செய்திகள் :

தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது! - என்ன நடந்தது?

post image

தனியார்மயமாக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் தொடர்ந்து போராடி வரும் தூய்மைப் பணியாளர்கள், இன்று கலைஞர் சமாதி முன்பாகவும் தலைமைச் செயலகம் முன்பாகவும் போராடி காவல்துறையால் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

மண்டலங்கள் 5 மற்றும் 6 இரண்டிலும் தூய்மைப் பணியை சென்னை மாநகராட்சி தனியாருக்கு ஒப்பந்தமாக வழங்கியிருக்கிறது. இதை எதிர்த்து தாங்கள் பழைய நிலையிலேயே மாநகராட்சியின் கீழே தொடர வேண்டுமென தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் போராடி வருகின்றனர்.

ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ரிப்பன் பில்டிங்கின் முன்பு போராடிய தூய்மைப் பணியாளர்களை ஆகஸ்ட் 13 ஆம் தேதி நள்ளிரவில் காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர். அதன்பிறகு, சென்னை அல்லிக்குளம், உழைப்பாளர் சிலை, ஆட்சியர் அலுவலகம், எழும்பூர் பெரியார் மணியம்மை சிலை உட்பட பல இடங்களில் தொடர் போராட்டங்களை நடத்தி கைதாகினர்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

போராட்டம் 100 நாட்களை கடந்த நிலையில், உயர்நீதிமன்ற அனுமதியோடு அம்பத்தூரில் உண்ணாநிலை போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு கலைஞர் சமாதி முன்பும், மதியம் 1 மணியளவில் தலைமைச் செயலகம் முன்பும் கூடி போராட முயன்றனர்.

தனியார்மயமாக்கலை எதிர்த்து கோஷம் போட்டு கோரிக்கைகளை முன்வைத்த அவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக பேருந்துகளில் ஏற்றி கைது செய்தனர்.

`3 மாத வாடகை; 7 நாளில் வீட்டை காலி செய்ய வேண்டும்’ - தாராவி செக்டர் 1 குடிசைவாசிகளுக்கு உத்தரவு

மும்பை தாராவியில் உள்ள குடிசைகள்தான் ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசையாக கருதப்படுகிறது. அக்குடிசைகளை இடித்துவிட்டு அங்கு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டும் பணி அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அ... மேலும் பார்க்க

பெரும் பணத்துடன் ஷிண்டே அணிக்கு தாவிய சிவசேனா எம்.எல்.ஏ.க்கள்? - வெளியாகும் வீடியோவின் பின்னணி!

மகாராஷ்டிராவில் கடந்த 2023-ம் ஆண்டு சிவசேனா இரண்டாக உடைந்தது. பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு சென்றதையடுத்து ஏக்நாத் ஷிண்டே அணி உண்மையான சிவசேனா என்று தேர்த... மேலும் பார்க்க

புதுச்சேரி: `ரோடு ஷோவுக்கு `நோ’ சொன்ன டி.ஐ.ஜி!' - புதுச்சேரி மக்கள் பாராட்டும் சத்தியசுந்தரம் யார்?

கரூர் துயர சம்பவம் நடைபெற்று இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், தங்களை தலைவர் விஜய்யை வைத்து மக்கள் சந்திப்பை நடத்த முடிவெடுத்தது த.வெ.க. ஆனால் தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், அந்த நிகழ்ச்சியை ப... மேலும் பார்க்க

"சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தவதில் அரசுக்கு என்ன சிக்கல்?" - பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி!

தமிழ்நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று பாமக அறப்போராட்டத்தை நடத்தி வருகிறது. சென்னையில் பாமக ச... மேலும் பார்க்க

ஈரோடு: `தவெக விஜய் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கிடைக்குமா? இல்லையா?' - எதிர்பார்ப்பில் தொண்டர்கள்

அதிமுகவில் ஏற்பட்ட முரண்பாட்டால் அக்கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட மூத்த நிர்வாகி செங்கோட்டையன், தவெகவில் அண்மையில் இணைந்தார்.தவெகவில் அவருக்கு கட்சியின் தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் ப... மேலும் பார்க்க

`பீகாரால் முடியாமல் போகலாம்; ஆனால் மேற்கு வங்க மக்களால் முடியும்’ - பாஜக-வை சாடிய மம்தா

இன்னும் சில மாதங்களில் தமிழ்நாடு, மேற்கு வங்கம் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தம... மேலும் பார்க்க