செய்திகள் :

'அணு ஆயுத சோதனை அமெரிக்கா செய்தால் நாங்களும் செய்வோம்' - தூண்டிய ட்ரம்ப்; சீறும் ரஷ்யா

post image

'ரஷ்யாவும், சீனாவும் ரகசியமாக அணு ஆயுத சோதனை செய்கின்றனர். அதனால், நானும் அணு ஆயுத சோதனைக்கு உத்தரவிட்டிருக்கிறேன்' என்று சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு குண்டை தூக்கிப்போட்டார்.

இதை ஆரம்பத்திலேயே ரஷ்யாவும், சீனாவும் மறுத்துவிட்டது. இதை மீண்டும் தற்போது உறுதி செய்துள்ளது ரஷ்யா.

டிமிட்ரி பெஸ்கோவ்
டிமிட்ரி பெஸ்கோவ்

என்ன சொல்கிறது ரஷ்யா?

தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில், ரஷ்யாவின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், "அணு ஆயுத சோதனைகளுக்கு உள்ள தடையை ரஷ்யா பின்பற்றி வருகிறது என்பதை ரஷ்ய அதிபர் புதின் தொடர்ந்து கூறிவருகிறார். நாங்கள் அணு ஆயுத சோதனையைச் செய்யவில்லை.

ஆனால், உலகில் வேறு ஏதாவது நாடு அணு ஆயுத சோதனை செய்தால், ரஷ்யாவும் செய்யும். அப்போது தான் பேலன்ஸ் பண்ண முடியும். இது மிக மிக முக்கியம். இதை செய்வதன் மூலம் உலக அளவிலான பாதுகாப்பை உறுதி செய்யலாம்" என்று பேசியுள்ளார்.

உலக அளவில் ட்ரம்ப் வரி தொடங்கி அணு ஆயுதம் வரை பல பல புது பிரச்னைகளை கிளப்பி வருகிறார். இவை எதில் போய் முடியுமோ?

Ironman 70.3: அண்ணாமலை கலந்துகொண்ட 'அயர்ன்மேன்' போட்டி; பிரதமர் மோடி புகழாரம்!

ஒவ்வொரு ஆண்டும் உலக ட்ரையத்லான் கார்ப்பரேஷன் (World Triathlon Corporation - WTC) நடத்தும் இந்த ஆண்டுக்கான 'அயர்ன் மேன் 70.3' நிகழ்ச்சி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கோவாவில் நடைபெற்றது. மனிதர்களின் உடல், ம... மேலும் பார்க்க

SIR: ``வாக்குரிமை பறிக்கப்படும் அபாயம்... அச்சமாக இருக்கிறது" - முதல்வர் ஸ்டாலின் சொல்லும் காரணம்

பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளைத் தொடங்கியிருக்கிறது. பீகாரில் 64 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், பல்வேறு விளக்கங்களையும் தேர்தல் ஆ... மேலும் பார்க்க

மத்திய அரசின் விருது: ``நள்ளிரவிலும் பாதுகாப்பான பயணம்" - அமைச்சர் சிவசங்கரை பாராட்டிய முதல்வர்!

இந்தியாவிலேயே சிறந்தப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம் என மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு விருதளிக்கப்பட்டிருக்கிறது. சென்னையின் பொதுப் போக்குவரத்து அமைப்பின் செயல்திறன், அணுகுமுறை, உள்ளடக்கம் ம... மேலும் பார்க்க

``மனோ தங்கராஜ் கலவரம் செய்ய முயற்சி செய்கிறார்'' - பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

மனோ தங்கராஜ்1966 நவம்பர் 7-ம் தேதி பசுவதைத் தடைச் சட்டத்தை எதிர்த்த காரணத்தால் ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனசங்கம் போன்ற அமைப்புகள், பெருந்தலைவர் காமராஜரை கொலை செய்ய முயன்றதாகவும், இதில் 8 பேர் படுகொலை செய்... மேலும் பார்க்க