செய்திகள் :

’டாக்ஸி ஓட்டுநர்களின் அட்டூழியம்'- கோவா சென்ற ஜெர்மன் சுற்றுலா பயணியின் வீடியோ வைரல்

post image

'கோவா மைல்ஸ்' என்ற செயலி மூலம் கார் புக் செய்த ஜெர்மன் சுற்றுலா ஜோடியை உள்ளூர் டாக்சி ஓட்டுநர்கள் வழிமறித்து துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய முயன்றதற்காக அவர்களைப் பின்தொடர்ந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் அவர்கள் ஆன்லைனில் புக் செய்து பயணித்த டாக்ஸின் ஓட்டுநருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் பக்கெட் லிஸ்டில் இருக்கும் கோவாவில், உள்ளூர் டாக்சி ஓட்டுநர்களின் அராஜகம் அதிகரித்து வருகிறது. ஜெர்மனியைச் சேர்ந்த பயண வீடியோ பதிவரான அலெக்ஸ் வெல்டர், தன் தோழியுடன் கோவாவின் பட்னெம் பகுதியில் பயணம் செய்ய முதலில் அங்கு இருக்கும் ஆட்டோவை நாடியுள்ளார்.

Taxi
Taxi

ஆட்டோ ஓட்டுநர் ரூ. 500 கட்டணம் கேட்ட நிலையில், 'கோவா மைல்ஸ்' செயலியில் அதே பயணத்திற்கு ரூ. 300 மட்டுமே காண்பித்துள்ளது .

இதனால், அலெக்ஸ் செயலி மூலமாக காரை முன்பதிவு செய்துள்ளார். இதனையறிந்த உள்ளூர் டாக்சி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆத்திரமடைந்து சுற்றுலா பயணி பயணித்த காரைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.

உள்ளூர் ஓட்டுநர்கள் தங்களை வீடியோ எடுப்பதாகக் கூறி, கோவா மைல்ஸ் ஓட்டுநர் தனது காரின் நம்பர் பிளேட்டை மறைக்குமாறு அலெக்ஸிடம் கெஞ்சியுள்ளார். இந்தச் சூழல் தங்களுக்கு மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக அலெக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

சிறிது தூரம் சென்றதும், காவல்துறையினர் அந்தக் காரை மறித்து கோவா மைல்ஸ் ஓட்டுநருக்கு ரூ. 500 அபராதம் விதித்திருக்கிறது. என்ன நடக்கிறது என்று புரியாத நிலையில், அந்த அபராதத் தொகையை அலெக்ஸே செலுத்தியுள்ளார்.

கோவாவில் இதுபோன்று நடப்பது முதல் முறையல்ல. கடந்த அக்டோபர் மாதம் மும்பையைச் சேர்ந்த ஷ்ரேயா அகர்வால் என்ற பெண், உள்ளூர் ஓட்டுநர்களின் அச்சுறுத்தல் காரணமாக தான் தங்கியிருந்த ரிசார்ட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் தனது உடமைகளைத் தெருவில் இழுத்துச் சென்ற அவலம் நிகழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஸ்கூட்டர் ரூ.1 லட்சம்; அபராதம் ரூ.21 லட்சம்! என்ன நடந்தது?

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டிய இளைஞர் ஒருவருக்கு, போக்குவரத்து போலீசார் ரூ.20.74 லட்சம் அபராதம் விதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்கூட்டரி... மேலும் பார்க்க

`பிக் பாஸ்' பார்த்துக்கொண்டே ஹைவேஸில் ஆம்னி பஸ் ஓட்டிய டிரைவர், பணிநீக்கம் - பின்னணி என்ன?

மும்பையிலிருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் ஓட்டுநர், பேருந்தை ஓட்டிக்கொண்டே தனது மொபைல் போனில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைப் பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.கட... மேலும் பார்க்க

``ட்ரோன் மூலம் வீட்டை கண்காணிக்கிறார்கள்; ஜன்னல் வரை வந்தது வெட்கக்கேடு'' - ஆதித்ய தாக்கரே புகார்

மும்பையில் உள்ள உத்தவ் தாக்கரே இல்லமான ‘மாதோஸ்ரீ’ பங்களா எப்போதும் பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்து வருகிறது. மறைந்த பால்தாக்கரே உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால், அவர் காலத்திலிருந்தே இந்த பாதுகாப்ப... மேலும் பார்க்க

``பெங்களூருர் விமான நிலையத்தில் தொழுகை; முதல்வர் சித்தராமையா எப்படி அனுமதித்தார்?'' - பாஜக கேள்வி

பெங்களூரு விமான நிலையத்தில் நமாஸ் செய்த காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஹஜ் செல்லும் பயணிகள் பெங்களூரு விமான நிலையத்தில் கூடியிருந்தனர். அவர்கள் ஹஜ் செல்வதற்கு முன்பு திடீரென 2ஆம் நம்ப... மேலும் பார்க்க

ஐஸ்லாந்தில் முதல் முறையாக கொசுக்கள் கண்டுபிடிப்பு : எப்படி நாட்டினுள் வந்தது?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சர்வதேச சமையல் கலைத் திறன் போட்டி; 'சென்னைஸ் அமிர்தா' மாணவர்கள் 26 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை!

உலக சமையல் கலை வல்லுனர்கள் சங்கத்தின் சார்பில் இந்தியாவில் முதல்முறையாக நடந்த 'சர்வதேச சமையல் கலைத் திறன் போட்டி'யில் 'சென்னைஸ் அமிர்தா' மாணவர்கள் 26 தங்கப்பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்திருக்... மேலும் பார்க்க