செய்திகள் :

'கள்ள ஓட்டில் வென்றவர்கள் எஸ்.ஐ.ஆரை எதிர்க்கிறார்கள்' - வானதி சீனிவாசன்

post image

கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சட்டமன்றத் தேர்தலுக்காக மகளிரணியை தயார்ப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் பாஜக மகளிரணி மாநில மாநாடு திருச்சியில் நடைபெறவுள்ளது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

வானதி சீனிவாசன்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. திராவிட மாடல் பெண்களுக்கு துரோகம் செய்யும் அரசாக உள்ளது. இதனை வீடு வீடாக எடுத்து செல்லும் பணியை செய்வோம்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை,  அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு பெரியளவு இருக்கிறது. அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், இந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நீதிபதிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். இந்து மத வழிபாட்டு உரிமைகளை மதிக்க வேண்டுமா.. இல்லையா.

திருப்பரங்குன்ற கார்த்திகை தீபம் விவகாரம்
திருப்பரங்குன்றம்

இந்து சமய அறநிலையத்துறை தான் பிரச்னை செய்கிறது. கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று கேட்டால், பணம் கொடுங்கள் அப்போது தான் நடத்த முடியும் என்று அதிகாரிகள் சொல்லும் நிலை நிலவுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. நல்லுறவு நீடிக்கிறது. இட ஒதுக்கீடு முறையில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கிறது. வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். அதனால் அந்த விவகாரத்தில் அவர் உறுதியாக இருக்கிறார்.

SIR - சிறப்பு தீவிர திருத்தம்
SIR - சிறப்பு தீவிர திருத்தம்

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி பதற்றமாக உள்ளார். கள்ள ஓட்டினால் வெற்றி பெற்ற கட்சிகள் அனைத்துமே எஸ்ஐஆர் நடவடிக்கையை எதிர்க்கிறார்கள்.” என்றார்.  

`3 மாத வாடகை; 7 நாளில் வீட்டை காலி செய்ய வேண்டும்’ - தாராவி செக்டர் 1 குடிசைவாசிகளுக்கு உத்தரவு

மும்பை தாராவியில் உள்ள குடிசைகள்தான் ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசையாக கருதப்படுகிறது. அக்குடிசைகளை இடித்துவிட்டு அங்கு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டும் பணி அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அ... மேலும் பார்க்க

பெரும் பணத்துடன் ஷிண்டே அணிக்கு தாவிய சிவசேனா எம்.எல்.ஏ.க்கள்? - வெளியாகும் வீடியோவின் பின்னணி!

மகாராஷ்டிராவில் கடந்த 2023-ம் ஆண்டு சிவசேனா இரண்டாக உடைந்தது. பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு சென்றதையடுத்து ஏக்நாத் ஷிண்டே அணி உண்மையான சிவசேனா என்று தேர்த... மேலும் பார்க்க

புதுச்சேரி: `ரோடு ஷோவுக்கு `நோ’ சொன்ன டி.ஐ.ஜி!' - புதுச்சேரி மக்கள் பாராட்டும் சத்தியசுந்தரம் யார்?

கரூர் துயர சம்பவம் நடைபெற்று இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், தங்களை தலைவர் விஜய்யை வைத்து மக்கள் சந்திப்பை நடத்த முடிவெடுத்தது த.வெ.க. ஆனால் தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், அந்த நிகழ்ச்சியை ப... மேலும் பார்க்க

"சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தவதில் அரசுக்கு என்ன சிக்கல்?" - பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி!

தமிழ்நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று பாமக அறப்போராட்டத்தை நடத்தி வருகிறது. சென்னையில் பாமக ச... மேலும் பார்க்க

ஈரோடு: `தவெக விஜய் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கிடைக்குமா? இல்லையா?' - எதிர்பார்ப்பில் தொண்டர்கள்

அதிமுகவில் ஏற்பட்ட முரண்பாட்டால் அக்கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட மூத்த நிர்வாகி செங்கோட்டையன், தவெகவில் அண்மையில் இணைந்தார்.தவெகவில் அவருக்கு கட்சியின் தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் ப... மேலும் பார்க்க

தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது! - என்ன நடந்தது?

தனியார்மயமாக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் தொடர்ந்து போராடி வரும் தூய்மைப் பணியாளர்கள், இன்று கலைஞர் சமாதி முன்பாகவும் தலைமைச் செயலகம் முன்பாகவும் போராடி காவல்துறையால் குண்டுக்கட்டாக கைது ச... மேலும் பார்க்க