`முதல்வரே பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டிய கட்டாயம்...
RCB: 'PowerPlay விக்கெட்கள், ஷெப்பர்ட்டின் Impact, நல்ல பவுன்ஸ்' - வெற்றி குறித்து கேப்டன் பட்டிதார்
ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் 1 ஆட்டத்தில் பெங்களூரு - குஜராத் அணிகள் மோதியிருந்தன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குச் செல்லும்.
தோல்வியைச் சந்திக்கும் அணி, எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் குவாலிஃபையர் -2 போட்டியில் விளையாடும் எனும் நிலையில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றிருந்தது.

போட்டிக்குப் பின்னர் பேசிய அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறியதாவது, ''இது எங்களுக்கு ஒரு சிறந்த போட்டியாக இருந்தது. குறிப்பாக பேட்ஸ்மேன்கள் இந்தப் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய விதம் மிகவும் மகிழ்ச்சி அளித்தது.
நாங்கள் மைதானத்தில் எங்கள் உடல் மொழியால் எதிரணிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தோம். அந்த மனநிலை ஒவ்வொரு பேட்ஸ்மேனிடமும் இருந்தது.
என்னுடைய பேட்டிங் பற்றி சொன்னால், ஆரம்பத்தில் 8 முதல் 10 பந்துகள் வரை பிட்ச் எப்படி நடக்கிறது, பந்து எப்படி வருகிறது என்பதைக் கவனிப்பேன். அதன்பிறகு தெளிவான மனநிலையுடன் விளையாடுவேன். விக்கெட்டைப் பற்றி அதிகம் கவலைப்பட மாட்டேன். எப்போதும் பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கவே முயற்சிப்பேன்.

பந்துவீச்சு குறித்து சொல்ல வேண்டும் என்றால், இந்த பிட்ச்சில் பெரிய சிக்சர்கள் அடிப்பது எளிதல்ல. நல்ல பவுன்ஸ் இருந்தது. எங்கள் பந்துவீச்சாளர்கள் திட்டமிட்டபடி ஸ்டம்ப் லைனில் அதிகமாகப் பந்துவீசியது உதவியாக இருந்தது. GT அணியின் முக்கிய மூன்று பேட்ஸ்மேன்களையும் பவர் ப்ளேயிலேயே அவுட் செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். அது வெற்றிகரமாக அமைந்தது.
ரோமரியோ ஷெப்பர்டை இம்பாக்ட் பிளேயராக கொண்டு வந்தது, நடு ஓவர்களில் அவர் எப்படி பந்துவீசுவார் என்பதைச் சோதிப்பதற்காகவே. இறுதிப்போட்டிக்குள் செல்லும் முன் அது நல்ல முயற்சியாக இருந்தது. இப்போது இறுதிப்போட்டிக்குத் தயாராக இருக்கிறோம்” என்று பேசியிருந்தார்.
















