செய்திகள் :

Rajesh Exports விவகாரம்: LIC-ல் செய்த முதலீடு, காப்பீட்டிற்கு பிரச்னையா?

post image

கடந்த இரண்டு வாரங்களாகவே, பங்குச்சந்தை உலகின் பரபரப்பு டாபிக், 'ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்'.

கடந்த 3-ம் தேதி, செபி இந்த நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தது. அதாவது, செபி இந்த நிறுவனத்தின் 2020-21 நிதியாண்டு முதல் 2024-25 நிதியாண்டு வரையிலான வருமானக் கணக்கைப் பார்த்துள்ளது.

அந்த வருமானத்தில் கிட்டத்தட்ட 97-99 சதவிகிதம் போலியானதாகவும், மிகைப்படுத்தப்பட்டதாகவும் உள்ளது. மேலும், இந்த விசாரணையில் இந்த நிறுவனம் செபி உடன் சரியாக ஒத்துழைக்கவும் இல்லை என்று கூறப்படுகிறது.

ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்
ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்

இதனால், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் தற்போதைக்கு பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது செபி.

இதில் எல்.ஐ.சி பிரச்னை எங்கு வருகிறது என்றால், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் எல்.ஐ.சி சுமார் 10 சதவிகித பங்குகளை வைத்துள்ளது.

ஒரு அரசுத் துறை நிறுவனம் முதலீடு செய்யும் போது, முதலீடு செய்யும் நிறுவனம் குறித்து விசாரிக்காதா... தெரிந்துகொள்ளாதா என்பது தான் எல்.ஐ.சியைத் தற்போது சுழற்றியடிக்கும் கேள்வி.

ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் பிரச்னை தங்களைப் பாதிக்குமோ என்று எல்.ஐ.சி பங்குகளில் முதலீடு செய்திருப்பவர்களும், காப்பீடு செய்திருப்பவர்களும் மிகவும் பயப்படுகிறார்கள்.

இதற்கு பொருளாதார நிபுணர்கள் சொல்லும் பதில்...

"2026-ம் ஆண்டு மார்ச் மாதத் தரவுகளின் படி, ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸின் மிகப்பெரிய பங்குத்தாரர் எல்.ஐ.சி நிறுவனம். ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸின் 10.8 சதவிகித பங்குகள் எல்.ஐ.சியிடம் தான் இருக்கிறது.

எல்.ஐ.சி நிறுவனம் பல லட்சம் கோடி ரூபாயை நிர்வகித்து வருகிறது. அப்படி பார்த்தால், எல்.ஐ.சி நிறுவனம் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸில் முதலீடு செய்திருப்பது சிறு தொகையே.

எல்.ஐ.சி
எல்.ஐ.சி

ஒட்டுமொத்த எல்.ஐ.சி முதலீடுகள், வருமானம், வளர்ச்சிகள் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸைச் சார்ந்திருக்கவில்லை.

அதனால், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் பிரச்னை சில நாள்களுக்குத் தான் எல்.ஐ.சியைப் பாதிக்கும். அதன் பின், குறிப்பிட்ட இந்தப் பிரச்னையில் இருந்து எல்.ஐ.சி மீண்டுவிடும்.

ஆக, எல்.ஐ.சி பங்குகளில் முதலீடு செய்திருப்பவர்களும், எல்.ஐ.சியில் காப்பீடு செய்திருப்பவர்களும் பயப்படத் தேவையில்லை".

பங்குச் சந்தை இறக்கத்தில் SIP-யை நிறுத்துவது புத்திசாலித்தனமா? இதனால் லாபம் கிடைக்குமா?

காய்கறி சந்தை: தக்காளி விலை 1 கிலோ ரூ.50... நீங்கள் ஒரு கிலோ தக்காளியை வாங்குகிறீர்கள். 30 நாள்களுக்குப் பிறகு... தக்காளி விலை 1 கிலோ ரூ.25... 'சூப்பர்' என்று நினைத்து, நீங்கள் ஒரு கிலோ தக்காளிக்குப் ... மேலும் பார்க்க

Single Parent: குழந்தை எதிர்காலப் பாதுகாப்பிற்கு ஆயுள் காப்பீடு எவ்வளவு வேண்டும்?|பணம் வளர்ப்போம்

ஒருவர், ஒரு சம்பாத்தியம் என்று ஒரு வண்டி மாட்டை நம்பி தான் சிங்கிள் பேரன்டுகளின் வாழ்க்கை ஓடும். அதனால், அந்த ஒருவர் மிகப் பாதுகாப்பாகவும், புத்திசாலித்தனத்துடனும் இருக்க வேண்டும். அதற்கான ரூட்டைக் கா... மேலும் பார்க்க

சவுதி வாழ் NRI-களுக்கான ரிட்டைர்மென்ட் பிளான்: 50+ வயதினர் கவனிக்க வேண்டிய 4 விஷயங்கள்!

சவுதி அரேபியாவில் பல வருடங்களாக உழைத்து, சேமித்த பணத்துடன் தாயகம் திரும்பத் திட்டமிடும் என்.ஆர்.ஐ-களுக்கு (NRIs) ஓய்வுகாலத் திட்டமிடல் என்பது மிக முக்கியமான ஒன்று. 50 வயதைத் தாண்டியவுடன், 'கையிலிருக்க... மேலும் பார்க்க

Single Parent: உங்க குழந்தை லைஃப்ஸ்டைலை மாற்றாமல் இருக்க, நீங்க வலையில் மாட்டாதீங்க|பணம் வளர்ப்போம்

நாட்டிற்கு பட்ஜெட் எவ்வளவு முக்கியமோ... அதே அளவிற்கு வீட்டிற்கும் பட்ஜெட் மிக முக்கியம். அனைத்து செலவுகளும் 'நாம்' தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற போது, சிங்கிள் பேரன்டுகளுக்கு பொறுப்பு சற்று கூ... மேலும் பார்க்க

ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்: மோசடிக் குற்றச்சாட்டுக்கு உள்ளான நிறுவனத்தில் LIC முதலீடு - பின்னணி என்ன?

ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்... கடந்த சில வாரங்களாக இந்தப் பங்கு நிறுவனத்தின் பெயர் பங்குச் சந்தையில் தினமும் அடிப்பட்டுக் கொண்டிருக்கிறது. காரணம், இந்த நிறுவனப் பங்கின் விலை தினமும் 5% முதல் 10% இறங்கி, லோயர... மேலும் பார்க்க

Retirement: 'பாதுகாப்பு + வளர்ச்சி+ இரண்டாவது வருமானம்'- அரசு ஊழியர்களுக்கான ஓய்வுக்காலத் திட்டமிடல்

"அரசு வேலை... நிரந்தர வருமானம், ஓய்வு பெற்றால் நிம்மதியான பென்ஷன்!" - ஒரு தலைமுறைக்கு முன்னால் வரை தமிழ்நாட்டின் நடுத்தரக் குடும்பங்களின் ஆகச் சிறந்த கனவு இதுவாகத்தான் இருந்தது. ஆனால், பழைய பென்ஷன் தி... மேலும் பார்க்க