செய்திகள் :

Rain Alert: `இரவில் கொட்டித் தீர்க்கும் கனமழை; கலக்கத்தில் மக்கள்' - ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

post image

தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக இரவு நேரங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

தண்டவாளத்தில் மண்சரிவு

தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சிறியதும் பெரியதுமாக மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் சரிந்து விழுவதால் இன்றுடன் நான்காவது நாளாக மலை ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகளில் ரயில்வே தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குன்னூர் மலைப்பாதை மற்றும் ஊட்டிக்கு செல்வதற்கான புதிய புறநகர் சாலையின் பல இடங்களிலும் மண்சரிவு ஏற்பட்டு வருகிறது.

சாலையில் மண்சரிவு

மேலும், இந்த சாலைகளில் எந்நேரத்திலும் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் மக்கள் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. சீரமைப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தெரிவித்துள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியர் லக்ஷ்மி பவ்யா தன்னீரு, " நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் மழைக் காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய 283 பகுதிகளை கண்காணிக்க

தண்டவாளத்தில் விழுந்த மரம்

42 மண்டல குழுக்கள் (Zonal Teams) அமைக்கப்பட்டு, 24 மணிநேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிலை அலுவலர்களைக் கொண்ட குழுக்கள் 6 வட்டத்திற்கும் கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்புப்படையினர் வரவழைக்கப்பட்டு, குன்னூர் வட்டத்தில் 21 நபர்களும், கோத்தகிரி வட்டத்தில் 21 நபர்களும் தயார் நிலையில் உள்ளனர். பேரிடரில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க 456 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.‌

நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும்போது பொதுமக்கள் தகவல் தெரிவிக்க மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசிஎண் 1077 மற்றும் 04232450034, 2450035க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும், வாட்ஸ் -அப் எண் 9488700588 தகவல் அளிக்கலாம்" என தெரிவித்துள்ளார்.

Rain Updates: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு Red Alert; வானிலை மையத்தின் புதிய அறிவிப்பு என்ன?

சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது சில மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது. ரெட் அலர்ட் இன்று செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப... மேலும் பார்க்க

Rain Update: எந்தெந்த மாவட்டங்களில் 24-ம் தேதி வரை மழை; முழு விவரம்

தற்போது இந்திய வானிலை மையத்தின் அறிக்கைப்படி, 'தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது'. இதனால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வருகிற 24-ம் தேதி வரையில் இடியுடன் க... மேலும் பார்க்க

Rain Updates: 24 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை; சென்னை நிலவரம் என்ன? - வானிலை மையம் தகவல்

கடந்த சில நாள்களாகவே, தமிழ்நாடு, புதுச்சேரியில் சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துகொண்டிருக்கிறது. இன்று காலை 10 மணி வரை... சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கைப்படி, இந்த வாரம் முழுவதும் தமிழ்நா... மேலும் பார்க்க

Rain Alert: ``இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள்'' - சென்னை வானிலை மையம் தகவல்

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. நேற்றைய முன்தினம் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பக... மேலும் பார்க்க

தேனி: வரலாறு காணாத கனமழை... வெள்ளக்காடான பகுதிகள்! | Photo Album

வரலாறு காணாத கனமழைவரலாறு காணாத கனமழைவரலாறு காணாத கனமழைவரலாறு காணாத கனமழைவரலாறு காணாத கனமழைவரலாறு காணாத கனமழைவரலாறு காணாத கனமழைவரலாறு காணாத கனமழைவரலாறு காணாத கனமழைவரலாறு காணாத கனமழைவரலாறு காணாத கனமழைவர... மேலும் பார்க்க

Rain Alert 2025: `கிடுகிடு வென உயரும் வைகை அணை' நீர்வரத்து விநாடிக்கு 13,000 கனஅடியாக அதிகரிப்பு

வெள்ளப்பெருக்கு வெள்ளப்பெருக்கு வெள்ளப்பெருக்கு வெள்ளப்பெருக்கு வெள்ளப்பெருக்கு வெள்ளப்பெருக்கு வெள்ளப்பெருக்கு வெள்ளப்பெருக்கு வெள்ளப்பெருக்கு வெள்ளப்பெருக்கு மேலும் பார்க்க