செய்திகள் :

`பீகாரால் முடியாமல் போகலாம்; ஆனால் மேற்கு வங்க மக்களால் முடியும்’ - பாஜக-வை சாடிய மம்தா

post image

இன்னும் சில மாதங்களில் தமிழ்நாடு, மேற்கு வங்கம் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று (11-ம் தேதி) மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாங்கரில் நடந்த பொதுகூட்டத்தில், உரையாற்றிய முதல்வர் மம்தா பானர்ஜி, ``SIR என்ற பெயரில் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் உரிமைகளைப் பறிப்பீர்களா? தேர்தலின் போது டெல்லியில் இருந்து போலீஸை அழைத்து வந்து தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை மிரட்டுவார்கள்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

தாய்மார்களே, சகோதரிகளே, உங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டால், உங்களிடம் சமையலுக்குப் பயன்படுத்தும் கருவிகள் இல்லையா... உங்களிடம் வலிமை இல்லையா... உங்கள் பெயர்கள் நீக்கப்பட்டால் அதை நீங்கள் கடந்து செல்லமாட்டீர்கள் தானே? அந்தப் போராட்டத்தில் பெண்கள் முன்னணியில் நின்று போராடுவார்கள். ஆண்கள் அவர்களுக்குப் பின்னால் நிற்பார்கள்.

நான் வகுப்புவாதத்தில் நம்பிக்கை கொண்டவள் அல்ல. மதச்சார்பின்மையை நம்புகிறேன். தேர்தல் நெருங்கும் போதெல்லாம், பா.ஜ.க பணத்தைப் பயன்படுத்தி மற்ற மாநிலங்களிலிருந்து மக்களை அழைத்து வந்து பொதுமக்களிடம் பிளவு ஏற்படுத்த முயற்சிக்கிறது.

நீங்கள் எங்களைத் தாக்கினால், பதிலடி எப்படி கொடுப்பது என்பதும் எங்களுக்குத் தெரியும். அநீதியை எப்படி தடுத்து நிறுத்துவது என்பதும் எங்களுக்குத் தெரியும். நினைவில் கொள்ளுங்கள், பீகாரால் முடியாமல் போகலாம். ஆனால் நீங்கள் என்ன செய்தாலும் அதை முறியடிக்க எங்கள் மேற்கு வங்க மக்களால் முடியும்," என்று அவர் மேலும் கூறினார்.

`3 மாத வாடகை; 7 நாளில் வீட்டை காலி செய்ய வேண்டும்’ - தாராவி செக்டர் 1 குடிசைவாசிகளுக்கு உத்தரவு

மும்பை தாராவியில் உள்ள குடிசைகள்தான் ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசையாக கருதப்படுகிறது. அக்குடிசைகளை இடித்துவிட்டு அங்கு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டும் பணி அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அ... மேலும் பார்க்க

பெரும் பணத்துடன் ஷிண்டே அணிக்கு தாவிய சிவசேனா எம்.எல்.ஏ.க்கள்? - வெளியாகும் வீடியோவின் பின்னணி!

மகாராஷ்டிராவில் கடந்த 2023-ம் ஆண்டு சிவசேனா இரண்டாக உடைந்தது. பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு சென்றதையடுத்து ஏக்நாத் ஷிண்டே அணி உண்மையான சிவசேனா என்று தேர்த... மேலும் பார்க்க

புதுச்சேரி: `ரோடு ஷோவுக்கு `நோ’ சொன்ன டி.ஐ.ஜி!' - புதுச்சேரி மக்கள் பாராட்டும் சத்தியசுந்தரம் யார்?

கரூர் துயர சம்பவம் நடைபெற்று இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், தங்களை தலைவர் விஜய்யை வைத்து மக்கள் சந்திப்பை நடத்த முடிவெடுத்தது த.வெ.க. ஆனால் தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், அந்த நிகழ்ச்சியை ப... மேலும் பார்க்க

"சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தவதில் அரசுக்கு என்ன சிக்கல்?" - பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி!

தமிழ்நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று பாமக அறப்போராட்டத்தை நடத்தி வருகிறது. சென்னையில் பாமக ச... மேலும் பார்க்க

ஈரோடு: `தவெக விஜய் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கிடைக்குமா? இல்லையா?' - எதிர்பார்ப்பில் தொண்டர்கள்

அதிமுகவில் ஏற்பட்ட முரண்பாட்டால் அக்கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட மூத்த நிர்வாகி செங்கோட்டையன், தவெகவில் அண்மையில் இணைந்தார்.தவெகவில் அவருக்கு கட்சியின் தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் ப... மேலும் பார்க்க

தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது! - என்ன நடந்தது?

தனியார்மயமாக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் தொடர்ந்து போராடி வரும் தூய்மைப் பணியாளர்கள், இன்று கலைஞர் சமாதி முன்பாகவும் தலைமைச் செயலகம் முன்பாகவும் போராடி காவல்துறையால் குண்டுக்கட்டாக கைது ச... மேலும் பார்க்க