செய்திகள் :

`வேகத்தை யோசிக்கவில்லை, லென்த் மட்டுமே குறி!' - பௌலிங் சீக்ரெட்டை உடைத்த வாஷிங்டன் சுந்தர்!

post image

பந்துவீச்சில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் அசத்தி, தனது ஆல்-ரவுண்டர் திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக களமிறங்கியக் போட்டியில், தனது சிறப்பான ஆட்டத்திற்கான ரகசியம் என்ன என்பதைப் பற்றி அவர் பேசியுள்ளார். வேகத்தைக் காட்டிலும், சரியான ரிதம் மற்றும் லென்த்தில் கவனம் செலுத்தியதே தனது வெற்றிக்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரிதம்தான் முக்கியம், வேகம் அல்ல!

போட்டிக்குப் பிறகு தனது பந்துவீச்சு குறித்துப் பேசிய சுந்தர், "நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த ஃபார்மெட்டில் விளையாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. முதல் பந்திலிருந்தே எனக்கு சரியான ரிதம் கிடைத்தது போல உணர்ந்தேன். அது ஒரு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தது.

நான் மெதுவாக பந்துவீச முயற்சித்தீர்களா என்று கேட்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. நான் வேகத்தைப் பற்றி பெரிதாக யோசிக்கவே இல்லை. எனது ரிதத்தை சரியாகப் பெறுவதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தினேன். முந்தைய நாள் பயிற்சியின் போதே பந்து என் கையிலிருந்து மிகச் சரியாக வெளியேறியது. இந்தப் போட்டியிலும் அதனை தொடர விரும்பினேன், அதிர்ஷ்டவசமாக அது நடந்தது" என்றார்.

ஸ்லோ விக்கெட்... லெங்த்தான் கேம் சேஞ்சர்!

ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப தனது பந்துவீச்சு முறையை மாற்றியமைத்தது பற்றியும் சுந்தர் பேசினார். "இந்த ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக (slow) இருந்தது. அதனால், சரியான லென்த்தில் பந்துவீசுவது மிகவும் அவசியமாக இருந்தது.

நீங்கள் ஒரு குட் லென்த்திலோ அல்லது கொஞ்சம் பேக் ஆஃப் லெங்த்திலோ வீசினால், பேட்ஸ்மேன்களுக்கு பேக் ஃபூட்டில் சென்று பந்தை எதிர்கொள்ள போதுமான நேரம் கிடைத்துவிடும். அதனால், இந்த விக்கெட்டில் லென்த்தை மிகத் துல்லியமாகப் பிடிப்பது சவாலாகவும், முக்கியமாகவும் இருந்தது. எனது அடிப்படைகளை சரியாக வைத்துக்கொண்டு, ஸ்டம்ப்ஸை ஒட்டி பந்துவீசினேன். ஆட்டத்தின் இறுதிப் பகுதியில் மட்டும் கொஞ்சம் வேகமாக வீச முயற்சித்தேன்" என்று தனது வியூகத்தை வெளிப்படுத்தினார்.

பேட்டிங்கிலும் அரைசதம்... டி.ஆர்.எஸ் தவறுகள் சகஜம்!

பந்துவீச்சில் மட்டுமல்லாது, பேட்டிங்கிலும் அரைசதம் கடந்து அசத்தினார் சுந்தர். இதுபற்றிப் பேசுகையில், "பந்து மற்றும் பேட் இரண்டிலுமே சிறப்பாகச் செயல்பட்டது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. பேட்டிங்கில் ஒரு நல்ல ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க விரும்பினேன். அந்த இன்னிங்ஸை நான் அணுகிய விதம் திருப்தியளிக்கிறது" என்றார். மேலும், போட்டியின்போது எடுக்கப்பட்ட சில தவறான டி.ஆர்.எஸ் முடிவுகள் குறித்த கேள்விக்கு, "அது விளையாட்டின் ஒரு அங்கம். எங்களது கடந்த கால அனுபவங்கள் மற்றும் அந்த நேரத்தில் எங்களது உள்ளுணர்வு சொல்வதை வைத்து முடிவெடுக்கிறோம். தொழில்நுட்பத்தை எங்களால் முடிந்தவரை சிறப்பாகப் பயன்படுத்த முயற்சிக்கிறோம். சில நேரங்களில் அது சரியாக அமையாது, அதுவும் ஒரு அனுபவம்தான்" என்று நிதானமாகப் பதிலளித்தார்.

Manav Suthar: `ஸ்லோ விக்கெட்... சிம்பிள் பிளான்!' - பந்துவீச்சு ரகசியம் பகிரும் `அறிமுக' ஆட்ட நாயகன்

அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது... தனது முதல் போட்டியிலேயே அழுத்தமான முத்திரையைப் பதித்திருக்கிறார் இளம் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மனவ் சுதர். டெஸ்ட் கிரிக்கெட் சுலபமானதா என்ற கேள்விக்க... மேலும் பார்க்க

இந்தியாவின் `ஆல்ரவுண்ட்' ஆட்டம்! இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க முடியாமல் சரணடைந்த ஆப்கானிஸ்தான்!

பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தனது முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்திய இந்திய அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவு செய்... மேலும் பார்க்க

"அவர் ஒரு மூத்த அண்ணனைப் போல என்னிடம் பேசினார், என் கனவு.!"- விராட் கோலி குறித்து வைபவ் சூர்யவன்ஷி

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி ப்ளே ஆஃப் சுற்றில் தோல்வியடைந்திருந்தாலும் அந்த அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். 15 வயதான சூர்யவன... மேலும் பார்க்க

IPL: "இரண்டு அணிகளைத் தவிர மற்ற அணிகள் என்னை ஏலம் கேட்கவில்லை, ஏன் என.!"- வைபவ் சூர்யவன்ஷி

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி ப்ளே ஆஃப் சுற்றில் தோல்வியடைந்திருந்தாலும் அந்த அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். 15 வயதான சூர்யவன... மேலும் பார்க்க

"நான் யாருடைய நிழலிலும் இருக்க விரும்பவில்லை"- கேப்டன் பொறுப்பு குறித்து ஸ்ரேயஸ் ஐயர்

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இங்கிலாந்து, அயர்லாந்து தொடர்களில் இந்திய அணியை வழிநடத்த இருக்கும் ஸ்ரேயஸ் ஐயர் தனது புதிய பொறுப்பு குறித்து மனம் ... மேலும் பார்க்க

INDvAFG: சதமடித்து மிரட்டிய கில், ராகுல்; சாய், பண்ட் அரைசதம்! - முதல் நாளில் இந்தியா ஆதிக்கம்

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், இந்திய அணி பேட்ஸ்மேன்களின் அபார ஆதிக்கத்தால் வலுவான நிலையில் உள்ளது. தொடக்க வீரர் கே.எல். ராகுல் மற்றும் கேப்டன் ஷுப்மன் க... மேலும் பார்க்க