செய்திகள் :

RCB: 'PowerPlay விக்கெட்கள், ஷெப்பர்ட்டின் Impact, நல்ல பவுன்ஸ்' - வெற்றி குறித்து கேப்டன் பட்டிதார்

post image

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் 1 ஆட்டத்தில் பெங்களூரு - குஜராத் அணிகள் மோதியிருந்தன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குச் செல்லும்.

தோல்வியைச் சந்திக்கும் அணி, எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் குவாலிஃபையர் -2 போட்டியில் விளையாடும் எனும் நிலையில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றிருந்தது.

RCB
RCB

போட்டிக்குப் பின்னர் பேசிய அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறியதாவது, ''இது எங்களுக்கு ஒரு சிறந்த போட்டியாக இருந்தது. குறிப்பாக பேட்ஸ்மேன்கள் இந்தப் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய விதம் மிகவும் மகிழ்ச்சி அளித்தது.

நாங்கள் மைதானத்தில் எங்கள் உடல் மொழியால் எதிரணிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தோம். அந்த மனநிலை ஒவ்வொரு பேட்ஸ்மேனிடமும் இருந்தது.

என்னுடைய பேட்டிங் பற்றி சொன்னால், ஆரம்பத்தில் 8 முதல் 10 பந்துகள் வரை பிட்ச் எப்படி நடக்கிறது, பந்து எப்படி வருகிறது என்பதைக் கவனிப்பேன். அதன்பிறகு தெளிவான மனநிலையுடன் விளையாடுவேன். விக்கெட்டைப் பற்றி அதிகம் கவலைப்பட மாட்டேன். எப்போதும் பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கவே முயற்சிப்பேன்.

RCB

பந்துவீச்சு குறித்து சொல்ல வேண்டும் என்றால், இந்த பிட்ச்சில் பெரிய சிக்சர்கள் அடிப்பது எளிதல்ல. நல்ல பவுன்ஸ் இருந்தது. எங்கள் பந்துவீச்சாளர்கள் திட்டமிட்டபடி ஸ்டம்ப் லைனில் அதிகமாகப் பந்துவீசியது உதவியாக இருந்தது. GT அணியின் முக்கிய மூன்று பேட்ஸ்மேன்களையும் பவர் ப்ளேயிலேயே அவுட் செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். அது வெற்றிகரமாக அமைந்தது.

ரோமரியோ ஷெப்பர்டை இம்பாக்ட் பிளேயராக கொண்டு வந்தது, நடு ஓவர்களில் அவர் எப்படி பந்துவீசுவார் என்பதைச் சோதிப்பதற்காகவே. இறுதிப்போட்டிக்குள் செல்லும் முன் அது நல்ல முயற்சியாக இருந்தது. இப்போது இறுதிப்போட்டிக்குத் தயாராக இருக்கிறோம்” என்று பேசியிருந்தார்.

மனு பாக்கரை ஒலிம்பிக் நாயகியாக்கிய `குரு' - கோச் ஜஸ்பால் ராணா திடீர் மரணம்; சாம்பியனை இழந்த இந்தியா

இந்தியாவின் துப்பாக்கிச் சுடுதல் ஜாம்பவானும், பாரீஸ் ஒலிம்பிக் நாயகி மனு பாக்கரின் பயிற்சியாளருமான ஜஸ்பால் ராணா (49), உடல்நலக்குறைவால் திடீரென காலமானார். டெல்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்ச... மேலும் பார்க்க

Praggnanandhaa: நார்வே செஸ் தொடரில் கெய்மரை வீழ்த்தி பட்டம் வென்ற பிரக்ஞானந்தா; வரலாற்று சாதனை!

நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார் பிரக்ஞானந்தா. நார்வே செஸ் போட்டி மே 25 முதல் ஜூன் 5ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில் குகேஷ், பிரக்ஞானந்தா, மாக்னஸ் கால்சன் வின்சென்ட் கெய்மர்... மேலும் பார்க்க

Praggnanandhaa: நார்வே செஸ் பட்டம் வென்ற முதல் இந்தியர்; வரலாற்று சாதனை படைத்த பிரக்ஞானந்தா! |Live Updates

நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார் பிரக்ஞானந்தா. நார்வே செஸ் போட்டி மே 25 முதல் ஜூன் 5ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில் குகேஷ், பிரக்ஞானந்தா, மாக்னஸ் கால்சன் வின்சென்ட் கெய்மர்... மேலும் பார்க்க

வடகொரிய மகளிர் கால்பந்து அணி வரலாற்றுச் சாதனை! அதிபர் கிம் ஜாங் உன்னுடன் கொண்டாடிய அரிய காட்சி

உலக நாடுகளை எப்போதுமே தனது ராணுவ பலத்தால் அதிரவைக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், முற்றிலும் ஒரு மாறுபட்ட நெகிழ்ச்சியான கோணத்தில் உலகிற்கு காட்டியுள்ளனர் அந்நாட்டு மகளிர் கால்பந்து அணியினர். 'ஏஎப்ச... மேலும் பார்க்க

ஒண்ணு இல்ல, ரெண்டு! ஒரே தொடரில், கார்ல்சனின் சொந்த ஊரில் இருமுறை வீழ்த்தி பிரக்ஞானந்தா செய்த சம்பவம்

செஸ் உலகின் சக்கரவர்த்தி என வர்ணிக்கப்படும் மேக்னஸ் கார்ல்சனை, அதுவும் அவரது சொந்த மண்ணில், ஒரே தொடரில் இருமுறை வீழ்த்துவதெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத சாதனை. அந்த அசாத்திய சாதனையை நிகழ்த்திக்... மேலும் பார்க்க

'காலத்துக்கு ஏத்த மாதிரி மாறனும்!' - 38 வயதில் விராட் கோலி எப்படி சாதித்தார்?

ஆர்.சி.பி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் ஆகியிருக்கிறது. விராட் கோலியின் நீண்ட கால கனவு இது. ஆனால், அவருடைய கேப்டன்சியில் இந்த சாதனையை அவரால் நிகழ்த்தவே முடியவில்லை. ரஜத் பட்டிதார் வந்த பிற... மேலும் பார்க்க