செய்திகள் :

Sexual Abuse: `வழி நெடுக வலியின் சத்தமும்; அழுகுரலின் நடுக்கமும்' #Hersafety

post image

கோவையில் தனது நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த முதுகலை முதலாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவியை கத்தி முனையில் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது.

Abuse
Abuse

அந்தச் சம்பவம் பலரையும் நடுங்க வைத்திருக்கிறது. ஏர்போர்ட் பின்னாடி உள்ள அந்த இருட்டான காட்டுப் பகுதியில் இரவு 11 மணிக்கு காரில் அமர்ந்து நண்பருடன் பேச என்ன அவசியம் இருக்கிறது? அங்கே ஆள் நடமாட்டம் இருக்காதுங்கிறது அந்தப் பெண்ணின் நண்பருக்குத் தெரியாதா?

அப்படி தெரிந்திருந்தும் இவரை ஏன் அங்கே அழைத்துச் சென்றார்? இரவு அத்தனை மணிக்கு மேல் பேச என்ன இருக்கிறது? அப்படிப் பேசியே தீரவேண்டும் எனில் காரில் போய்க் கொண்டே பேசியிருக்கலாமே? ஆமா, ஆடையின்றி பெண் மயக்க நிலையில் இருந்ததாக சொன்னார்களே உண்மையா? இன்னும் பலப்பல கேள்விகள்!

ஒரு பெண் பாலியல் ரீதியாக ஏதேனும் பிரச்னைகளைச் சந்தித்தால் உண்மையில் இந்தச் சமூகம் முதலில் தன்னுடைய குற்றப்பத்திரிகையை எழுதுவது அந்தப் பெண்ணிடமே! இத்தனைக் கேள்விகளை அந்தப் பெண்ணைப் பார்த்து கேட்கும் நபர்களால் அந்தப் பெண்ணைக் குதறிவிட்டு சென்றவர்களை நோக்கி ஒரு கேள்வியையும் எழுப்பவில்லையே ஏன்?!

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

` நான்

என் நண்பனுடன் பேசிக் கொண்டிருந்தேன்...

என்னை ஏன் நீங்கள் மூவரும் இழுத்துச் சென்றீர்கள் அண்ணா?

பெண் உறுப்பென்றால் போதுமா...

'ஆணாதிக்கமும் அதிகாரமும் உள்ள என்னை விட நீ

பலமானவளா' என்று நினைத்து வீட்டீர்களா?

என்னை விட்டுவிடுங்கள்!

நான் என் நண்பனுடன் செல்ல வேண்டும்...

நீங்கள் அவனை அடித்த வலியிலும் அவன் என்னைத் தேடிக் கொண்டிருப்பான்...

நாங்கள் நாளையும் சிரித்துப் பேசுவோம்..

அய்யோ... அப்பொழுதும் என்னை இப்படித்தான் துன்புறுத்துவீர்களா?

அவ்வளவு கெஞ்சினேனே...

வலிக்குது அண்ணா என்று கதறியது கேட்கவே இல்லையா உங்களுக்கு?

இப்பொழுது உங்களுடைய போதையிலிருந்து நீங்கள் மீண்டு விட்டீர்கள்!

நான்...

நான்...

நான்...

நீங்கள் குதறியதிலிருந்து எழக் கூட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன்...

இனி...

இனி...

இனி...

எப்போதும் போல என் மேல் தானே இந்தச் சமூகம் குறை சொல்லும்!

ஆம்...

குறை சொல்லும்! குறை சொல்லும்!

நீங்களே உயிரோடு இருக்கிறீர்கள்...

எனக்கென்ன?

எனக்கென்ன?

தலை நிமிர்ந்து வாழப் பழகுவேன்!

குண்டுகள் காலோடு நின்றுவிட்டதா...?

இல்லை!

உங்கள் தலைக்குள்ளே இருக்கும் ஆண் மிருகத்தைக்

கொல்லும் வரைக்கும்

எனக்கு நீங்கள் செய்த

அநீதிக்காகப் போராடுவேன்!'

அந்த இருட்டு இடத்தின் மீது இப்போது வெளிச்சம் படர்ந்திருக்கிறது. ஆனால், வழி நெடுக வலியின் சத்தமும்... அழுகுரலின் நடுக்கமும் அங்குள்ள முட் செடிகளைக் கூட கருகச் செய்திருக்கிறது...

நிச்சயம் அந்த மாணவி இதிலிருந்து மீண்டு வருவாள்!

குஜராத்: கணவனைக் கொன்று கிட்சனில் புதைத்த மனைவி; அதன்மீது நின்று தினமும் சமைத்ததாக பகீர் வாக்குமூலம்

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகில் உள்ள சர்கேஜ் என்ற இடத்தில் தனது மனைவியோடு வசித்து வந்தவர் மொகமத் இஸ்ரேயல். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மொகமத் கொத்தனார் வேலை செய்து வந்தார். திடீரென கடந்த ஒரு வருடத்தி... மேலும் பார்க்க

தூத்துக்குடி: பெண்ணை தாக்கியதாக புகார்; ஜி.பி.முத்து மற்றும் குடும்பத்தினர் 4 பேர் மீது வழக்கு

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பெருமாள்புரம் கூலத்தெருவைச் சேர்ந்தவர் முத்து மகேஷ். இவரது மனைவி பால அமுதா. கடந்த 2 நாட்களுக்கு முன்பு முத்து மகேஷ் தனது மோட்டார் சைக்கிளில் தெருவில் சென்று கொண்டிருந்த... மேலும் பார்க்க

தூத்துக்குடி: "வேலைக்கு அழைத்துச் செல்லாததால் கொன்றேன்" - பெயிண்டர் கொலை வழக்கில் பகீர் வாக்குமூலம்

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. பெயிண்டிங் காண்ட்ராக்டரான இவர், அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், வீடுகளில் பெண்டிங் காண்ட்ராக்ட் எடுத்து செய்து வந்துள்ளார். இவர... மேலும் பார்க்க

மின்வேலியில் சிக்கி உயிரிழந்த இருவரை கிணற்றில் வீசி மறைத்ததாக இருவர் கைது - சாத்தூரில் துயரம்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள நடுவப்பட்டி கெங்கையம்மன் கோயிலுக்கு திருமணத்திற்காக சிவலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் தனது உறவினர்களுடன் கடந்த 31 ஆம் தேதி இரவு சென்றுள்ளார்.இ... மேலும் பார்க்க

Dialysis செய்தவருக்கு HIV தொற்று ரத்தம்; உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 46 வயதான பெண் ஒருவரின் (பெயர் மறைக்கப்பட்டுள்ளது) இரண்டு சிறுநீரகங்களும் 2011 ஆம் ஆண்டு செயலிழந்துள்ளன. கணவரின் பராமரிப்பில் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ... மேலும் பார்க்க

டேட்டிங் ஆப்பில் பழகிய பெண்ணை இரவில் மிரட்டி கொள்ளை; போலீஸ்காரர் மகன் உடந்தை - கோவையில் அதிர்ச்சி

கோவை விமான நிலையம் அருகே தனியார் கல்லூரி மாணவி கடந்த நவம்பர் 2-ம் தேதி 3 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதே நாள் கோவையில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 25 வயது ... மேலும் பார்க்க