செய்திகள் :

தஞ்சாவூர்: தொடர் மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்; விளைந்தும் பயனில்லை; கவலையில் விவசாயிகள்

post image

டெல்டா மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தஞ்சாவூரில் இன்று அதிகாலை முதலே மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில் டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மழைநீரில் மூழ்கி கிடக்கும் நெற்பயிர்கள்
மழைநீரில் மூழ்கி கிடக்கும் நெற்பயிர்கள்

இது குறித்து விவசாயிகள் சிலரிடம் பேசினோம்.

"டெல்டா மாவட்டங்களில் முன் எப்போதும் இல்லாத வகையில் அதிக பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக தஞ்சாவூரில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஒரு மடங்கு அதிகம் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருந்தது.

உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சாகுபடி பரப்பு கூடியிருப்பதுடன் விளைச்சலும் அமோகம். ஆனால் கொள்முதலில் ஏற்படும் தாமதம், தொடர் மழை போன்றவற்றால் விவசாயிகள் பாதிப்பைச் சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை புத்தூர், நல்ல வன்னியன் குடிகாடு, காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த சுமார் 100 ஏக்கர் அளவிலான குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. வயலில் தண்ணீர் தேங்கிய நிலையில் தொடர் மழை பெய்து வருகிறது.

தண்ணீர் வயலில் இருந்து வழிவதற்கும் வாய்ப்பில்லாத சூழல். இதனால் மழையில் சாய்ந்த நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளதால் பாதிப்பு ஏற்படும். விளைந்தும் மழையால் பாதிப்பைச் சந்திக்கக் கூடிய நிலைக்கு விவசாயிகள் ஆளாகியுள்ளனர்.

விவசாயிகள்
விவசாயிகள்

நல்ல வன்னியன் குடிகாட்டில் அறுவடைக்குத் தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் முளைக்கத் தொடங்கிவிட்டன. ஏக்கருக்கு 40 மூட்டை மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் மழையால் தற்போது மகசூல் பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள் விவசாயிகள்.

ஏக்கருக்குச் சுமார் ரூ.25,000 வரை செலவு செய்திருக்கிறோம். மழை ஏற்படுத்திய பாதிப்பில் பயிர்கள் மூழ்கியதில் விளைந்தும் கூட பயன் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. வேளாண் அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து நாங்கள் சந்தித்த பாதிப்பைக் கணக்கெடுக்க வேண்டும். அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்" என்றனர்.

மகாராஷ்டிரா: "செலவு ரூ.66,000; ஆனால் கிடைத்தது ரூ.664" - கண்ணீர் வடிக்கும் வெங்காய விவசாயி

நாட்டில் வெங்காய விளைச்சல் அதிகமுள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருக்கிறது. இந்த வெங்காயம் மகாராஷ்டிராவின் புனே, நாசிக், சோலாப்பூர் மாவட்டங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. மகாராஷ்டிரா வ... மேலும் பார்க்க

ஈரோடு கடைவீதியில் ஜிலுஜிலு காத்துடன் சாரல் மழை! | Rain Album

ஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் சாரல் மழைஈரோட்டில் ... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: புவிசார் குறியீடு பெற்ற முண்டு மிளகாய்க்கு சிறப்பு உறை வெளியீடு; அஞ்சல் துறை அசத்தல்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் விளையும் மிளகாய் ரகங்களில் சிவப்பு முண்டு மிளகாய்க்குத் தனி இடம் உண்டு. வறட்சியான பகுதிகளில் செழித்து வளரும் சிவப்பு முண்டு மிளகாய் ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மாவட்... மேலும் பார்க்க

10,786 விவசாயிகள் தற்கொலை... மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறையும் இல்லை... அவமானமும் இல்லை!

அனைவருக்கும் பசுமை வணக்கம்...‘2023-ம் ஆண்டில் இந்தியா முழுவதும் 10,786 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். மகாராஷ்டிரா-38.5%, கர்நாடகா-22.5%, ஆந்திரா-8.6%, மத்தியப்பிரதேசம்-7.2%, தமிழ்நாடு-5.9% என்கிற ... மேலும் பார்க்க

பசுமை சந்தை

விற்க விரும்புகிறேன்கு.பிரபாகரன்,அணைக்கரை,தஞ்சாவூர்.96599 35506இயற்கை முறையில் விளைந்த கறுப்புக் கவுனி அரிசி.ஏ.பால்ராஜ்,கும்பகோணம்,தஞ்சாவூர்.95663 61249வாசனை சீரகச் சம்பா, கிச்சிலிச் சம்பா, தூயமல்லி அ... மேலும் பார்க்க

ஆயுத பூஜை: அரளிப்பூ கிலோ ரூ.700, மல்லிகைப்பூ ரூ.900 | மலர் சந்தையில் குவியும் மக்கள்

ஆயுத பூஜை பூக்கள் விற்பனைஆயுத பூஜை பூக்கள் விற்பனைஆயுத பூஜை பூக்கள் விற்பனைஆயுத பூஜை பூக்கள் விற்பனைஆயுத பூஜை பூக்கள் விற்பனைஆயுத பூஜை பூக்கள் விற்பனைஆயுத பூஜை பூக்கள் விற்பனைஆயுத பூஜை பூக்கள் விற்பனை... மேலும் பார்க்க