செய்திகள் :

"கோவை மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு; திமுக செய்த தவறு..." - எடப்பாடி பழனிசாமி

post image

 மதுரை மற்றும் கோவை மாவட்டங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்திருக்கிறது. இதற்கு கோவை மற்றும் மதுரையில் போதுமான மக்கள் தொகை இல்லாதது காரணமாக கூறப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 20 லட்சம் மக்கள்தொகை இருந்தால் மட்டுமே மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த அனுமதிக்கப்படும் என்று விதிகள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதற்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாஜக-வினர் 2026ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக - அதிமுக ஆட்சி அமைத்தால் மதுரை மற்றும் கோவைக்கு மெட்ரோ திட்டத்தைத் கொண்டு வருவோம் என்று கூறி வருகின்றனர்.

 மெட்ரோ
மெட்ரோ

இந்நிலையில் கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்பட்டதற்கு தமிழக அரசின் கவனக்குறைவே காரணம் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். மேகதாது விவகாரம் குறித்துப் பேசியிருக்கிறார்.

இது குறித்துப் பேசியிருக்கும் எடப்பாடி பழனிசாமி, "மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு எந்த உரிமையும் இல்லை. மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாடு பாலைவனமாகிவிடும், இதனால் மேகதாது அணை கட்ட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி தான் கர்நாடகாவில் ஆட்சி செய்கிறது. இதனால் ராகுல் காந்தி, சோனியா காந்தியிடம் பேசி பிரச்னையை தீர்க்கலாம்.

எடப்பாடி பழனிசாமி

அதேபோல் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை தமிழக அரசு கவனக்குறைவாக அனுப்பி இருக்கிறது. மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை சமர்பிக்கும் போது, 2011 மக்கள் தொகையை திமுக குறிப்பிட்டது ஏன்? 2025ஆம் ஆண்டு மக்கள் தொகையை கணக்கிட்டிருந்தால், ஒப்புதல் கிடைத்திருக்கும். 2021ல் திமுக ஆட்சிக்கு வந்தபின், மெட்ரோ ரயில் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டார்கள்.

கோவை, மதுரை திட்டத்தில் மாநில அரசு விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு மோசமாக உள்ளது. ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவியை கொலை செய்யும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. அதற்கு காரணமே நிரந்தர டிஜிபியை நியமிக்காதது தான். நிரந்தர டிஜிபியை நியமிக்காமல் தமிழக அரசு கும்பகர்ணன் போல் தூங்கிக் கொண்டிருக்கிறது" என்று திமுகவைக் கண்டித்துப் பேசியிருக்கிறார்.

திண்டுக்கல்: அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் வீட்டில் ரெய்டு!

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராணி, திண்டுக்கல் வள்ளலார் நகரில் வசித்து வருகிறார். இன்று மதியம் அவரது வீட்டிற்கு வந்த ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ( Directorate General... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: `எப்டி ஓட்டுனாலும் ரோட்ல விழுறது சாதாரணமாகிடுச்சி’ - பழையபாளையம் சாலையின் அவலம்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையபாளையம் ஊராட்சியில், கொடாக்காரமூலை முதல் பழையபாளையம் வரை செல்லும் சாலையானது சுமார் 1.5கி.மீ வரை ஐந்து வருடங்களாக குண்டும் குழியுமாக காட்சியளிப்பதோடு மட்டுமல்லா... மேலும் பார்க்க

ஏழை முதியவர் ரூ.1.14 கோடி; பந்தல் தொழிலாளி ரூ.5 கோடி வரி பாக்கி - அதிர வைத்த GST நோட்டீஸ்!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி திருமாஞ்சோலை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. பந்தல் அமைக்கும் தொழில் செய்து வரும் ராமமூர்த்தியின் பெயரில் ரூ.5 கோடி ஜி.எஸ்.டி வரி பாக்கி இருப்பதாக நோட்டீஸ்... மேலும் பார்க்க

"திமுக தொழில்த்துறை முதலீடுகளில் ஊழல் பொய்" - பாமக அன்புமணி அடுக்கும் குற்றச்சாட்டுகள்

திமுக தலைமையிலான தமிழக அரசு, தொழில்துறை முதலீடுகளில் தொடர்ந்து ஊழலும், பொய்யான அறிவிப்புகளை அறிவித்து வருவதாக பாட்டளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகி... மேலும் பார்க்க

'விஜய் விமர்சனம் இனி வேண்டாம்' - திடீரென முடிவெடுத்த சீமான்? பின்னணி என்ன?

தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில மாநாட்டுக்குப் பிறகு விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்துவந்த சீமான், இனி விஜய் மீதான விமர்சனங்களை குறைத்துக் கொள்ள முடிவெடுத்திருப்பதாக கூறுகிறார்கள் உட்கட்சி விவரம் அறிந்... மேலும் பார்க்க

"S.I.R என்பது குடியுரிமை, எதிர் வாக்குகளை நீக்கும் பாஜகவின் செயல்திட்டம்" - திருமா

'S.I.R' எனும் சிறப்புத் தீவிரத் திருத்தம் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு செயல்படுத்தப்படுவதை எதிர்த்து திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சிகளால் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன... மேலும் பார்க்க