செய்திகள் :

"உங்கள் திருமண ஆர்டருக்கு காத்திருக்கிறோம்" - ராகுல் காந்தியிடம் திருமணம் செய்யச் சொன்ன கடைக்காரர்

post image

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் மிகவும் பழமையான சந்தாவாலா மிட்டாய் கடைக்கு மிட்டாய் வாங்க சென்றார்.

அவரை கடை உரிமையாளர் சுஷாந்த் ஜெயின் அன்புடன் வரவேற்றார். ராஜீவ் காந்தி காலத்தில் இருந்தே அவரது குடும்பம் எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் சந்தாவாலா மிட்டாய் கடையில்தான் இனிப்புகள் வாங்குவது வழக்கம். அதனால் ராகுல் காந்தி சந்தாவாலா மிட்டாய் கடையில் இருந்தவர்களிடம் மிகவும் உரிமையுடன் பேசினார்.

இனிப்புகள் செய்யும் இடத்திற்குச் சென்ற ராகுல் காந்தி சில நிமிடங்கள் ஜாங்கிரி செய்தார். அதன் பிறகு லட்டு உருட்டினார்.

கடை உரிமையாளர் சுஷாந்த் ஜெயின் கடையின் பாரம்பர்யம் குறித்து ராகுல் காந்திக்கு எடுத்துக் கூறினார். அதோடு ராகுல் காந்தி குடும்பத்தினர் இதற்கு முன்பு இக்கடைக்கு வந்தபோது எடுத்திருந்த புகைப்படங்களையும் காட்டினார்.

கடைக்காரர்களுடன் ராகுல் காந்தி
கடைக்காரர்களுடன் ராகுல் காந்தி

இச்சந்திப்பைத் தொடர்ந்து சுஷாந்த் ஜெயின் அளித்த பேட்டியில், ''ராகுல் காந்தி திருமணம் செய்யாமல் இருப்பது குறித்து உலகம் முழுவதும் பேசப்படுகிறது. எனவே ராகுல் காந்தியிடம் விரைவில் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டோம். உங்களது திருமணத்திற்கு எங்களுக்கு இனிப்பு ஆர்டர் கிடைக்கும் என்று காத்துக்கொண்டிருக்கிறோம் என்று சொன்னேன்.

அவர் கடைக்கு வந்ததும் தானே இனிப்புகளைச் செய்து சாப்பிட்டு பார்க்க விரும்புவதாகத் தெரிவித்தார். அவருடைய அப்பா, மறைந்த ராஜீவ் காந்திக்கு ஜிலேபி மிகவும் பிடிக்கும். அதனால் அதனை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள் என்று சொன்னேன். அதனால் அவர் ஜிலேபி செய்தார்.

அவருக்கு லட்டுகள் மிகவும் பிடிக்கும். அதனால் சார், நீங்கள் அதையும் செய்யலாம் என்று சொன்னேன். எனவே அவர் இந்த இரண்டையும் செய்தார்" என்று கடை உரிமையாளர் கூறினார்.

ராகுல் காந்தி கடை உரிமையாளர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார். அதோடு தீபாவளியை எப்படி கொண்டாடுகிறீர்கள் என்று ஊழியர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார். இந்த நிகழ்வுகளை ராகுல் காந்தி தனது எக்ஸ்தள பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

Lokpal: '7 BMW கார்கள்':`ஊழல் பற்றி கவலைப்படாமல் ஆடம்பரங்களில் திளைக்கும் லோக்பால்'- பிரசாந்த் பூஷண்

பிரதமர், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய அரசின் உயர்மட்ட அதிகாரிகள் போன்ற நாட்டின் அதிமுக்கியத் தலைவர்கள் மீது ஊழல் புகார் எழுந்தால் அதை சுதந்திரமாக விசாரிக்க உருவாக்கப்பட்... மேலும் பார்க்க

"தமிழ்நாட்டில் மழை அதிகமாகும் வாய்ப்பு; போர்கால நடவடிக்கை தேவை" - திமுகவை வலியுறுத்தும் பழனிசாமி

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்யலாம் என்று சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியிருக்கிறது. மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மாலை 4 மணி வர... மேலும் பார்க்க

புதின் போன் காலுக்குப் பின், ஜெலன்ஸ்கியை நெருக்கும் ட்ரம்ப் - என்ன நடந்தது?

ரஷ்யா - உக்ரைன் போர் பொறுத்தவரையில், ஆரம்பதில் இருந்தே அமெரிக்கா உக்ரைனின் பக்கம் நின்று வருகிறது.சுமுக உறவு ஆனால், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதும், அவர் பெரிதும் ஆதரவு தந்துவருவது அவரின் நண்பர... மேலும் பார்க்க

'ஒப்பந்தம் அல்லது 155% வரி' - மிரட்டும் ட்ரம்ப்; சீனா அடிப்பணியுமா?

சீனா தான் ஏற்றுமதி செய்து வந்த சில அரிய கனிமங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. 'இந்தக் கட்டுப்பாடுகள் உலக வர்த்தகத்தைப் பாதிக்கும்' என்று அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல்... சீனப... மேலும் பார்க்க

H1B விசா: 'இவர்கள்' 1 லட்சம் டாலர்கள் கட்ட வேண்டியதில்லை; ஹேப்பி நியூஸ் சொன்ன அமெரிக்கா

கடந்த மாதம், ஹெச்-1பி விசா கட்டணமாக 1 லட்சம் டாலர் (கிட்டத்தட்ட ரூ.90 லட்சம்) என அறிவித்தது அமெரிக்க அரசு. இது உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியைக் கிளப்பியது. இந்த விசாவைப் பெறும் 66 சதவிகிதம் பேர் இந... மேலும் பார்க்க

புதுச்சேரி டிஐஜி போட்ட `ஸ்கெட்ச்’ - வழிப்பறி, செயின் பறிப்பின்றி முடிந்த தீபாவளி; குவியும் பாராட்டு

புதுச்சேரியில் எந்தவித குற்றச் சம்பவங்களுமின்றி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முடிந்திருப்பது, மக்களை நிம்மதி பெருமூச்சு விடச் செய்திருக்கிறது. சிறிய மாநிலமான புதுச்சேரியில் நிலவும் குற்றச் சம்பவங்களுக்க... மேலும் பார்க்க