செய்திகள் :

``பெங்களூருர் விமான நிலையத்தில் தொழுகை; முதல்வர் சித்தராமையா எப்படி அனுமதித்தார்?'' - பாஜக கேள்வி

post image

பெங்களூரு விமான நிலையத்தில் நமாஸ் செய்த காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஹஜ் செல்லும் பயணிகள் பெங்களூரு விமான நிலையத்தில் கூடியிருந்தனர். அவர்கள் ஹஜ் செல்வதற்கு முன்பு திடீரென 2ஆம் நம்பர் டெர்மினல் வளாகத்தில் நமாஸ் செய்யத் தொடங்கினர்.

அவர்கள் விமான நிலையத்திற்குள் நமாஸ் செய்ததை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

அதனை பார்த்த பலரும், விமான நிலையத்திற்குள் இவ்வாறு வழிபாடு நடத்தியது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து விமான நிலைய நிர்வாகம் இதுவரை எந்த விளக்கமும் வழங்கவில்லை.

இது குறித்து பா.ஜ.க. மாநில அரசை கேள்வி எழுப்பியுள்ளது. மாநில பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் விஜய் பிரசாத் தனது ட்விட்டர் பக்கத்தில், விமான நிலையத்திற்குள் நமாஸ் செய்த வீடியோவை வெளியிட்டு, “எப்படி பெங்களூரு விமான நிலையத்திற்குள் நமாஸ் செய்ய முதல்வர் சித்தராமையா அனுமதித்தார்?” என்று கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.

அதோடு, விமான நிலையத்திற்குள் தடை செய்யப்பட்ட பகுதியில் நமாஸ் செய்ய அவர்கள் ஏற்கனவே முன் அனுமதி பெற்றார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். முன் அனுமதி பெற்ற பிறகும் பாதயாத்திரை நடத்த தடை விதித்த அரசு, இப்போது தடை செய்யப்பட்ட பகுதியில் நமாஸ் செய்வதை கண்மூடி பார்த்துக்கொண்டிருக்கிறது. இது போன்ற செயல் பாதுகாப்பு அச்சுறுத்தலாகும். அதோடு, இது அரசின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விமான நிலையம் தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் செயல்பட்டு வருகிறது. பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பணியாற்றி வருகின்றனர்.

``ட்ரோன் மூலம் வீட்டை கண்காணிக்கிறார்கள்; ஜன்னல் வரை வந்தது வெட்கக்கேடு'' - ஆதித்ய தாக்கரே புகார்

மும்பையில் உள்ள உத்தவ் தாக்கரே இல்லமான ‘மாதோஸ்ரீ’ பங்களா எப்போதும் பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்து வருகிறது. மறைந்த பால்தாக்கரே உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால், அவர் காலத்திலிருந்தே இந்த பாதுகாப்ப... மேலும் பார்க்க

ஐஸ்லாந்தில் முதல் முறையாக கொசுக்கள் கண்டுபிடிப்பு : எப்படி நாட்டினுள் வந்தது?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சர்வதேச சமையல் கலைத் திறன் போட்டி; 'சென்னைஸ் அமிர்தா' மாணவர்கள் 26 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை!

உலக சமையல் கலை வல்லுனர்கள் சங்கத்தின் சார்பில் இந்தியாவில் முதல்முறையாக நடந்த 'சர்வதேச சமையல் கலைத் திறன் போட்டி'யில் 'சென்னைஸ் அமிர்தா' மாணவர்கள் 26 தங்கப்பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்திருக்... மேலும் பார்க்க

GRT ஜுவல்லர்ஸ்: சங்கர நேத்ராலயா மற்றும் புற்றுநோய் நிறுவனத்திற்கு ரூ.50 லட்சம் உதவி

இந்தியாவின் முன்னணி நகை நிறுவனங்களில் ஒன்றான ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ், உண்மையான வெற்றி என்பது வணிகத்தைத் தாண்டி மதிப்பை உருவாக்குவதில் இருக்கிறது என்று நம்புகிறது. இந்த நிறுவனம் பல தசாப்தங்களாக, மக்களின்... மேலும் பார்க்க

`மகளைப் பராமரிக்க ரூ.4 லட்சம் போதவில்லை' - ஹசின் ஜஹன் கோர்டில் மனு

கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கும், அவரின் மனைவி ஹசின் ஜஹன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீண்ட காலம் சட்ட போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை, கொலைமிரட்டல் என ஷமி மீது ஜ... மேலும் பார்க்க

தெலங்கானா: "எறும்புகளோடு வாழ முடியாது" - எறும்புகள் மீதான பயத்தால் தற்கொலை செய்த பெண்

எறும்பைப் பார்த்தாலே சிலருக்குப் பயமாக இருக்கும். அப்படிப்பட்டவர்களை Myrmecophobia என்ற நோயால் பாதித்து இருப்பதாகக் கூறுவதுண்டு. தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள அமீன்பூர் என்ற இடத்தில்... மேலும் பார்க்க