பந்தம் அல்லது 155% வரி' - மிரட்டும் ட்ரம்ப்; சீனா அடிப்பணியுமா?

சீனா தான் ஏற்றுமதி செய்து வந்த சில அரிய கனிமங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. 'இந்தக் கட்டுப்பாடுகள் உலக வர்த்தகத்தைப் பாதிக்கும்' என்று அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல்... சீனப... மேலும் பார்க்க