செய்திகள் :

SIR : முதல்வராக அல்ல... 'வழக்கறிஞராக' களமிறங்கும் மம்தா - வழக்கின் 5 முக்கிய புள்ளிகள்!

post image

தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர திருத்தத்தைக் கடுமையாக எதிர்க்கும் முக்கிய மாநிலங்களில் ஒன்று - மேற்கு வங்கம்.

இந்தத் திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி.

SIR
SIR
மம்தா பானர்ஜி தாக்கல் செய்துள்ள மனுவின் முக்கிய சாராம்சங்கள்...

> மம்தாவின் மனு அரசியல் சாசனம் பிரிவு 32-ன் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு அடிப்படை உரிமைகளை அமல்படுத்துவதற்கான உச்ச நீதிமன்றத்தின் உரிமையைக் குறிப்பிடுகிறது.

> இந்த ஆண்டு நடக்க உள்ள மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் ஏற்கெனவே இருக்கும் வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தான் நடக்க வேண்டும். எஸ்.ஐ.ஆர் பட்டியலின் அடிப்படையில் தேர்தல் நடக்க கூடாது.

> எஸ்.ஐ.ஆர் நடைமுறையின் போது, வாக்காளர் அட்டையில் உள்ள சின்னச் சின்ன எழுத்துப் பிழைகளுக்கு எல்லாம் தேர்தல் ஆணையம் வழக்கு தொடுக்கக்கூடாது.

> Suo Moto அடிப்படையில், ஆவணங்களில் உள்ள தகவலின் படி, இந்த எழுத்துப்பிழைகள் தானாகச் சரி செய்யப்பட வேண்டும்.

> அங்கீகரிக்கப்பட்ட துறைகளால் வழங்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் எஸ்.ஐ.ஆர் நடைமுறையில் ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

'வழக்கறிஞராக' மம்தா பானர்ஜி

அடிப்படையில், மம்தா பானர்ஜி ஒரு வழக்கறிஞர். அவர் 2003-ம் ஆண்டு வரை, வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். அதன் பின் தான், தீவிர அரசியலில் களமிறங்கினார்.

இதை வைத்து, எஸ்.ஐ.ஆர் வழக்கில் தனக்கு வாதாட அனுமதி அளிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தின் அனுமதி கேட்டுள்ளார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

'மேற்கு வங்கத்தின் முதல்வராகவும், திரிணாமுல் காங்கிரஸின் தலைவராகவும் வழக்கு சம்பந்தமான தகவல்களும், நீதிமன்ற நடைமுறைகளும் நன்கு தெரியும்' என்பது தான் மம்தா கோரிக்கையின் முக்கிய அம்சம்.

இதற்கான விசாரணை இன்று மதியம் 1 மணிக்கு நடக்க உள்ளது. இந்த விசாரணையை இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, விபுல் பஞ்சோலி அமர்வு விசாரிக்க உள்ளது.

`4 சுவருக்குள் முடிந்திருக்க வேண்டியது' பூதாகரமாக்கிய அண்ணாமலை - விலகல் அறிவிப்பின் பின்னணி!

சட்டமன்ற தேர்தல் பரபரப்புகளால் அரசியல் களம் சூடாகியுள்ளது. மதுராந்தகம் பொதுக்கூட்டத்தை நடத்தி தெம்புடன் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணியில், அண்ணாமலை 6 தொகுதிகளுக்கான பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகியிர... மேலும் பார்க்க

"ஒரு கட்சி தலைவருக்கு நாலு விஷயங்கள் தெரிய வேண்டாமா?" - விஜய்க்கு எடப்பாடி பதிலடி!

கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதற்கட்டமாக 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருந்தார்.குறிப்பாக திமுக ஆட்சியில் மாதந்தோறும் 1000 ரூபாயாக வழங்கப்படும் உதவித்த... மேலும் பார்க்க

``பிரதமர் வந்தால் நானே நேரில் சென்று இதை வழங்குவேன்" - நரவானே எழுதிய புத்தகம் குறித்து ராகுல் காந்தி

சீன ஊடுருவல் குறித்தும், அப்போது ராணுவத் தளபதியாக இருந்த நரவானே, தான் சந்தித்த சவால்கள் குறித்தும், அரசின் சில நடவடிக்கைகள் குறித்தும் 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி' என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார... மேலும் பார்க்க

'ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம் டு கல்விக்கடன் ரத்து' - 2ம் கட்ட வாக்குறுதிகளை அறிவித்த எடப்பாடி

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிகொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் என அரசியல் களம் அனல் பறக்கிறது.இது ஒருபுறம் இருக்... மேலும் பார்க்க

``ராகுல் கேள்விகளைக் கண்டு மத்திய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது?" - முதல்வர் ஸ்டாலின்

சீனா ஊடுருவல் குறித்தும் அப்போது இராணுவத் தளபதியாக இருந்த நரவானே சந்தித்த சவால்கள் குறித்தும், அரசின் சில நடவடிக்கைகள் குறித்தும் 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆ டெஸ்டினி' என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அந்த ... மேலும் பார்க்க

”இன்று அரசியலுக்கு வரக்கூடிய நடிகர்கள் அரசியலிலும் நடிக்கிறார்கள்!” - ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முந்தைய காங்கிரஸ் ஆட்சியைவிட பிரதமர் மோடி ஆட்சியில்தான் தமிழகத்துக்கு அதிக நிதி வந்... மேலும் பார்க்க