"ஹிட்லர்தான் எனது உத்வேகம்" - சர்ச்சையான தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேச்ச...
உத்தரபிரதேசம்: நீதிமன்றத்தில் தனது மாமியாரை திருமணம் செய்து கொண்ட மருமகன்!
உத்தரப்பிரதேசத்தில் பெண் ஒருவர் தனது சொந்த மருமகனையே திருமணம் செய்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறார். கான்பூர் அருகில் அக்பர்பூர் என்ற இடத்தை சேர்ந்த நிஷா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் தனது சொந்த மருமகனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இருவரும் அங்குள்ள கோர்ட்டில் தங்களது திருமணத்தை முறைப்படி பதிவு செய்து கொண்டுள்ளனர். அவர்கள் இருவரும் சேர்ந்து தங்களது திருமண சான்றுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் காணொலி சமூக ஊடகத்தில் பரவி வருகிறது.

புதுமணத் தம்பதியினர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களது உறவை ஏற்றுக்கொண்டு எங்களை ஆசிர்வதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். இருவரும் நீண்ட காலமாக நெருங்கிய தொடர்பில் இருந்ததாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் குடும்ப உறுப்பினர்களையும் அப்பகுதி மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இச்செய்தி சமூக ஊடகத்தில் வெளியானவுடன் அது வைரலாக பரவியது.
சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் சிலர் இது அவர்களது தனிப்பட்ட விருப்பம் என்று தெரிவித்துள்ளனர். மற்ற சிலர் சமூக தாக்கங்கள் குறித்து கேள்வி எழுப்பி இருக்கின்றனர். இத்திருமணம் குறித்து இது வரை போலீஸில் புகார் செய்யப்படவில்லை. அதேசமயம் இந்த செய்தி அதிகாரப்பூர்வமாகவும் உறுதிபடுத்தப்படவில்லை. அதிகாரிகள் மட்டத்திலும் இது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இப்போது தாயும், மகளும் ஒரே வீட்டில் வசிக்கப்போகிறார்களா அல்லது தனித்தனியாக வசிக்கப்போகிறார்களா என்பது அனைவரின் கேள்வியாக இருக்கிறாதாம்.!



















